Skip to main content

தேர்தல் களத்தில் ரசிகர்கள்! கண்காணிக்கும் ரஜினி!

Published on 29/03/2021 | Edited on 29/03/2021

 

ddd

 

"2021 சட்டமன்றத் தேர்தல் போர்க்களத்தில் வீரர்களாக நிற்போம்'' என 2017இல் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 2020 டிசம்பரில் தனது உடல்நிலையைக் காரணமாகக் காட்டி "நான் அரசியலுக்கு வரவில்லை' என அறிவித்துவிட்டார். இன்னமும் யார் பக்கமும் சாயாத அவரது ரசிகர்களை வளைக்க கட்சிகள், மன்றங்களை வட்டமிட்டு வருகின்றன.

 

இந்நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள ரஜினி ரசிகர்களின் நிலைப்பாடு என்ன? ரஜினி என்ன நினைக்கிறார் என அறிய ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம்.

 

"தமிழகத்தில் மன்றத்துக்கு அதிக தொண்டர்களை இணைத்து ரஜினிக்கு பக்கபலமாக இருந்தது தென்சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், தஞ்சை, தூத்துக்குடி, புதுக்கோட்டை போன்ற மா.செ.க்கள்தான். 2021 தேர்தலுக்காக ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டியைப் பலமாக அமைக்கச் சொல்லி தலைவர் உத்தரவிட்டார். 2019இல் தமிழகம் முழுவதும் 64 ஆயிரம் பூத் கமிட்டி இருந்தன. அதில் 42 ஆயிரம் பூத் கமிட்டிகளில் ஒரு கமிட்டிக்கு சராசரியாக 20 பேர் என 12 லட்சம் பேர் பட்டியலை தலைமைக்குத் தந்தோம்.

 

தமிழகத்திலேயே அதிக பூத் கமிட்டிகளை அமைத்து பக்காவாக இருந்தது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள சோளிங்கர் தொகுதி என ரஜினியே பாராட்டினார். சோளிங்கர் தொகுதியில் மட்டும் 320 வாக்குச்சாவடிகளில் ஒரு பூத்துக்கு 30 பேர் கொண்ட கமிட்டி, அவர்களின் குடும்பத்தினர் என 30 ஆயிரம் வாக்குகள் என ஒவ்வொரு தொகுதியிலும் உள்ளது. இவர்கள் அனைவரும் மன்ற உறுப்பினர்கள், நேரடியாக பூத் கமிட்டியில் உள்ளார்கள். இவர்களின் குடும்பத்தினர், தீவிர ரசிகர்கள் என சராசரியாக 40 லட்சம் வாக்காளர்கள் தோராயமாக உள்ளார்கள்.

 

பா.ஜ.க.வின் அறிவுசார் பிரிவிலிருந்து எங்கள் மன்றத்துக்கு வந்து, தொடங்கப்படாத கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தி, தலைவர் கட்சி தொடங்கவில்லை என அறிவித்தபின், மன்றத்தினர், பூத் கமிட்டி அமைப்பின் பலமறிந்து மன்றத்தினரைக் குறிவைத்தே தனிக்கட்சி தொடங்கி, ரசிகர்களைக் கவர திட்டமிட்டு எந்திரன் (ரோபோ) சின்னத்தையும் வாங்கினார். ஆனால் 5 சதவீதம் ரஜினி மன்றத்தினர்கூட அவர் பின்னால் செல்லவில்லை. இந்த விரக்தியிலேயே, "தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை” என அறிவித்து ஒதுங்கிக்கொண்டார்.

ddd

 

தலைவர் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துவிட்டாலும், மன்றத்தினர் 80 சதவீதம் பேர் வேறு கட்சிகளுக்குச் செல்லவில்லை. இவர்கள் ரஜினி வாய்ஸ் யாருக்கு என காத்துள்ளார்கள். தலைவர் அமைதியாக இருப்பதால் இந்த வாக்குகளைத் தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., கமல் கட்சி வேட்பாளர்கள் ஆகியோர் எங்கள் மா.செ.க்களிடம் முட்டிமோதுகின்றனர். தி.மு.க., அ.ம.மு.க. வேட்பாளர்கள், வேலூர் மா.செ. சோளிங்கர் ரவியை தேடிச் சென்று ஆதரவு கேட்டுள்ளனர். இதேபோல் தென்சென்னை சந்தானம், கிருஷ்ணகிரி சீனுவாசன், தஞ்சை தினேஷ், புதுக்கோட்டை முருகுபாண்டியன் போன்ற 20க்கும் மேற்பட்ட மா.செ.க்களிடம் பிற கட்சிகளின் வேட்பாளர்கள் ஆதரவு கேட்கிறார்கள்'' என்றனர் நிர்வாகிகள்.

 

ரஜினிக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "தலைவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை, ரசிகர்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம் என அறிவித்தாலும், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள், மன்ற உறுப்பினர்கள் யார், யார் எந்தக் கட்சிக்குச் செல்கிறார்கள் என்பதைத் தனக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளதால் அதுபற்றிய பட்டியல் மா.செ.க்களிடம் வாங்கி அவர்களுக்கு அந்தக் கட்சி தலைமை எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறது என்கிற தகவலோடு தலைவருக்குப் போகிறது.

 

தி.மு.க.வில் மாநில சிறுபான்மை அணி துணைச் செயலாளராக தூத்துக்குடி ஸ்டாலினை நியமனம் செய்ததைக் கூறினோம். தற்போது வேட்பாளர் அறிவிப்பின்போது, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளில் உள்ள தனது நண்பர்கள் யார், யாருக்கு சீட் தரப்பட்டுள்ளது என்பதை விசாரித்தவர், 2019இல் ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மா.செ.வாக இருந்து தி.மு.க.வுக்குச் சென்ற மதியழகன், பர்கூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அவரின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது ஆச்சர்யமானார். மதியழகன் வெற்றி வாய்ப்பு குறித்தும் விசாரித்தார். தங்களுக்கு வாய்ஸ் தரச்சொல்லி டெல்லியிலிருந்து அவருக்கு அழுத்தம் வருகின்றது, நேரடியாக வந்து சந்திக்கிறோம் என பா.ஜ.க. தேசியத் தலைவர்கள் கேட்கிறார்கள். அதனைத் தவிர்க்கவே அவர் ‘அண்ணாத்த' படப்பிடிப்பை தொடங்கச் சொல்லி கேட்க, அதுவும் தொடங்கப்பட்டுவிட்டது. படப்பிடிப்பில் இருந்தாலும் தேர்தல் களத்தைக் கவனித்தே வருகிறார். ஓட்டு அவுங்க விருப்பப்படி போடட்டும் என்கிற மனநிலையில் உள்ளார்'' என்றார்.

 

 

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.