Skip to main content

சொத்துக்களை குறிவைக்கும் சொந்தங்கள்...முன்னாள் மேயர் சம்பவத்தின் அதிர வைக்கும் பின்னணி! 

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

நெல்லையின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், வேலைக்காரப் பெண் மாரியம்மாள் ஆகியோர், நெல்லை டவுணிலிருந்து ஒதுங்கியிருக்கும் ரெட்டியாபட்டியிலுள்ள உமா மகேஸ்வரியின் இல்லத்தில் கடந்த 23-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர்.

 

ex mayor incident



வெறும் நகை, பணம் திருட்டுக்காக நடந்த கொலை அல்ல என்பதை, சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பின்தான் போலீசால் உறுதிப்படுத்த முடிந்தது. இதற்கு முக்கிய துருப்புச் சீட்டாக இருந்தது உமா மகேஸ்வரி, முருக சங்கரன் ஆகியோரின் இறுதிச் சடங்கில் நடந்த மொட்டை போடும் விவகாரம்தான். திருச்செந்தூர் சாலை யில் உள்ள வி.எம்.சத்திரம் சாந்திவனத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது, உமா மகேஸ்வரிக்கு ஆண் வாரிசு இல்லாததால், யார் மொட்டை அடித்து கொள்ளி போடுவது என்ற பிரச்சனை வந்தது. மொட்டை போட்டு கொள்ளி போடுபவர்களுக்கு சொத்தில் பங்கு இருப்பதால், முருகசங்கரனின் தம்பியும் தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தின் துணைத் தலைவருமான வரதராஜன், "நான்தான் மொட்டை போடுவேன்' எனக் கூறியுள்ளார்.

 

ex mayor



ஆனால் உமா மகேஸ்வரியின் அண்ணன் மகனான மூளிகுளம் பிரபு, மகள் வயிற்று வாரிசு இருப்பதால், உமா மகேஸ்வரியின் மகள் கார்த்திகாவின் மகன்கள்தான் மொட்டை போட்டு கொள்ளி வைக்க வேண்டும் என பேசி முடித்து இறுதிக் காரியமும் நடந்துள்ளது. ஆனா லும் முருக சங்கரனின் உடன்பிறந்தவர் வழியில் ஒருவர் மொட்டை போட்டதாக போலீசுக்குத் தகவல் கிடைத்து, அந்த நபரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்தது போலீஸ். இந்த மொட்டை மல்லுக்கட்டுக்கான பின்னணி காரணம், பினாமி பெயரில் இருக்கும் உமா மகேஸ்வரியின் பிரமிக்க வைக்கும் சொத்துக்கள்தானாம்.


தூத்துக்குடி ரோட்டில் இருக்கும் அரியகுளத்தில் ஹவுசிங் போர்டிற்குச் சொந்தமான இடத்தை வாங்கி நான்கு கடைகளுடன் கூடிய பிளாட். நெல்லை வண்ணாரப் பேட்டை இன்ஜினியரிங் காலேஜுக்குப் பின்புறம் 15 சி மதிப்புள்ள வயலுடன் கூடிய நிலம். திருச்செந்தூர் சாலை சீனிவாச நகரில் 2.5 சி மதிப்புள்ள நான்கு வீடுகள்+ கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ். பாளையங்கோட்டை பல்நோக்கு மருத்துவமனை எதிரே ஒரு வீடு. இரண்டு ஏக்கர் பரப்பில் இப்போது குடியிருந்த வீடு. இந்த சொத்துக்களை சொந்தமாக்கும் முயற்சியில்தான் இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்ற கோணத்திலும் விசாரணையை கொண்டு செல்கிறது தனிப்படை போலீஸ்.

சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களில் நெடுஞ்சாலைத்துறையின் ஏ.டி.யாக முருகசந்திரன் இருந்த போது, அந்த ஏரியாவின் பிரபல காண்ட்ராக்டர் ஒருவருக்கு ஏகப்பட்ட காண்ட்ராக்டுகளை ஒதுக்கி, அந்த ஏரியாவில் விளை நிலங்களை வாங்கியுள்ளார். யார், யாரிடமிருந்து நிலம் வாங்கினார், வாங்குவதற்கு உதவிய அந்த காண்ட்ராக்டர் யார் என்பதையும் தனிப்படை கண்காணிக்க ஆரம்பித்துள்ளது.

பெட்டிக்கடை, மளிகைக் கடைக்காரர்களே சி.சி.டி.வி. கேமரா வைத்திருக்கும்போது, டவுணிலிருந்து ஒதுக்குப்புறமாக வசிக்கும் உமாமகேஸ்வரியின் வீட்டில் சி.சி.டி.வி. கேமரா இல்லாதது போலீசுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முருக சந்திரனின் தனிப்பட்ட சில நடவடிக்கைகளுக்காகத்தான் சி.சி.டி.வி. கேமரா வைக்காமல் இருந்திருக்கலாம் என்பதையும், கொலையின்போது முருகசந்திரனின் மர்ம உறுப்பில் பலத்த வெட்டு விழுந்துள்ளதையும் வைத்து, அந்தக் கோணத்திலும் விசாரணையை கொண்டு செல்கின்றனர்.
  ex mayor



இதற்கிடையே வேலைக்காரப்பெண் மாரியம்மாள் மகள்களின் வாழ்வாதாரத்திற்காக தி.மு.க. அறிவித்த 1 லட்ச ரூபாயை டி.பி.எம்.மைதீன்கான் 25-ஆம் தேதி வழங்கினார். 26-ஆம் தேதி நெல்லைக்கு வந்த கனிமொழி, உமாமகேஸ்வரியின் குடும்பத்திற்கும் மாரியம்மாளின் மகள்களுக்கும் ஆறுதல் கூறினார்.
 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.