Skip to main content

மத்திய அமைச்சர் ஆகிறார் ஜி.கே.வாசன்? பா.ஜ.க.வில் இணைக்கப்படுகிறதா த.மா.கா.?

Published on 07/08/2020 | Edited on 08/08/2020

 

gkvasan

    

கரோனா நெருக்கடியால் தள்ளி வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரை வருகிற செப்டம்பரில் நடத்த பிரதமர் மோடி தீர்மானித்துள்ளதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன. இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

                                
இந்த நிலையில், நாடாளுமன்றம் கூடும் போது மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மோடி திட்டமிட்டிருக்கிறாராம். மாற்றியமைக்கப்படும் அமைச்சரவையில், அண்மையில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை இணைத்துக்கொள்ள மோடி முடிவு செய்திருப்பதாக த.மா.கா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

                              

ஆனால், பா.ஜ.க. மேலிடத்தில் தொடர்பில் உள்ளவர்களோ, ’’பா.ஜ.க.வில் இணைய ஜி.கே.வாசனை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவரோ பிடிகொடுக்காமல் நழுவியபடி இருக்கிறார். அதேசமயம், அமைச்சரவையில் சேரும் எண்ணம் மட்டும் அவரிடமிருந்து விலக வில்லை. ஒருவேளை வாசன் மத்திய அமைச்சரானால், சட்டமன்றத் தேர்தலின் போது அவர் பா.ஜ.க.வில் இணைந்து விடுவார். இந்த டீலிங்கிற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே அமைச்சரவையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் ‘’ என்கிறார்கள்.

                              

இது குறித்து த.மா.கா. மூத்த தலைவர் ஒருவரிடம் கருத்து கேட்டபோது, "அமைச்சர் பதவிக்கும் த.மா.கா.வை பா.ஜ.க.வில் இணைப்பதற்கும் சம்மந்தமில்லை. அமைச்சர் பதவிக்காக கட்சியை பா.ஜ.க.வில் அடகு வைக்க மாட்டார் ஜி.கே.வாசன்" என்கிறார் மிக அழுத்தமாக.

 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.