Skip to main content

எடப்பாடியின் இந்தப் பயணமே கோட் சூட் போட்டு இமேஜை உயர்த்தத்தான்...அதிர வைக்கும் ரிப்போர்ட்!

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

அமெரிக்காவில் உள்ள பண்ணையில் கன்றுக்குட்டிக்கு தீவனம் ஊட்டும் தமிழக முதல்வரின் ஸ்டைல், சோஷியல் மீடியாக்களில் வைரலாகின. இங்கிலாந்து பயணமும் அப்படித்தான். 28-ஆம் தேதி முழுவதும் துபாய் வழியாக லண்டன் பயணமான எடப்பாடி, 29-ஆம் தேதி முழுவதும் லண்டன் கிங்ஸ் மருத்துவமனையையே சுற்றிவந்தார். காலையில் கோட் சூட்டோடு கலக்கிய எடப்பாடி, மாலையில் வடஇந்திய சர்வானி கோட் போட்டிருந்தார். லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை நிறுவ ஒப்பந்தம், ஏர் ஆம்புலன்ஸ் எனப்படும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கிங்ஸ் மருத்துவமனையின் மொட்டை மாடியில் இறங்கும் இடத்தைச் சென்று பார்வையிடுதல், அத்துடன் ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்துடன் மலேரியாவை உருவாக்கும் கொசுக்களை அழிக்கும் தொழில்நுட்பத்தை பெறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல், 29-ஆம் தேதி மாலை 7:00 மணிவரை கிங்ஸ் மருத்துவமனைக்கு தன்னை அழைத்துச் சென்ற டாக்டர் பார்த்தி சீனிவாசன் மற்றும் டாக்டர் மேத்தா ஆகியோர் துணையுடன் எடப்பாடி சுற்றினார்.

 

admk



29-ஆம் தேதி மாலை 7:00 மணிக்கு ஹைட் பார்க் ஹோட்டலுக்குத் திரும்பிய எடப்பாடி அந்த ஹோட்டலை விட்டு நகரவில்லை. எடப்பாடியுடன் வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத் துறை செயலாளர் பியூலா ராஜேஷும் மட்டும் லண்டனைச் சுற்றிவந்தார்கள். மறுநாள் லண்டனை சுற்றிப் பார்க்க எடப்பாடி செல்கிறார். அதற்கு முன்னோட்டமாக பியூலாவும் விஜயபாஸ்கரும் சுற்றினார்கள் என விளக்கம் அளிக்கப்பட்டது. ஜெ.வுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்து கார் கதவு திறந்த பெருமாள்சாமிதான் இப்போது எடப்பாடிக்கும் கதவு திறக்கிறார்.

 

eps



முதல்வரின் பயண விபரக் குறிப்புகள் ஒரு சிறப்பு ஏற்பாட்டின் மூலம் நக்கீரனுக்கு கிடைத்தது. அதை அப்படியே வாசகர்களின் பார்வைக்காக தருகிறோம். 29-ஆம் தேதி இரவு ஏழுமணிக்கு ஓட்டலை அடையும் எடப்பாடி 30-ஆம் தேதி காலை 6:00 மணிக்கு துயிலெழும்புகிறார். ஏழேகால் மணிக்கு காலை உணவைச் சாப்பிடுகிறார். எட்டுமணி ஐந்து நிமிடத்தில் ஓட்டலிலிருந்து புறப்படுகிறார். புனித பவுல் கதீட்ரல் என்கிற பழம்பெருமை மிக்க சர்ச்சை சுற்றிப் பார்க்கிறார். அந்த சர்ச்சில் 8:30 முதல் 9:00 மணிவரை அரைமணி நேரம் அமைதியாக உலாவருகிறார்.

 

admk



9:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ட்ரபால்கர் ஸ்கொயர் எனப்படும் லண்டனில் உள்ள பொதுமக்கள் கூடும் சதுக்கத்திற்குச் செல்கிறார். பத்துமணி முதல் பதினொரு மணிவரை டுசாட்ஸ் மெழுகு மியூசியத்திற்குச் சென்று அதைப் பார்வையிடுகிறார். டுசாட்ஸ் என்கிற பெண்மணி பிரெஞ்சு புரட்சியாளர்களின் உருவத்தை மெழுகில் செதுக்கி உருவாக்கியுள்ள அருங்காட்சியகத்தில் பிரதமர் நரேந்திரமோடியின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்க்கிறார். அங்கிருந்து அரைமணி நேரம் பயணம் செய்து, தேம்ஸ் நதிக்கரையில் லண்டனின் கண் எனப்படும் 135 மீட்டர் உயரமும், 120 மீட்டர் விட்டம் கொண்ட ராட்டினத்தில் அமர்ந்து சுற்றினால் லண்டனை முழுமையாகப் பார்க்க முடியும். அதில் ஏறி அரைமணி நேரம் லண்டனைப் பார்க்கிறார் முதல்வர். அங்கிருந்து அரைமணி நேர பயணமாக பிரிட்டிஷ் மியூசியத்தை மதியம் 1:00 மணிக்கு சென்றடைவது பயணத்திட்டம். உலகையே தனது குடையின் கீழ் ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியா உட் பட பல்வேறு நாடுகளிலிருந்து திரட்டிய பொருட்களை ஒரு அருங்காட்சியகமாக வைத்துள்ளது.

அங்கிருந்து லண்டன் மாநகரை 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஷார்து என்கிற கட்டிடத்திற்குச் செல்கிறார். அலுவலகங்கள், உணவகங்கள் மிகுந்த கண்ணாடியால் ஆன அந்த கட்டிடத்தில் உள்ள ஷார்து உணவகத்தில் இரண்டு மணி முதல் மூன்று மணிவரை உணவருந்துகிறார்.

மூன்றுமணிக்கு அங்கிருந்து புறப்படும் எடப்பாடி ஒன்றரை மணிநேரம் பயணம் செய்து ஐ.பி. ஸ்விட்ச் மற்றும் ஸ்மார்ட் கிகிட் ஸஃபோல்க் என்னும் கம்பெனியை விசிட் செய்கிறார். எரி சக்தித்துறை அமைச்சரான தங்கமணி இல்லாமல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் சம்பத்தை வைத்து எடப்பாடி ஐந்து மணி முதல் ஐந்தே முக்கால்வரை பேசுகிறார். அங்கிருந்து இரண்டுமணி நேரம் பயணம் செய்து 8 மணிக்கு வீராசாமி ரெஸ்டாரெண்ட் என்கிற இந்தியரின் ஓட்டலில் உணவு அருந்துகிறார். 30-ஆம் தேதி 8 மணிக்கு மேல் ஓட்டலுக்குத் திரும்பும் எடப்பாடி 31-ந் தேதி முழுவதும் அவர் எங்கு செல்கிறார் என அறிவிக்கவில்லை. ஒன்றாம் தேதி காலை பத்து மணிக்கு உலகப் புகழ்பெற்ற பழமையான லண்டன் தோட்டமான கெவ் தாவரவியல் பூங்காவை தென்மேற்கு லண்டனுக்குச் சென்று பார்வையிட்டு விட்டு மாலை 5:00 மணிக்கு லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்திலிருந்து அமெரிக்கா புறப்படுகிறார். இதுதான் அரசு ஷெட்யூல்.


இதில் 30-ஆம் தேதி இரவு 8:00 மணி முதல் 1-ம் தேதி காலை 10:00 மணிக்கு தாவரவியல் பூங்காவுக்கு செல்லும்வரை எந்த நிகழ்ச்சியும் இல்லை. அதேபோல் 1-ஆம் தேதி 10:00 மணிக்கு பூங்காவுக்கு சென்றதற்குப் பிறகு அமெரிக்காவிற்கு ப்ளைட் ஏறும்வரை எந்த நிகழ்ச்சியும் இல்லை. கிட்டத்தட்ட 35 மணிநேரம் எடப்பாடி எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை.


எடப்பாடிக்கு லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் 30-ஆம் தேதி இரவு ஒரு சிறிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக 24 மணி நேர ஓய்வு எடுக்க மருத்துவர்கள் சொன்னார்கள். அந்த ஓய்வுக் காகத்தான் 31 ஆகஸ்ட் 2019 அன்று எந்த நிகழ்ச்சியிலும் எடப்பாடி கலந்துகொள்ளவில்லை என்கிறார்கள் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள். "இல்லை இந்தப் பயணமே கோட் சூட் போட்டு இமேஜை உயர்த்தத்தான்' என ஒரு சிலரும், "பண முதலீடுகளுக்கான பயணம்' என இன்னொரு தரப்பினரும் ஏகப்பட்ட சந்தேகங்களைக் கிளப்புகிறார்கள். முதல்வரின் "அந்த ஒரு நாள்' பல சந்தேகங்களை உருவாக்குகிறது.
 

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.