Skip to main content

தமிழக எம்.பிக்களின் மரியாதையை இவர்கள் கெடுக்கிறார்கள் - இள. புகழேந்தி

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

  Ela Pugazhenthi Interview

 

மணிப்பூர் விவகாரம் மற்றும் தற்கால அரசியல் குறித்துப் பல்வேறு கருத்துக்களை நம்மோடு திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி பகிர்ந்துகொள்கிறார்

 

பாஜகவினர் முழுமையாக ஊழலில் திளைத்தவர்கள். அதற்கான உதாரணமாக கமிஷன் வாங்கிக்கொண்டு கர்நாடகாவில் அவர்கள் கட்டிய பாலங்கள் இருக்கின்றன. மற்ற மாநிலங்களில் இவர்கள் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை. பாசிச பாஜக அரசின் கொடூரமான சுயரூபங்கள் இப்போது வெளிப்படுகின்றன. வட மாநிலங்களில் பாலமே கட்டாமல் கட்டியதாகக் கூறி இவர்கள் கமிஷன் அடிக்கிறார்கள். 

 

அண்ணாமலை தன்னைப் பெரிய மேதாவி போல் நினைத்துக்கொண்டு உளறுகிறார். 'இந்தியா' என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குப் பெயர் வைத்தது பாஜகவுக்கு உறுத்துகிறது. அதனால்தான் இதை கிழக்கிந்தியக் கம்பெனியோடு மோடி ஒப்பிடுகிறார். தங்களுடைய திட்டங்களுக்கு இந்தியா என்கிற பெயரை வைத்து இதை ஆரம்பித்து வைத்தது பாஜக தான். இந்தியா கூட்டணியைப் பார்த்து மோடி பயத்தில் அங்கு உளறிக் கொண்டிருக்கிறார், அதையே அண்ணாமலை இங்கு செய்கிறார். 

 

கிழக்கிந்தியக் கம்பெனியோடு தொடர்பு வைத்திருந்தவர்கள் இவர்கள்தான். இரட்டை எஞ்சின் ஆட்சியில்தான் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது என்று அனைத்து ஊர்களுக்கும் சென்று பேசி வந்தார் மோடி. ஆனால் உங்கள் இரட்டை எஞ்சின் ஆட்சியின் லட்சணத்தை மணிப்பூரில் நாங்கள் பார்த்துவிட்டோம். மோடிக்கு மணிப்பூர் மக்களின் பிரச்சனையை விட அமெரிக்கா செல்வதுதான் முக்கியமாக இருக்கிறது என்று பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரே பேட்டி கொடுத்துள்ளார். மோடியின் தாமதத்தால்தான் பல்வேறு கொடூரங்கள் மணிப்பூரில் அரங்கேறின.

 

மணிப்பூர் பிரச்சனை குறித்து மோடி நாடாளுமன்றத்தில் பேச மறுக்கிறார். அதனால்தான் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீதான விவாதத்தின் போது மோடி நிச்சயம் பாராளுமன்றத்திற்கு வந்தாக வேண்டும். ஏற்கனவே அண்ணாமலை DMK Files என்கிற முதல் பாகத்தை வெளியிட்டார். இப்போது அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தில் அவர் என்ன கிழித்தார்? ஊழல் பட்டியல் என்று சொல்லி பொதுவெளியில் இருக்கும் சொத்துப் பட்டியலைத்தான் அவர் வெளியிடுகிறார்.

 

தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எப்போதும் டெல்லியில் ஒரு மரியாதை உண்டு. அதையெல்லாம் கெடுக்கும் வகையில் அதிமுகவின் சி.வி.சண்முகம், மணிப்பூர் பற்றி எரியும் நிலையில் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்துப் புகார் கொடுக்கிறார். எதையாவது பேச வேண்டும் என்று இவர்கள் பேசுகிறார்கள். முதலமைச்சர் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகிறார். எந்தவிதமான குழப்பமும் இங்கு இல்லை. பாஜக மட்டுமல்லாமல் அதிமுகவினரும் இங்கு மதக்கலவரம் ஏற்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். இப்போது அதிமுக என்பது அமித்ஷா திமுகவாகத் தான் இருக்கிறது.

 


 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.