Skip to main content

“காயத்ரி நீக்கத்துக்கும் சூர்யா விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை; அவரின் நீக்கத்துக்கு காரணமே வேறு..." - நாராயணன் திருப்பதி

Published on 26/11/2022 | Edited on 27/11/2022

 

ி

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

" கடந்த சில நாட்களாக ஊடகங்கள் சூர்யா விவகாரம் தொடர்பாகத்தான் காயத்ரி ச்ஸபெண்ட்  செய்யப்பட்டதாக ஒரு தவறான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.அவரின் நீக்கத்துக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவரின் கடந்த கால செயல்பாடு காரணமாகவே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக காசி தமிழ்ச் சங்கமம் தொடர்பாக அவர் வேண்டத்தகாத கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார். தன்னை அங்கு அழைக்கவில்லை என்றும், தான் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் பொது வெளியில் கருத்து பதிவிட்டு இருந்தார். இது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலிருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவரின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும் சூர்யா விவகாரத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.  இரண்டும் ஒரே நாளில் நடைபெற்றதால் அதற்காகத்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

 

இது மிகவும் தவறான தகவல் காயத்ரி நீக்கத்துக்கும் இந்த விவகாரத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஊடகங்கள் இதை முதலில் தெளிவாகப் புரிந்துகொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும். அதையும் இதையும் முடிச்சி போட்டுப் பார்க்கக்கூடாது. இது இரண்டுமே ஒரே நாளில் நடந்ததால் மட்டுமே இவ்வளவு பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது. வேறொரு நாளில் இது நடந்திருந்தால் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்காது. தெரியாத நபர்கள் பதிலளிக்கும் போதும் இவர் அங்கே சென்று அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பதிவிடுகிறார். இது தேவையில்லாத ஒன்றாகக் கட்சி நினைத்திருக்கலாம். அதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். 

 

ஆகவே கட்சி எந்த அடிப்படையில் ஒருவரின் செயல்பாடு இருக்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு வைத்திருக்கும். அதை மீறிச் செயல்படுகின்றபோது இத்தகைய நடவடிக்கையும் எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதைத்தான் கட்சி இப்போது செய்துகொண்டுள்ளது. அதைத் தலைவர் அண்ணாமலையும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஒரு கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் இந்த மாதிரி கட்சி கட்டுப்பாட்டை மீறுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பொறுப்பில் இருப்பவர்களே அதனை மீறினால் அதைத் தலைமை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்கும். அதனால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

 

 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.