Skip to main content

ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து பலியாகும் குடும்பங்கள்; முதல்வருக்கு உருக்கமான கடிதம்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Families continue to be victimized by online rummy; A warm letter to the Chief Minister

 

சென்னையில் ஆன்லைன் ரம்மி மூலம் 17 லட்சம் பணத்தை இழந்த சுரேஷ் என்கிற திருமணமான இளைஞர் ஒருவர் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு கடலில் குதித்து சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் ரம்மி எனும் கொடூரமான அரக்கன் மூலம் ஏற்பட்டுள்ள இந்தத் தற்கொலை குறித்து அவருடைய குடும்பத்தாரிடம் பேசினோம்...

 

கொரோனா காலத்திற்குப் பிறகு புதிதாகத் தொழில் தொடங்கிய சுரேஷ், தொழிலுக்காகத் தான் வாங்கிய கடன் தொகையை ஆன்லைன் ரம்மியில் முதலீடு செய்து, எப்போதும் அதிலேயே மூழ்கி இருந்துள்ளார். 17 லட்சத்தையும் தொலைத்த பிறகு ஒரு நாள் வீட்டிலிருந்து மாயமாகித் தற்கொலை முடிவை எடுத்துள்ளார் சுரேஷ். 

 

"என் மகன்தான் எங்களுக்கு எல்லாமே. இன்று அவனை இழந்துவிட்டு நிற்கிறேன். குடும்பத்தை அவன் தான் நிர்வகித்து வந்தான். இந்த ஆன்லைன் ரம்மியில் எப்படி அவன் சென்று மாட்டினான் என்பது தெரியவில்லை. இந்த வயதில் எங்கு சென்று வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று தெரியவில்லை. தயவுசெய்து இந்த சூதாட்டத்தைத் தடை செய்யுங்கள் என்று முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன். இத்தோடு இந்தத் தற்கொலைகள் முடிய வேண்டும்" என்று கண் கலங்குகிறார் சுரேஷின் தந்தை.  

 

நம்மிடம் பேசிய சுரேஷின் மனைவி, "எளிமையான குடும்பம் எங்களுடையது. வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். கொரோனா காலத்தில் மிகவும் சிரமப்பட்டோம். என்னுடைய நகைகளை அடகு வைத்து தான் புதிய தொழில் தொடங்குவதற்கான பணத்தை ஏற்பாடு செய்தோம். தொழில் நல்ல முறையில் தான் வளர்ந்து கொண்டிருந்தது. அவர் அடிக்கடி வீட்டில் சோகமாக அமர்ந்திருப்பார். ஏன் என்று விசாரித்தால் சரியான காரணம் சொல்ல மாட்டார். 

 

என் அக்காவிடம் தொழிலுக்காக 5 லட்சம் கடன் வாங்கினோம். இந்த விளையாட்டில் ஈடுபட்டு அவர் மீண்டும் மீண்டும் பலரிடம் கடன் வாங்கினார். கடனை வசூலிக்க அவர்கள் கால் செய்ய ஆரம்பித்தனர். ஒரு நாள் மாலை ஆறரை மணிக்கு நகைகள் அனைத்தையும் மறைத்து வைத்துவிட்டு வெளியே சென்றார். வண்டியையும் போனையும் வீட்டிலேயே விட்டுச் சென்றிருந்தார். கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றிருந்தார். அதன் பிறகு போலீசாரின் முயற்சியால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டதை அறிந்தோம். இதுபோன்ற சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு மக்களின் உயிர்மேல் அக்கறையே இல்லையா? தயவுசெய்து இந்த விளையாட்டைத் தடை செய்ய வேண்டும்" என்றார்.

 

"என்னுடைய தம்பிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். எங்களது குடும்பம் தற்போது நடுத்தெருவில் நிற்கிறது. இதுபோன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது. எங்களுடைய வாழ்வாதாரத்துக்கு இனி நாங்கள் என்ன செய்வோம்? முதலமைச்சர் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்" என்கிறார் சுரேஷின் அக்கா.

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டத்தை இன்று வரை நிலுவையில் வைத்திருக்கிறார் ஆளுநர். வாழ்க்கையை இழந்த இவர்களுடைய வலி அவருடைய நிலைப்பாட்டை மாற்றுமா?

 


 

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.