Skip to main content

புரட்சித் தமிழர் மாநாடு; கதறிய தொண்டர்கள்... பரிதவித்த மக்கள் 

Published on 21/08/2023 | Edited on 22/08/2023

 

EPS Madurai meeting cover story
கோப்புப் படம் 

 

அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு பிறகு இறுதியாக பொதுச் செயலாளர் பதவியை ஜெயலலிதாவுக்கென நிரந்தரமாக ஒதுக்கி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பில் முறையே ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். செயல்பட்டனர். பிறகு நடந்த தேர்தல்களில் தோல்வி, அ.தி.மு.க.வின் சறுக்கல்கள் உள்ளிட்டவைகளால் நிரந்தர பொதுச்செயலாளர் பொறுப்பை நீக்கி கட்சியினரால் இ.பி.எஸ். தற்போதைய பொதுச் செயலாளராக அமர மீண்டும் கட்சி ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட்டுவருகிறது. 

 

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களின் பலத்தைக் காட்ட கடந்த ஏப்ரல் மாதம் திருச்சியில் மாநாட்டை நடத்தி முடித்ததும், அ.தி.மு.க.வின் பொன்விழா மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அ.தி.மு.க.வின் பொன்விழா மாநாடு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மதுரையில் நடைபெற்றது. 

 

EPS Madurai meeting cover story

 

மாநாட்டிற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் அழைத்து வரப்பட்டதால் மதுரை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலில் மூச்சுவிட திணறியது. நேற்று காலை 8.45 மணி போல் மாநாட்டின் மைதானத்திற்கு எடப்பாடி பழனிசாமியின் வாகனம் வந்தது. அதிமுகவின் 51வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் அடையாளமாக மாநாட்டு திடலில் 51 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில் அதிமுக கொடியை இ.பி.எஸ். ஏற்றினார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து சுமார் ஒரு டன் மலர் கூட்டத்தின் மீது தூவப்பட்டது. இந்தத் துவக்கவிழாவில் திருச்செந்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளி வேல் இ.பி.எஸ்.க்கு வழங்கப்பட்டது. அ.தி.மு.க. கொடியை ஏற்றி, இ.பி.எஸ். மாநாட்டை துவக்கிவிட்டுச் சென்றபிறகு காலை முதல் மாலை வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பிறகு மாலை 4.30 மணி அளவில் மாநாடு பந்தலுக்கு வந்த  இ.பி.எஸ், இறுதியில் தனது உரையை நிகழ்த்தினார். 

 

இந்த மாநாட்டில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும், விமர்சனத்துக்கு உள்ளாகும் வகையிலுமான நிகழ்வுகளும் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வந்த அ.தி.மு.க. தொண்டர்களால் மதுரை தேசிய நெடுஞ்சாலை உட்பட புறவழிச் சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் சுப காரியங்களுக்குச் சென்றவர்களும், பல்வேறு பணிகளுக்காக சென்றவர்களும் கடும் சிரமத்தைச் சந்தித்ததாக விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவசர மருத்துவச் சேவைக்காக மருத்துவமனைக்குச் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர் எனச் சொல்லப்படுகிறது. ஓரிடத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் கூட்ட நெரிசலால் திருப்பியும் அனுப்பப்பட்டது.

 

EPS Madurai meeting cover story

 

மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகம் முழுவதும் இருந்து 15 லட்சம் பேர் வருகை தந்து சாதனை படைத்த” மாநாடு என்று பேசினார். ஆனால் அ.தி.மு.க மாநாட்டு திடலில் 1.25 லட்சம் இருக்கைகளே போடப்பட்டிருந்தது.

 

போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் அவதிப்பட, முந்தியடித்துக்கொண்டு மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் தாகத்தைத் தீர்க்கவும் பசியைத் தீர்க்கவும் உணவு அருந்தச் செல்ல உணவின் ருசி அவர்களை முகம் சுளிக்கவைத்துள்ளது. அதோடு தாகம் தீர்க்க கொடுக்கப்பட்ட ஆரஞ்ச் ஜூஸ் வேறு ரகம் என ஆதங்கம் அடைந்தனர் தொண்டர்கள். 5 ஆயிரம் சமையல் கலைஞர்கள் இணைந்து செய்யப்பட்ட உணவு முறையாக இல்லை என்றும், வாயில் வைக்க முடியாத நிலையில் இருந்துள்ளது. 

 

EPS Madurai meeting cover story

 

மதிய உணவுகளை உண்ண நீண்ட வரிசையில் நின்று சாம்பார் சாதம், புளி சாதங்களை வாங்கினார்கள் தொண்டர்கள். பெருமளவு உணவுகள் கீழே கொட்டியும். குப்பைத் தொட்டியிலும் போடப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. இது குறித்து தொண்டர்களிடம் கேட்கையில், "சாம்பார் சாதத்தில் உப்பு சரியில்லை. சப்புன்னு இருந்தது, புளி சாதத்தில் மசாலாவின் வாசனை அதிகளவு இருந்தது" என அதிருப்தி அளிக்கும் வகையில் பேசினார்கள். பல தொண்டர்கள் ஒரு வாய் கூட சாப்பிடாமல் தூக்கி எரிந்துள்ளனர். லாரியில் விநியோகிக்கப்பட்ட ஆரஞ்சு ஜூஸில் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததும், சுத்தமாக இல்லாத லாரியில் கொண்டுவரப்பட்டதும், வரிசையில் நின்று இதனை குடிப்பதற்கு தண்ணீரை குடித்து விடலாம் என தொண்டர்கள் குமுறினர். 

 

முன்னதாக மாநாட்டின் உணவு குறித்து பேசிய செல்லூரை சேர்ந்த அதிமுக எம்.எல்.எ, "மாநாட்டில் என்ன உணவு என்பது முக்கியமல்ல, சுவைதான் முக்கியம்" என அடுக்குமொழியில் உரைத்தார். 

 

மாநாடென்றால் மதுவில்லாமலா?; மாநாடு துவங்கும் முன்பே, வளையங்குளம் அருகில் தனியார் கிளப் அருகில் மதுபானம் விற்கப்படுவது அறிந்து அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். பலர் காலை 10 மணி முதலே டாஸ்மாக்கில் குவிந்தனர். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை என மூன்று மாவட்டத்தில் மட்டும் நேற்று ரூ. 46 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. பல கடைகளில் மது பாட்டில்கள் தீர்ந்ததால் சீக்கிரமே கடைகள் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என மது கடைகள் மூடப்பட்டதாகவும் டாஸ்மாக் மேலாளர்கள் தெரிவித்தனர். 

 

அ.தி.மு.க.வின் பெரும்பலமான மகளிர் அணி நேற்றைய மாநாட்டில் குறைந்து இருந்தது. ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. நடத்திய நிறைய மாநாடுகளில் பெண்களின் எண்ணிக்கை பாதியளவு இருக்கும். ஆனால், நேற்றைய தினம் நடந்த மாநாட்டில் 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே மகளிர் அணியின் படை பலம் இருந்துள்ளது.

 

EPS Madurai meeting cover story

 

சிவப்பு சட்டை அணிந்த தொண்டர் ஒருவர், மாநாட்டிற்கு வந்த இ.பி.எஸ்.சின் கார் முன் தரையில் விழுந்து கும்பிட்டார். முன்பு ஜெயலலிதாவின் கார் வரும் போது அதிமுக தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர், அதனை இந்த செயல் நினைவுபடுத்தியது. 


மாலை மாநாடு உரையை பொதுச்செயலாளரான இ.பி.எஸ். துவங்குவதற்கு முன்பாக அவருக்கு ‘புரட்சித் தமிழர்’ எனும் பட்டம் வழங்கப்பட்டது. மாநாட்டில், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், “இனி இந்தப் பட்டத்தில் தான் எடப்பாடி பழனிசாமியை அழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். மாநாட்டு பந்தலில் அமர்ந்திருந்த இ.பி.எஸ்.க்கு கட்சி நிர்வாகியின் குழந்தை முத்தம் கொடுத்தது. அதனை வாஞ்சையுடன் வாங்கிய இ.பி.எஸ். மீண்டும் குழந்தைக்கு முத்தம் கொடுத்து  மகிழ்ந்தார். 


அதன்பிறகு புரட்சித் தமிழர், அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உரை நிகழ்த்த துவங்கினார். அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, தொண்டர்கள் சாரை சாரையாக அணிவகுத்து வெளி சென்றனர். மேலும், சில தொண்டர்கள் மாநாடு மைதானத்தில் படுத்து உறங்கினர். இந்த காட்சிகள் எல்லாம் தற்போது வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.