Skip to main content

கனவுக்கன்னிகளான வேலைக்காரிகள்!  பழைய ரீல் #4

Published on 09/07/2018 | Edited on 09/07/2018

அந்தக் கால கதாநாயகி எஸ்.பி.எல்.தனலட்சுமி 1930-40 காலகட்டத்தில் ‘கிருஷ்ணபக்தி’, ‘காளமேகம்’ உட்பட சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். பிரபல இயக்குநர் கே.சுப்பிரமணியம் தனது ‘கச்சதேவயானி’ படத்திற்கு தனலட்சுமியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய அவரின் வீட்டுக்குச் சென்றார்.

 

trr



தனலட்சுமி தனது வீட்டுப் பணிப்பெண்ணாக தன் அக்காள் மகள் ராஜாயி என்கிற இளம்பெண்ணை நியமித்திருந்தார். ராஜாயி காபி எடுத்துக்கொண்டு வந்து டைரக்டரிடம் கொடுத்துவிட்டுப் போனார். அந்தப் பணிப்பெண்ணையே வைத்த கண் வாங்காமல் பார்த்த டைரக்டர், தனலட்சுமியிடம் அந்த பணிப்பெண்ணைப் பற்றி விசாரித்துவிட்டுக் கிளம்பினார். தன் எண்ணத்தில் உருவான கச்சதேவயானி கேரக்டரை அப்படியே பிரதி எடுத்தாற்போல் இருப்பதாக உணர்ந்த டைரக்டர், அந்தப் பெண்ணையே கதாநாயகியாக தேர்வு செய்தார்.

 

 


'கறுப்பா இருக்கிற இந்தப் பெண்ணா கதாநாயகி?' என பலரும் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். ராஜாயிக்கு ஒப்பனை செய்ய மறுத்தார் மேக்-அப் மேன். ஆனால், பலத்த எதிர்ப்புகளையும் மீறி ராஜாயியை நாயகியாக்கினார் கே.சுப்பிரமணியம். படம் வெளியானது. தமிழ் சினிமாவில் ராஜாயியின் ராஜ்ஜியம் தொடங்கியது. மூன்று தீபாவளிக்கு தொடர்ந்து ஓடிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் ’ஹரிதாஸ்’ படத்தில் ‘மன்மதலீலையை வென்றார் உண்டோ?’ என பாகவதர் பாட, அந்தப் பாட்டுக்கு விழியால் வலைவீசி, நளினமான இடைநெளிப்போடு ராஜாயி ஆடிய நடனத்தை எப்போதும் மறக்கவே முடியாது.

  mkt trr



இப்போது கேரள சினிமாவில் பிரியா பிரகாஷ் வாரியர் செய்த துப்பாக்கி முத்தம் பரபரப்பானதுபோல் அந்தக் காலத்திலேயே ‘மன்மதலீலையை’ பாட்டில் உதட்டைச் சுழித்து ஒரு பறக்கும் முத்தம் ஏவுவார் பாகவதருக்கு. அந்தத் தாக்குதலில் தான் இன்ப அதிர்ச்சி ஆனதுபோல் பாகவதர் நெஞ்சில் கைவைப்பார். அந்தக் காட்சியில் பாகவதர் மட்டுமா இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்? படம் பார்த்த எல்லோரும்தான். 

கறுப்பாக இருந்தாலும், துறுதுறு கண்கள், சிலைபோல செதுக்கிய உடல்வாகு கொண்ட அவர் தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னியாக பெயர் பெற்றார். அழகாலும், நடிப்பாலும், கொஞ்சும் பேச்சாலும் ரசிகர்களுக்கு மோகப்பித்து பிடிக்கவைத்த அந்த அழகு ராஜாயி... சினிமா ரசிகர்களை ஆண்ட அழகு ராசாத்தி... டி.ஆர்.ராஜகுமாரி.

 

silk smitha



குடும்ப கஷ்டம் காரணமாக பிழைப்புத் தேடி சென்னை வந்த விஜயலட்சுமி, தன் உறவினர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். கறுப்பாக இருந்தாலும் பார்க்கிறவர்களை கிறங்கி, கீழே விழவைக்கிற போதை விழிகள் விஜயலட்சுமிக்கு. தான் எழுதிய கதைக்கு சாராயம் விற்கிற ஒரு தெனாவெட்டான அழகு கொண்ட கேரக்டரில் நடிக்க, ஏதேச்சையாக தான் சந்தித்த விஜயலட்சுமி பொருத்தமாக இருக்கவே, அவரை நடிகையாக அறிமுகப்படுத்த சிபாரிசு செய்தார் நடிகரும், கதாசிரியருமான வி்னுசக்கரவர்த்தி.

 

 


‘வண்டிச்சக்கரம்' படம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே, விஜயலட்சுமியின் போதையூட்டும் விழிகள் கேரளாவையும் கவர ‘இணையே தேடி’ படத்தில் நடிக்கவைத்தார்கள். முதலில் வெளியானது மலையாளப் படம். என்றாலும் ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் ஸ்மிதாவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு ‘சிலுக்கு’ என்கிற கேரக்டரில் அவரை திரையில் பார்த்த ரசிகர்கள் மது குடிக்காமலேயே போதைக்கு ஆளானார்கள். சிலுக்கு... ‘நேத்து ராத்திரி’ வரை அவர்தானே சினிமா ரசிகர்களை தன் கவர்ச்சியால் ஆண்டார்.

 

 

 

Next Story

பான் இந்தியா படமாக உருவாகும் சில்க் ஸ்மிதா பயோ-பிக்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

silk smitha biopic starring chandrika ravi update

 

சினிமாவில் காலம் கடந்து நிற்பவர்கள் பட்டியலில் நடிகை சில்க் ஸ்மிதாவும் ஒருவர். இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதற்கு உதாரணமாக மார்க் ஆண்டனி படத்தில் அவர் பெயரில் வரும் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பு. அந்தளவிற்கு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அவர், இளம் வயதிலேயே மறைந்தார். இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவின் 63வது பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய பதிவுகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், அவரது வாழ்க்கை கதையைத் தழுவி ஒரு படம் உருவாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை சந்திரிகா ரவி நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 

 

‘சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை ஜெயராம் என்பவர் இயக்க எஸ்.பி. விஜய் என்பவர் தயாரிக்கிறார்.  தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. ஏற்கனவே சில்க் ஸ்மிதா வாழ்க்கையைத் தழுவி இந்தியில் ‘தி டர்டி பிக்சர்’ என்ற தலைப்பில், கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

'நான் செத்துட்டா இறுதிச் சடங்கிற்கு நீ வருவியா'; சில்க் ஸ்மிதா கேட்ட கேள்வி; இறுதிச் சடங்குக்கு வந்த அந்த ஒரே நடிகர்

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

 'Will you come to the  my funeral die?'; asked Silk Smitha; He was the only actor who came to the funeral

 

தமிழ்த் திரைப்பட நடிகைகளில் மறக்க முடியாதவர்களில் ஒருவர் சில்க் ஸ்மிதா. இவர் நடித்த படங்களின் பாடல்கள் இன்றும் கொடி கட்டிப் பறக்கின்றன. தற்போதைய படங்களில் வரும் 'ஐட்டம் சாங்ஸ்' என்று சொல்லப்படும் வகையில் அந்தக் காலகட்டத்தில் எக்கச்சக்க பாடல்களில் ஆடி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா இருந்தால்தான் ஒரு பொழுதுபோக்குப் படம் முழுமையடையும் என்று சொல்லும் அளவுக்கு அவரை நடிக்க வைத்தனர் இயக்குநர்கள்.

 

அவரது கண்களைப் பார்த்தாலே ரசிகர்கள் கிறங்கிப் போவார்கள். மேலும் அவரது கவர்ந்திழுக்கும் வனப்பும், மாடர்ன் டிரஸ்களும் கூடுதல் ப்ளஸ் பாயிண்ட்டாகவே இருந்தது. இதுவே குறுகிய காலத்தில் அவர் உச்சத்திற்குச் செல்லக் காரணமாக இருந்தது. எப்படி சினிமாவின் உச்சத்திற்குக் குறுகிய காலத்தில் சென்றாரோ, அதேபோல் குறுகிய காலத்திலேயே மண்ணுலகையும் விட்டு விடை பெற்றார் ஸ்மிதா. . 

 

1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில் தமிழ்த் திரை உலகமே இந்தச் சம்பவத்தால் சோகத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கியது. அவருடைய தற்கொலை இன்று வரை மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர் தோட்டா பாவாநாராயணா என்பவர் நடிகை சில்க் ஸ்மிதா பற்றி ஒரு பேட்டியில் கூறுகையில், ''அவரின் இறுதிச் சடங்கிற்கு திரையுலகைச் சேர்ந்த யாரும் வராத நிலையில் ஒரே ஒரு நடிகர் மட்டும்தான் வந்திருந்தார். ஒரு படப்பிடிப்பின் போது நடிகை சில்க் ஸ்மிதா நடிகர் அர்ஜுனிடம் 'நான் இறந்து போனால் என்னுடைய இறுதி நிகழ்விற்கு நீ வருவியா' எனக் கேட்டுள்ளார். அதைக் கேட்ட அர்ஜுன், ‘ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. இதெல்லாம் என்ன பேச்சு' என சில்க் ஸ்மிதாவிடம் தெரிவித்துள்ளார். நாட்கள் செல்லச் செல்ல இந்த விஷயத்தை அர்ஜுன் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், சில நாட்கள் கழித்து சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அர்ஜுன் உடனடியாக அவருடைய இறுதிச்சடங்கிற்கு வந்ததோடு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்'' எனத் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் தோட்டா பாவாநாராயணா.