Skip to main content

அண்ணா பற்றிய பேச்சு; அண்ணாமலை மீது கடுப்பான தேவர் அமைப்புகள் -  இள. புகழேந்தி விளக்கம்

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Ela Pugazhendi | Muthuramalinga Thevar | Annadurai | DMK

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

மக்களால் போற்றப்படும் மாபெரும் தலைவர்களை எல்லாம் வரலாறுகளை படிக்காமல் இழிவாக அண்ணாமலை பேசி வருகிறார். ஆனால், அண்ணாமலை சார்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் இந்து மத நம்பிக்கையுள்ள காந்தியை சுட்டுக் கொன்றது. இதனை வரலாற்றில் இருந்து படித்து நாங்கள் பேசுகிறோம். இருந்தும் அண்ணாமலை வேண்டுமென்றே அண்ணாதுரை அவர்களை இப்படி விமர்சித்துள்ளார். ஏன், இதற்கு தேவர் அமைப்புகளும் கூட எதிர்ப்பு தெரிவித்தது. ஏனென்றால், 1956ல் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தை பி.டி.ஆர் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார். கூட்டத்தை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து நடத்த வேண்டாம் என முத்துராமலிங்கம் அறிவுறுத்தியுள்ளார். கோவில் இடம் என்பதால் பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்கவே இப்படி அவர் சொல்லியுள்ளார். பின்னர், அடுத்த நாள் கூட்டம் தமுக்கம் மைதானத்தில் தொடர்ந்து நடைபெற்றது. எனவே அண்ணாமலை, முத்துராமலிங்கம் ‘ரத்த அபிஷேகம் செய்ய சொன்னார்’ என பரப்பி அவரையும் அவமானப்படுத்துகிறார். ஆனால், அண்ணாமலைக்கும் சேர்த்து போராடியவர் தான் அண்ணாதுரை. இதற்கு திமுக தரப்பில் இருந்தும் பதிலடி கொடுத்து பின்னர் நிறுத்திவிட்டோம். மறுபுறம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ‘அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டிருந்தால் உன் நாக்கு அழிந்து விடும்’ என பதிலளித்துள்ளார். எனவே, நாக்பூர் கூட்டத்தின் உத்தரவில் தான் அண்ணாமலை இவ்வாறு செயல்படுகிறார். இதற்கு அமித்ஷாவும், மோடியும் கூட காரணமாக இருக்கலாம். இதனால்தான் அண்ணாமலை தமிழகத்தில் பிரச்சனையை கிளப்பி கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். இதனால் திமுக அவரை விமர்சிப்பதை தவிர்த்து வருகிறது. 

 

ஜி20 கூட்டம் என்பது சுழற்சி முறையில் நடைபெறுவது தான். ஆனால், பிரதமர் மோடி தன்னை உலகத் தலைவர் போல சித்தரித்துக் கொள்கிறார். இவர்கள் செய்தது அங்கு அருகில் இருந்த பகுதிகளை துணியை வைத்து அடைத்தது தான். சமீபத்தில் கூட கனடா சொல்கிறது, இந்திய தூதரகம் இங்கே இருக்கக் கூடாது என்று. மேலும், இந்தியா-கனடா இடையேயான ஒப்பந்தமும் முறிந்துவிட்டது எனவும் அறிவிக்கின்றனர். இதேபோல, நியூயார்க் டைம்ஸ், ‘மோடி நடத்திய ஜி20 கூட்டம் அவரின் சுய விளம்பரம். இது தேர்தலுக்கு செய்த பிரசாரம் போல தான் இருந்தது’ என்றும் விமர்சித்து செய்தி வெளியிட்டது. இப்படி உலகில் பல ஊடகங்கள் ஜி20யை விமர்சிக்கிறது. ஆனால், மோடி உறசாகமாக புதிய நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுக்கிறார். இதற்கு நமது எம்.பி. திருச்சி சிவா அவர்களும் நாடாளுமன்றத்தில் தக்க விமர்சனம் அளித்திருந்தார். தொடர்ந்து, தற்போது வழங்கியுள்ள 33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு கூட திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றிதான்.  சனாதனத்திற்கு எதிராக இருந்தாலும் தேர்தலுக்காக அவர்கள் இதனை செய்துள்ளனர். இதுமட்டுமின்றி மறைமுகமாக, தேர்தல் ஆணையத்தை தேர்வு செய்வதில், உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கியுள்ளனர். பின்னர், அந்த இடத்திற்கு ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரரை அமர்த்தி தங்களுக்கு வேண்டியதை அவர்கள் செய்வர். மேலும், தேர்தல் ஆணையத்தையும் அவர்கள் குறி வைத்துள்ளார்கள் என்றும் தெரிகிறது. இந்த புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்தும் அவர்கள் எந்தவித முன் குறிப்புகளும் வழங்கவில்லை. எனவே, இந்த புதிய நாடாளுமன்றத்தில் நடக்கும் முதல் கூட்டம் ஆரோக்கியமாக எனக்கு தெரியவில்லை. இதற்கு காரணம் மோடியின் அரசு தான். இவ்வளவு பேசும் அண்ணாமலை ஐ.பி.எஸ். ஆனதே அன்று பெரியார், அம்பேத்கர் சேர்ந்து வலியுறுத்திய 1951 சட்டத் திருத்தம் தான் காரணம். அதைவிடுத்து இன்று சனாதனம் தான் உயிர் என அண்ணாமலை பேசுகிறார். இதற்கெல்லாம் சேர்த்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரு முடிவு எட்டப்படும்.

 

எடப்பாடி அவர்கள் முதல்வராக இருப்பதற்கு தகுதியில்லாதவர். அவர் பிறர் காலில் விழுந்து தானே பதவிக்கு வந்தார். மேலும், அவரின் ஆட்சியில் தான் தொடர்ந்து ஊழல் நடைபெற்றது. மாறாக, திமுக அனைவருக்கும் நன்மை செய்ய இயங்குகிறது. இதன் தொடக்கம் தான் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம், தற்போது அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்பதெல்லாம்.

 

அனைத்து பெண்களுக்கும் ஏன் தரவில்லை எனக் கூறி கோடீஸ்வர, வருமானவரி கட்டும், அரசு வேலை செய்யும் பெண்களுக்கு ஆதரவாக சிலர் வாதிடுகிறார்கள். மாறாக சில பெண்களே முன்வந்து முதலமைச்சரை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. சீமான் போன்றோர் முனிசிபாலிட்டிக்கு கூட செல்லாமல் எதனையாவது பேச வேண்டியது. இந்திய துணைக் கண்டத்தில் இருக்கும் நாடுதான் தமிழ்நாடு. அது ஒன்றும் தனி நாடு அல்ல. மேலும், தமிழ்நாடு கல்வி, மருத்துவம் போன்றவற்றில் முதன்மை வகிக்கிறது. எனவே, இதனையெல்லாம் அறிந்து கொள்ளாமல் சீமான் போன்றோர் பேசுகிறார்கள். 

 

நம் முதல்வரின் செயல்பாடு குறித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தெல்லாம் ஆர்வமுடன் விசாரிக்கிறார்கள். ஆனால், சீமான் சொல்ல வருவது, கஷ்டப்படுகிற பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் உதவி செய்யக்கூடாது என்பது போலத்தான் இருக்கிறது. இதுவே சீமானின் மறைமுக நோக்கமாக இருந்து வருகிறது. இவரின் நோக்கத்தை புரிந்துகொண்டால் அவரின் நிலை குறித்து அறியலாம்.

 


 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.