Skip to main content

விவசாயிகள் உதவித்தொகை முடக்கம்; பிரதமரின் திட்டத்தில் 2 லட்சம் கோடி மெகா ஊழல்

Published on 28/11/2022 | Edited on 30/11/2022

- தெ.சு.கவுதமன்

 

Farmers subsidy freeze! 2 lakh crore mega corruption in Prime Minister's plan!

 

பாராளுமன்றத் தேர்தலில் விவசாயிகள் வாக்குகளைக் கவர்வதற்காக, 2018 டிசம்பர் மாதத்தில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 5 ஏக்கருக்கும் குறைவாக நிலமுள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாயை தலா 2,000 ரூபாய் என்று மூன்று தவணைகளாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுக்க சுமார் 12 கோடி விவசாயிகள் (11.84 கோடி) பயனாளர்களாகக் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முதல் தவணையாக 2,000 ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
 

இந்தத் திட்டத்தை அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய விளம்பரமாகக் காட்டினார்கள். அதற்காகவே இத்திட்டத்தின் தொடக்க விழாவை 2019 மார்ச் மாதத்தில் நடத்தினார்கள். பின்னர் அத்திட்டப்படி நான்கு மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. இத்திட்டத்தில் ஒவ்வொரு தவணையிலும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்ததுதான் சர்ச்சையைக் கிளப்பத் தொடங்கியது. இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் தங்களுக்கான உதவித் தொகையைப் பெறுவதற்காகக் காத்திருந்தால் உதவித்தொகை நிறுத்தப்படுவது தொடர்ந்தது. ஒவ்வொரு தவணையாக விவசாயிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு கடந்த அக்டோபர் மாதத்தில் 12வது தவணைத் தொகை வெறும் 3.87 கோடி விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இது, முதல் தவணையில் இருந்த விவசாயிகள் எண்ணிக்கையைவிட 67% குறைவாகும்.

 

தமிழ்நாட்டில் முதல் தவணை ஊக்கத்தொகை 46.8 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 12 வது தவணை ஊக்கத்தொகை அதில் பாதியாக 23.04 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவே கேரளத்தில் 2019ஆம் ஆண்டு 36.99 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது 2022ஆம் ஆண்டில் 24.23 லட்சமாகக் குறைந்துள்ளது. தெலுங்கானாவில் 39.10 லட்சம் விவசாயிகள் 24.32 லட்சம் விவசாயிகளாகக் குறைந்துள்ளனர். இப்படியாக இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் பயனாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

Farmers subsidy freeze! 2 lakh crore mega corruption in Prime Minister's plan!

 

இதில் என்னவொரு வேடிக்கையென்றால் இப்படி விவசாயிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது குறித்து ஒன்றிய அரசு தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. கடந்த அக்டோபரில் 12வது தவணையை வழங்க ஆணையிட்ட பிரதமர், இதன்மூலம் 11 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் என்றும் அவர்களுக்காக 16,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதுவரை இத்திட்டத்துக்காக ஒன்றிய அரசு 2.16 லட்சம் கோடியை செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உண்மையில் 3.87 கோடி விவசாயிகளுக்கு மட்டுமே தொகையைச் செலுத்துகிறார்கள் என்றால் 7 கோடிக்கு மேலான விவசாயிகளின் கணக்கு என்னவானது என்பது பெருத்த கேள்விக்குறியாக உள்ளது. அப்படியானால் இதற்காகச் செலவிடப்பட்டுள்ள தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில் பலன்பெற்ற அதிகாரிகள், அரசியல்வாதிகள் யார் என்பதெல்லாம் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

 

இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சபையைச் சார்ந்த விவசாயி ஒருவர், "மூன்றில் இரண்டு பங்கு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி குறைக்கப்பட்டிருப்பதற்கு ஒன்றிய அரசின் சார்பாக எந்தவொரு சரியான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இதன் போக்கைக் கவனித்தால் கூடிய விரைவில் இந்த ஊக்கத்தொகை முற்றிலுமாக நிறுத்தப்படுமென்றே தெரிகிறது" என்று குறிப்பிட்டார். கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதாகக்கூறி கொஞ்சங் கொஞ்சமாக அந்த மானியத்தை காலி செய்ததுபோல் விவசாயிகளையும் நம்ப வைத்து மோசம் செய்யப்போகிறதோ ஒன்றிய அரசு?

 

 

Next Story

“டி.வி முன் மோடி தோன்றினாலே மக்கள் அலறியதுதான் சாதனை” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 Chief Minister M.K.Stalin says When Modi appeared in front of the TV, people screamed

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை திமுக வேட்பாளர்  கலாநிதி வீராசாமியை ஆதரித்து இன்று (15-04-24) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னையில் வாக்கு சேகரித்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் நரேந்திர மோடி வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? அல்லது சர்வாதிகாரம் இருக்க வேண்டுமா? என்பதை மக்களின் முடிவு தான் தீர்மானிக்கும். ஓர் இரவில் ஊழலை ஒழிக்க போவதாக அவதார புருஷராக தோன்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்தார். ஜிஎஸ்டியை அமல்படுத்தி தொழில் முனைவோரையும் மத்திய தர மக்களையும் மோடி கொடுமைப்படுத்தினார். 

கொரோனாவை ஒழிக்க, இரவில் விளக்கு ஏற்ற கூறியும், மணி அடிக்க கூறியும் ஏதோ விஞ்ஞானி போல் மோடி பேசினார். பாஜக தேர்தல் அறிக்கை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வில்லன். நாட்டுக்கு வரப்போகும் ஆபத்துக்கான ட்ரெய்லர் தான் பாஜகவின் தேர்தல் அறிக்கை. பாஜக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது. மத அடிப்படையில் நாட்டு மக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது” எனக் கூறி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான வீடியோவை அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு செய்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இரவில் டி.வி. முன் மோடி தோன்றினாலே, இந்திய மக்கள் அலறியதுதான் அவரது ஒரே சாதனை! பிரதமராக தொடரமுடியாத அச்சத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டியும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை அவதூறு செய்தும், தம் பதவியின் தரத்தையே தாழ்த்துகிறார். ஒருவர் உண்ணும் உணவு பற்றிப் புகார்கூறி வாக்கு சேகரிக்கும் மலிவான செயல் இதுவரை எந்தப் பிரதமரும் செய்யாதது! அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா? ஆர்.எஸ்.எஸ் சொல்லும் சட்டம் இருக்க வேண்டுமா? என்பதை முடிவுசெய்யும் தேர்தல் இது. இந்தியாவில் மதநல்லிணக்கம் நீடிக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
PM Modi says DMK-Congress hates Tamil culture

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.