Skip to main content

‘எங்கள படிக்க வைப்பீங்களா சார்...?’ அழுத குழந்தைகளின் கல்விக்கு உதவிய காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள்- பண்ருட்டியில் நெகிழ்ச்சி!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

help

 

'எங்கள ஏதேனும் ஒரு பாதுகாப்பான விடுதியில் தங்கவைத்துப் படிக்க வைப்பீர்களா?' எனக் காவல் நிலையத்திற்குச் சென்று உதவிகேட்டுள்ள (பெற்றோரை இழந்து தவிக்கும்) இரு குழந்தைகளுக்குக் காவல்துறையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் உதவ முன்வந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் பண்ருட்டியில் நடந்துள்ளது.

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது மாளிகைமேடு. இந்த ஊரைச் சேர்ந்தவர் பாபு இவருடைய மனைவி லதா இவர்களுக்கு மூன்று பெண் குழந்தை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாபு, பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். சில மாதங்களிலேயே அவரது மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து போய்விட்டார். பெற்றோரை இழந்த மூன்று பெண் பிள்ளைகளும் வயது முதிர்ந்த அவர்கள் பாட்டி செந்தாமரை பராமரிப்பில் இருந்து வந்தனர்.


பாட்டி செந்தாமரை தள்ளாத வயது. குழந்தைகளுக்காக உழைத்துச் சாப்பாடு போட முடியாத முதுமையும் வறுமையும் வாட்டியது. இந்த வறுமை கொடுமையை அவர்களால் தாங்க முடியவில்லை. பசி பட்டினி கிடந்து பார்த்த மூத்த பெண்பிள்ளை பாட்டியிடம் கூடச் சொல்லிக்கொள்ளாமல் திடீரென்று எங்கோ புறப்பட்டுச் சென்றுவிட்டார். அதன்பிறகு இரு பிள்ளைகளோடு ஜீவா (9-ஆம் வகுப்பு மாணவி), தர்ஷ்னி (6-ஆம் வகுப்பு) செந்தாமரை வறுமையின் கொடுமையில் போராடி வந்துள்ளார். குடிசையில் அந்த மூன்று ஜீவன்களும் தத்தளித்தனர். 


இந்நிலையில் இரு குழந்தைகளும் இரு தினங்களுக்கு முன்பு  காவல் நிலையத்தில் போய் நின்றார்கள். அங்கிருந்த போக்குவரத்துக் காவலர் ராஜ தீபன் அந்த இரு பெண் குழந்தைகளிடம், ‘என்ன விஷயமாக இங்கு வந்துள்ளீர்கள்?’ என்று அன்பாகக் கேட்டுள்ளார். அப்போது குழந்தைகள் இரண்டும் கூறிய வார்த்தைகள் அங்கிருந்த அனைத்துக் காவலர்களையும் கண்கலங்க வைத்துள்ளது. குழந்தைகள், தங்களது அப்பா அம்மா இறந்துபோனது பற்றியும் பாட்டி பராமரிப்பில் பசி பட்டினியோடு இருப்பது குறித்தும் கூறியுள்ளனர்.

 

மேலும் ‘பண்ருட்டி அரசுப் பள்ளியில் படித்து வருகிறோம். மேற்கொண்டு எங்களைப் படிக்க வைக்கவும் எங்களுக்காக உழைத்துச் சாப்பாடு போடுவதற்கும் பாட்டியால் முடியவில்லை அவருக்கு வயதாகிவிட்டது. அவருக்கே மற்றவர் உதவி தேவைப்படும் நிலையில் அவரால் எங்களை வைத்துப் பராமரிக்க முடியவில்லை. தினமும் ஒரு வேளைகூட சரியான உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கிறோம். எங்கள் உயிரைக் காப்பாற்ற டீ கடையில் பன்னும் டீயும் பாட்டி கடனுக்கு வாங்கிக் கொடுப்பார். அதுதான் எங்களுக்குப் பல நாட்கள் உணவாக இருந்தது. எப்போதாவது அக்கம் பக்கத்தினர் சாப்பாடு கொடுப்பார்கள் அதை நானும் எனது தங்கையும் பங்கிட்டுச் சாப்பிடுவோம். உடுத்துவதற்குக் கிழிந்த உடைகள் மட்டுமே உள்ளன. அதையும் கையினால் ஊசி நூல் கொண்டு தைத்து தான் மாற்றி மாற்றி உடுத்திக் கொள்வோம். எனவே எங்கள் இருவரையும் எப்படியாவது ஒரு பாதுகாப்பான பள்ளி விடுதியில் சேர்த்து படிப்பதற்கு உதவி செய்யுங்கள்’ என்று இரு பெண் குழந்தைகளும் கெஞ்சிக் கேட்ட காட்சி காவல் நிலையத்தில் இருந்த அனைவரரையும் கண் கலங்க வைத்துவிட்டது.

 

help

 

’பாட்டியுடன் இருந்த அந்தக் குடிசையும் மழையிலும் காற்றிலும் பிய்ந்து உருக்குலைந்த நிலையில் உள்ளது. அப்பா அம்மா இருந்த வீட்டில் அப்பா பாம்பு கடித்து இறந்த பயத்தினால், அந்த வீட்டிலும் எங்களால் இருக்க முடியவில்லை. அவ்வப்போது உறவினர் வீட்டில் போய்த் தங்குவோம் அங்கேயும் எங்களுக்குத் தர்மசங்கடமான சூழ்நிலைதான் உள்ளது. யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கிறோம் ஏதேனும் ஒரு பாதுகாப்பான பள்ளி விடுதியில்  தங்க வைப்பீர்களா?’ என்று கண்ணீருடன் அந்த இரு பெண்குழந்தைகளும் கேட்டுள்ளனர். இதையடுத்து காவலர் ராஜ தீபன் அந்த இரு பிள்ளைகளுக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் ஏர்படுத்தியதோடு அவர்களுக்குப் புது ஆடைகளும் அந்தப் பாட்டிக்கும் சேர்த்து நிவாரண உதவிகள் செய்து கொடுத்துள்ளார். 

 

இதுபற்றி அறிந்த பண்ருட்டி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் அந்த இரு பிள்ளைகளையும் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு அவர்களுடைய கல்வி தொடர ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளார். 

 

இந்தச் சம்பவம் பத்திரிகை, ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது அதைப் படித்து பலரது மனம் நெகிழ்ச்சி அடைந்துள்ளது. அதன் பலனாக பெற்றோரை இழந்து தவிக்கும் அந்த மாணவிகள் ஜீவா, தர்ஷினி  ஆகிய இருவர் படிப்பதற்கு உதவி செய்வதற்கு முன் வந்துள்ளார் பண்ருட்டி நகரில் வள்ளி விலாஸ் தங்க நகைக்கடை உரிமையாளர் சரவணன். 

 

http://onelink.to/nknapp


அந்த இரு பெண் பிள்ளைகளின் படிப்பு, தங்கும் விடுதி செலவுகளையும் அவர்களுக்கு உடை உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்ததோடு குழந்தைகளின் தந்தை பாபு பாம்பு கடித்து இறந்து விட்டதால் அரசு உதவித் தொகையாக கிடைக்கும் ஒரு லட்ச ரூபாயையும் விரைந்து பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக சரவணன் உறுதியளித்துள்ளார். 


அதேபோல் பா.ப.ஒ.வி. அறக்கட்டளை நிறுவனர் வெள்ளையன் குழுவினர் மாணவிகளையும் பாட்டி செந்தாமரையும் சந்தித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளனர் மனித மனங்கள் இன்னும் மரித்துப் போகவில்லை.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.