Skip to main content

ஓபிஎஸ்ஸிற்கு தெரியாமல் பதவி பறித்த இபிஎஸ்! பயத்தில் ஜூனியர் அமைச்சர்கள்!   

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டதில் முதல்வர் எடப்பாடியை கலவரமாக பார்க்கத் துவங்கியுள்ளனர் ஜூனியர் அமைச்சர்கள். தமிழக அரசியல் களமும் இந்த நடவடிக்கையை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்கிறது. சீனியர் அமைச்சர்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க.வினரிடம் விசாரித்தபோது, "தகவல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சரான மணிகண்டன், ஜூனியர் அமைச்சர் என்பதால் துறையின் உயரதி காரிகள் இவரை மதிப்பதே இல்லை. துறையின் டெண்டர்களில் குறைந்தபட்ச தொகை மட்டுமே மணிகண்டனுக்கு தரப்பட்டு, பெருந்தொகை அதிகாரிகளால் பிரித்துக் கொள்ளப்படும். தோதான அதிகாரிகள் வேண்டுமென எடப்பாடியிடம் மணிகண்டன் புலம்பியும் நடக்கவில்லை.

 

admk



இந்த நிலையில்தான், தனது துறையின் கட்டுப்பாட்டி லுள்ள அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசனின் சேர்மன் பதவியில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணனை நியமித்தார் எடப்பாடி. அதுவரையில் அந்த பதவி மணிகண்டனின் துறைச் செயலாளர் சந்தோஷ்பாபுவிடம் இருந்தது. தன்னிடம் கலந்தா லோசிக்காமல் தனது கட்டுப் பாட்டிலுள்ள ஒரு நிறுவனத்துக்கு மற்றொரு அமைச்சரை தலைவராக நியமிப்பதா? என எடப்பாடி மீது கோபப்பட்டார் மணிகண்டன். அதற்கேற்ப அவரது உதவியாளர்களும் தூண்டிவிட்டனர்.

 

admk



சேர்மன் பதவியில் உடுமலை ராதாகிருஷ்ணன் நிய மிக்கப்பட்டபிறகு, எடப்பாடியை சந்தித்த மணிகண்டன் இது குறித்து முறையிட்டுள்ளார். "அரசு ஆபரேட்டர்கள் பலரும் அரசின் இலவச செட்டாப் பாக்ஸ்களை வாங்கி வைத்துக் கொண்டு தனியார் சேனல்களின் வர்த்தகத்துக்குத்தான் உதவியாக இருக்கிறார்கள். அரசுக்கு இதனால் நட்டம். அதனால் நிறுவனத்தை ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனத்துக்கு சேர்மனாக இருந்த உடுமலைக்கு அனுபவம் இருப்பதால் அவரை நியமிக்க வேண்டியிருந்தது' என தெளிவு படுத்தியிருக்கிறார் எடப்பாடி. அப்போது, குரலை உயர்த்திப் பேசிய மணிகண்டன், சில தடித்த வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டே கோபத்துடன் வெளியேறினார். இதன் பிறகு, "கேபிள் விவகாரம் குறித்து என்னிடம் மட்டுமே விவாதிக்க வேண்டும், அமைச்சர் மணி கண்டனிடம் விவாதம் நடத்தக் கூடாது' என்றும், "கேபிள் கார்ப்பரேசனை பொறுத்தவரை நான்தான் அமைச்சர்' என தகவல் தொழில்நுட்ப அதிகாரி களை எச்சரித்திருக்கிறார் உடுமலை ராதாகிருஷ்ணன். தனது துறைக்கு அமைச்சர் மணிகண்டன் என்றபோதும், அவரிடம் எதையும் விவாதிக்க வில்லை. உடுமலை சொல் வதையே ஏற்கிறார் எடப்பாடி.


  admk



பெண் அமைச்சர்கள் உள்பட செயல்படாத ஜூனியர் அமைச்சர்கள் சிலரை நீக்க வேண்டும் என திட்டமிட்டு அவர்களுக்கு எதிரான பல விசயங்களை சேகரித்து வைத்திருக்கிறார் எடப்பாடி. அதில் மணிகண்டனுக்கு எதிரான பல விசயங்கள் அவரிடம் இருக்கிறது. இவை குறித்து, மணிகண்டனிடம் கடுமையாக கோபம் காட்டிய எடப்பாடி, "இப்படியே போனால் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கிடுவேன்' என எச்சரித்துள்ளார். எடப்பாடியின் அந்த கோபத்தை மணிகண்டன் எதிர்பார்க்கவில்லை. இதற்கெல்லாம் உடுமலைதான் காரணம் என நினைத்து ஆத்திரத்தை தேக்கி வைத்திருந்த மணிகண்டன், தேசிய கைத்தறி விழாவில் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் கேபிள் குறித்து கேள்விகள் கேட்க, எடப்பாடியையும் உடுமலையையும் குற்றம்சாட்டி வெளிப்படையாக பேட்டி தர, அது பரபரப்பாகிவிட்டது. அதே சமயம், எடப்பாடியிடம் வருத்தப்பட்டு கடுமையாக பேசியிருக்கிறார் உடுமலை. இதன் பின்னணியிலேயே முதல் விக்கெட்டாக அவரது பதவி பறிக்கப்பட்டது' என விரிவாக சுட்டிக்காட்டினார்கள்.


"மணிகண்டனிடம் பறிக்கப்பட்ட இலாகா, வருவாய்த் துறை அமைச்சர் உதய குமாரிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பதவி பறிப்பு விவகாரத்தை துணை முதல்வர் ஓ.பி. எஸ். உள்பட மூத்த அமைச்சர்கள் யாரிடமும் விவாதிக்காமலே தன்னிச்சையாக எடுத்துள்ளார் எடப்பாடி. இதனால் ஜூனியர் அமைச்சர்களிடம் பதட்டம் இருக்கிறது. அதேசமயம், ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளைக் கொண்டுள்ளவர்களும் 8 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ளவர்களும் அமைச்சராக நீடிக்கும் நிலையில், இளம் அமைச்சரின் பதவியைப் பறித்து, அதை இன்னொரு அமைச்ச ரிடம் கூடுதலாகக் கொடுத்தது எடப்பாடிக்கு எதிரானதாகவும் மாற வாய்ப்புள்ளது'' என்கிறார்கள்.


 

Next Story

“கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுட்டுப் போயிருக்காரு...” - விஜய பிரபாகரன் உருக்கம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Vijayaprabhakaran campaigned in Virudhunagar

சிவகாசியில் அஇஅதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றிய இந்தக் கூட்டத்தில், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.

“இவ்ளோ சீக்கிரம் நான் அரசியலுக்கு வருவேன்னு எனக்குத் தெரியாது. இது காலத்தின் கட்டாயம்.  எங்க அப்பா கேப்டன்,  விருதுநகர்ல பிறந்து மதுரைக்கு போய்,  இன்னைக்கு சென்னைல இருக்காரு. கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் ஒருநாள் நான் மதுரைக்கு வந்தேன். அன்னைக்கு மதுரைல இருந்தப்ப.. எனக்குள்ள ஏதோ ஒரு பந்தம். எனக்கும் மதுரைக்கும் விருதுநகர்க்கும் ஒரு பந்தம் விட்டுபோச்சோன்னு அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு வந்த மாதிரி இருந்துச்சு. அப்போ இது யாரோட ஆசை, கேப்டனோட ஆசையான்னு தெரியல. நான் சென்னைல இருந்து மதுரைக்கு வந்து இன்னைக்கு விருதுநகர்க்கு வந்து போட்டியிடுறேன். நிச்சயம் இந்த பந்தம் என்னைக்கும் விட்டுப் போகாதுன்னு ஆண்டவர் சொல்லிருக்காரு போல.

நிறைய பேர் சொன்னாங்க. விஜய பிரபாகரன் சென்னைல இருக்காரு. விருதுநகர்ல எதுக்கு வந்து போட்டியிடுறாருன்னு? பூர்வீகமா இது எங்களோட மண்ணு. இது எங்க தாத்தாவோட மண்ணு . ராமானுஜபுரத்துல தான் எங்க தாத்தா இருந்தாரு. எங்க அப்பா பிறந்தாரு. இங்க இருக்கிற எல்லாரும் எங்க அங்காளி பங்காளி. எல்லாரும் எங்க சொந்தகாரங்க தான். உங்க எல்லாரையும் இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். ரொம்பப் பெருமையா நினைக்கிறேன். கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுச் சென்றிருக்காரு.  என் பணி முழுவதும் உங்களுக்காக மட்டும்தான். ஏதோ விஜயகாந்த் பையன் சென்னைல இருக்கான், வர மாட்டான் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து சராசரியா ஒரு பையன் எப்படி கஷ்டப்படணும், 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. நிச்சயம் அதே மாதிரிதான் எங்கள் பணி தொடரும். இன்னைக்கு முதல் முறையா விருதுநகர் தொகுதிக்குள்ள வரும்போது,  அதிமுக எல்லா தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திச்சேன். எனக்கு மனப்பூர்வமா ரொம்ப சந்தோசம் உங்களை எல்லாம் சந்திச்சதுல.  ஏன்னா எடப்பாடி அண்ணே எப்பவும் அழகா சிரிப்பாரு. தலைமை அழகா சிரிச்சாதான்,  கீழ இருக்கிற தொண்டர்கள் வரைக்கும் சிரிப்பாங்க. அதே மாதிரி  அதிமுகவுல எல்லாருமே என்னை அரவணைச்சி உங்க வீட்டுப் பிள்ளையா என்ன நீங்க பார்த்துக்கிறீங்க. எனக்கு உள்ள வரும்போது தேமுதிக, அதிமுக எந்த வேறுபாடும் தெரியல. நாம எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கோம். அதனால தான் எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர் பேர் வந்ததான்னு கூட தெரியல. இனி என்னோட பிரச்சாரம் ஆரம்பிக்கிற எல்லா ஊருக்கும் வந்து நான் டீடெய்லா பேசுறேன்.

இன்னைக்கு விருதுநகர் மாவட்டம் முழுக்க பட்டாசு தொழிலாளர்கள் தான் ஜாஸ்தி.  இங்க சிவகாசில பேசுறோம். எங்க பெரியப்பா சொன்னாரு, 2018ல கேப்டன் இதே இடத்துல பேசிட்டு போனாருன்னு. அன்னைக்கு அவர் விட்டுட்டுப் போன அதே இடத்துல,  அதே மாதிரி நான் இன்னைக்கு ஒரு வேட்பாளரா உங்க முன்னாடி பேசும் போது ரொம்ப சந்தோஷம் அடையறேன். இன்னைக்கு சிவகாசி என்பது குட்டி ஜப்பான்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை தாயகம் படத்துல கேப்டன் தீவிரவாதிகளை ஒரு பாம் பிளாஸ்ட் பண்ணும்போது சொல்லுவாரு. நான் சின்ன ஜப்பான்ல இருந்து எல்லா பொருளும் கொண்டு வந்துருக்கேன்னு.  அந்த தீவிரவாதிகள் கிட்ட டயலாக் பேசிருப்பாரு தாயகம் படத்துல. அதனால அந்த வார்த்தை தெரியும்,  சிவகாசிதான் சின்ன ஜப்பான்னு. ஏன் அந்த டயலாக் அவ்ளோ ஸ்டிராங்கா இருக்குன்னா.. அவ்ளோ திறமைசாலிகள் வல்லுநர்கள் இங்க சிவகாசி பட்டாசு தொழில்ல இருக்கிறாங்க. அதுக்காகத்தான் இத சின்ன ஜப்பான்னு சொல்லிட்டு இருக்காங்க.

இன்னைக்கு சைனா ப்ராடக்ட் எல்லாம் உள்ள வருதுன்னு நம்மளோட வேலைகள் வெளிய வரலன்னு உங்களோட மனக்குமுறல் எல்லாத்துக்குமே தீர்வு காண முடியும். அதிமுக - தேமுதிக கூட்டணி முரசு சின்னத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் கேப்டன் மகனா,  எடப்பாடி அண்ணன் ஆசைப்பட்ட வேட்பாளரா, நிச்சயம் டெல்லில போய் உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.” எனப் பேசி சைகையால் முரசு கொட்டினார் விஜய பிரபாகரன்.

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.