Skip to main content

''கதவு வச்ச வீடும், டிகிரி படிக்கவும் உதவுனா போதும் அண்ணா... மனநலம் பாதிச்ச அம்மாவை காப்பாத்திடுவேன்'' -பள்ளி வயதில் பாரம் சுமக்கும் சிறுமி!!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

'' Even if the door is house ;me to study for a degree, I will save my mentally ill mother '' - a girl who carries the burden of school age !!

 

கதவு வச்ச ஒரு சின்ன வீடும், நான் டிகிரி படிக்க உதவியும் செய்தால் மனநலம் பாதிக்கப்பட்ட அம்மாவை பாதுகாப்பாக வைத்துக் காப்பாற்றுவேன் என்று சொல்கிறார் பள்ளி பருவத்திலேயே குடும்ப சுமையைத் தலையில் சுமந்து விவசாய வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றும் மண் குடிசையில் வசிக்கும் சிறுமி சத்தியா..

'மக்கள் பாதை' தோழர்கள் மூலம் தகவல் அறிந்து அந்த மனதிடமிக்க சிறுமியைக் காண புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, கந்தர்வகோட்டை தாலுகா, பெருங்களூர் ஊராட்சி, போராம் கிராமத்திற்கு நண்பருடன் சென்றோம்..

நாம் சென்ற நேரத்தில் சிறுமி சத்தியா வீட்டில் இல்லை. ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் ஒரு தோட்டத்தில் கடலை பறித்துக் கொண்டிருப்பதாக தகவல் அறிந்து சிறுமியை வீட்டிற்கு வரச் சொன்னோம். செடி கொடிகள் அடர்ந்த ஒத்தையடிப் பாதையில் சென்றால் 10 அடி நீளம், 7 அடி அகலத்தில் ஒரு மண்குடிசை. பல வருடங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட தென்னங்கீற்று, சூரியன் அந்த வீட்டுக்குள் நேரடியாக ஆட்சி செய்தது.

 

'' Even if the door is house ;me to study for a degree, I will save my mentally ill mother '' - a girl who carries the burden of school age !!


வாங்கண்ணா.. என்று அழைத்த சகோதரி, சொன்ன அடுத்த வார்த்தை நம்மை ரொம்பவே பாதித்தது.. வந்தவங்களை வீட்ல உக்கார வச்சு தண்ணி கொடுத்து அப்பறம் தான் பேசத் தொடங்கனும். ஆனால் எங்க வீட்ல உக்கார இடமில்லை அண்ணா என்று கண்கள் கலங்கியபடியே சொல்லும் போது நம்மை ரொம்பவே பாதித்தது. மரத்தடியில் நிற்கிறோம் என்று சொல்லிவிட்டோம்.

இது தான் எங்க வீடு என்று சொன்ன போது அந்த வீட்டுக்குள் சென்றால் சாப்பாட்டு பாத்திரங்கள், தண்ணீர் குடங்கள் முழுமையாக வீட்டை நிரப்பி இருந்தது. சில குச்சிகளை அடுக்கி செல்ஃபாக வைத்து அதன் மேல் கரையான் தின்ற அவரது புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒற்றை மின் விளக்கு இருந்தது. இது தான் சத்தியாவின் மாளிகை..

தொடர்ந்து சத்தியாவிடம் பேசினோம்.. ''எங்க அப்பா ராமையா கஜா புயல் முடிந்து சில மாதங்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துட்டார். அம்மா செல்வமணி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். நான்தான் குடும்பத்தை சுமக்கிறேன். இருக்கிற இந்த குடிசைக்கும் பட்டா இல்லை. ஒற்றை விளக்கு மட்டும் இருக்கிறது. பல வருடமாக இங்கேதான் இருக்கிறோம். சுற்றி உள்ளவர்கள் எங்கள் உறவுகள் தான். இந்த வீட்டில் இருந்துதான் படித்து 10 ஆம் வகுப்பில் 500 க்கு 403 மார்க் வாங்கினேன். அப்பா இறந்த பிறகு அம்மாவையும் பார்த்துக் கொண்டு லீவு நாட்களில் விவசாய கூலி வேலைக்கு போய் அதில் கிடைக்கும் சம்பளத்தில் வீட்டுச் செலவுகளையும், என் படிப்புச் செலவுகளையும் பார்த்துக் கொண்டேன். இப்படி விடுமுறை நாட்களி்ல வேலைக்கு போறதால படிக்க நேரம் கிடைப்பதில்லை அதனால ப்ளஸ்-2 வில் 323 மார்க் வாங்கினேன்.

 

'' Even if the door is house ;me to study for a degree, I will save my mentally ill mother '' - a girl who carries the burden of school age !!


மேலும் படிக்க ஆசையாக உள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கொடுத்துவிட்டு காத்திருக்கிறேன். எங்கே படிக்க போனாலும் மாலை வீட்டுக்கு வந்தால்தான் அம்மாவை பார்த்துக் கொள்ள முடியும். அம்மா சிகிச்சைக்கு போகலாம் என்று அழைத்தாலும் வர மறுக்குறாங்க. அதனால அவங்கள தனியா விட்டுட்டு போக முடியாது.

 

Ad

 


வீட்டில் கதவு இல்லை. அதனால எனக்கும் எங்க அம்மாவுக்கும் பாதுகாப்பு இல்லை. இரவில் நானும் எங்க அம்மாவும் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் படுத்துக் கொள்வோம். எங்களுக்கு கதவு வச்ச ஒரு சின்ன வீடும், டிகிரி படிக்கவும் உதவுனா போதும் அண்ணா''  என்று கண் கலங்கி சொன்னவர் ''அண்ணா வேலை செய்ற இடத்துல தேடுவாங்க நான் கிளம்புறேன்'' என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார்.

 

 

'' Even if the door is house ;me to study for a degree, I will save my mentally ill mother '' - a girl who carries the burden of school age !!

 

அப்போது அங்கு வந்த மக்கள்பாதை பெருங்களூர் பகுதி பொறுப்பாளர் ராஜேஷ்கண்ணன் நம்மிடம்.. ''இந்தப் பக்கம் ஒரு வீடு இருப்பதை கரோனா ஊரடங்கு நிவாரணம் கொடுக்க வந்த போதுதான் பார்த்தோம். அப்பதான் இந்த சகோதரியிடம் விசாரித்த போது அவரது நிலைமையைச் சொன்னார். ரொம்ப கஷ்டமாக இருந்தது. எப்படியாவது ஒரு வீடுகட்டிக் கொடுத்துவிட்டு படிக்கவும் உதவி செய்தால் போதும். அதன்பிறகு அவரது தாயையும் தன் வாழ்க்கையையும் பார்த்துக் கொள்வார். ஏனென்றால் சத்தியா மனதிடம் உள்ளவராக இருக்கிறார். 13 வயது முதல் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு தாயை வைத்துக் கொண்டு கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை வழிநடத்திக் கொண்டு படித்திருக்கிறார். சத்தியாவிற்காக தாராளமனம் படைத்தவர்களிடம் மக்கள் பாதை மூலம் உதவிக்கரம் நீட்டியிருக்கிறோம் விருப்பமும், உதவி செய்யும் மனமும் கொண்டவர்கள் தாராளமாக உதவலாம். உங்கள் உதவி ஒரு குடும்பத்தை உயர்த்தும்'' என்றார்.

 

'' Even if the door is house ;me to study for a degree, I will save my mentally ill mother '' - a girl who carries the burden of school age !!


நாம் பார்த்து அறிந்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்கு கொண்டு சென்றோம்.தகவல்களை கவனமாக கேட்டுக் கொண்டவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சத்தியாவிற்கான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகள் நாளையே தொடங்கும் என்றார் நம்பிக்கையாக.

உதவிகள் செய்ய மனமுள்ளவர்கள் சிறுமி சத்தியா 9751356576, மக்கள்பாதை புதுக்கோட்டை 6369696715 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவிகள் செய்யலாம்.

 

 

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

பணிமனையிலிருந்து கடத்தப்பட்ட அரசு பேருந்து; அதிர்ச்சியளிக்கும் பின்னணி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
government bus hijacked from the workshop met with an accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பணிமனைக்கு வரும் பேருந்துகளில் பழுதுபார்க்க வேண்டிய பேருந்துகளை பணிமனைக்குள்ளும் மற்ற பேருந்துகளை சாலை ஓரத்தில் நீண்ட வரிசையாகவும் நிறுத்திவிட்டு ஓட்டுநர் நடத்துநர்கள் ஓய்வுக்கு செல்வது வழக்கம்.

நேற்று இரவும் இதே போல சாலை ஓரம் 12 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் ஓய்வு அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். இன்று சனிக்கிழமை அதிகாலையில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் அரசு பேருந்து ஒன்று கண்டெய்னர் லாரியில் மோதி விபத்து என்று தகவல் வர போக்குவரத்து கழக அதிகாரிகள் வெளியே சென்று பார்த்த போது அறந்தாங்கியில் இருந்து திருவாடனை செல்லும் TN 55 N 0690 பேருந்தை காணவில்லை. அந்த பேருந்து தான் விபத்திலும் சிக்கியிருந்தது தெரிய வந்தது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து பார்த்த போது கண்டெய்னர் ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு நபர் நான் தான் பஸ் ஓட்டி வந்தேன் என்று சொல்லிக்கொண்டிருக்க அவரைப் பார்த்த பலரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரை கண்டுகொள்ளவில்லை.

government bus hijacked from the workshop met with an accident

ஆனால் அந்த நபரோ நான் தான் பஸ் ஓட்டுனேன் லாரியில மோதிடுச்சு. அதுல எனக்கு கால்ல சின்ன காயம் பாருங்க என்று காலில் உள்ள சிறிய ரத்த காயத்தை காட்டியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் அறந்தாங்கி அழைத்துவரப்பட்டு விசாரிக்கும் போது ஒரே பதில் தான், ‘நான் தான் பஸ் எடுத்துடு போனேன். லாரியில மோதிடுச்சு கால்ல காயம்...’ என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

போலீசார் தலைசுற்றி நிற்க அந்த நபரின் படத்தைப் பார்த்ததும் நமக்கு கடந்த 13 ந் தேதி அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இருந்து ஒரு டாடா ஏஜ் வாகனத்தை எடுத்துக் கொண்டு 15 கி மீ தூரம் சென்றதும் கீரமங்கலம் கடந்து ஆவணத்தில் வைத்து பிடிக்கப்பட்டதும் தெரிந்ததால் 13 ந் தேதி எடுக்கப்பட்ட அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் படத்தை தேடிப் பார்த்த போது இரண்டும்ஒரே நபர் தான். கடந்த வாரம் டாடா ஏஸ் வாகனம் ஓட்டிய அன்று அணிந்திருந்த அதே சட்டை தான் இன்று பஸ் எடுத்துச் சென்ற போதும் போட்டிருந்தார்.

நன்றாக வாகனம் ஓட்டத் தெரிந்த இந்த நபர் ஏதோ காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றிதிரிந்தாலும் வாய்ப்புக் கிடைக்கும் போது வாகனங்களை ஓட்டிச் சென்றுவிடுகிறார் என்பது தெளிவாகிறது. நேற்று இரவு இந்த நபர் தான் பணிமனை அருகே சுற்றிவந்தார் என்கிறார்கள் போக்குவரத்துக்கழக ஊழியர்கள். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த நபரால் இதுவரை 2 சம்பவங்கள் நடந்துள்ளது. இவரை மனநல சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் வெளியில் விட்டால் இன்னும் எத்தனை வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துவாரோ? என்று கவலை தெரிவிகின்றனர் அப்பகுதியினர்.