Skip to main content

கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார் - பெங்களூர் புகழேந்தி தடாலடி!

Published on 26/08/2021 | Edited on 27/08/2021
பர

 

கடந்த சில நாட்களாக அதிமுக தலைமையை அசைத்து பார்த்து வருகிறது கொடநாடு கொலை வழக்கு. தன்னை இந்த வழக்கில் சேர்க்க முயற்சி நடப்பதாக, சபாநாயர் அனுமதி தராத நிலையிலும் பேரவையில் இதுதொடர்பாக பேசினார் எடப்பாடி பழனிசாமி. அடுத்தடுத்த நாளில் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி பேரவையில் விவாதிக்கலாம் என்று சபாநாயகரிடம் மனு அளித்த நிலையில், நீதிமன்றத்தில் உள்ள வழக்கை பற்றி பேரவையில் விவாதமா? என்று அதிமுக தலைவர்கள் எதிர்த்தார்கள். நீங்கள் தானே முதலில் பேசினீர்கள் என்று எதிர் தரப்பு கேட்டால், அதற்கு அதிமுக தரப்பு அமைதியாகி விடுகிறார்கள். அரசியல்வாதிகள் மீது வழக்குகள் வருவது இயல்பான ஒன்றுதானே! எதற்காக எடப்பாடி உள்ளிட்டவர்கள் பதறுகிறார்கள், அதில் என்ன சூட்சம் உள்ளது என்பது குறித்து அதிமுகவின் முன்னாள் பொறுப்பாளார் பெங்களூர் புகழேந்தியிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம் நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது முதலில் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது, பிறகு புகாருக்குள்ளான அமைச்சர்கள் மீது ரெய்டு நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கொடநாடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? 


ஒரு கொலை நடந்து முடிந்துள்ளது. அதில் முன்னாள் முதல்வரின் பெரும் அடிபடுகிறது என்ற சூழ்நிலையில், மக்கள் இந்த விவகாரத்தில் என்ன நடைபெற்றது, அதில் ஏன் இவர் பெயர் அடிபடுகிறது என்ற கோணத்தில் சிந்திப்பார்கள். இவரை நல்லவர் என்று நினைத்தோமே, கடைசியில் கதை ஏன் இவ்வாறு செல்கிறது என்று அவர்களுக்கு தோணும். சாதாரண மனிதர்கள் அனைவருக்கும் இந்த எண்ணங்கள் வருவது இயற்கையான ஒன்றுதான். இவர் ஏன் பயப்படுகிறார், நான் இல்லை, இல்லை என்று இவர் ஏன் கத்துகிறார் என்ற எண்ணமே, அவரின் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட காரணமாக இருக்கிறது. 


எதையும் தந்திக்க தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறாமல், என் பெயரை சேர்க்க முயல்கிறார்கள், இது அரசியல் பழிவாங்கும் முயற்சி என்று கூறுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? 


அரசு அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும், முதல்வராக இருந்தவர்கள், இருக்கிறவர்களுக்கு அது மிக முக்கிய ஒன்றாகும். இன்றைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தக்க பாதுகாப்பு கொடுத்து வருகிறது. ஆனால் இவர்கள் அம்மா, அம்மா என்று வார்த்தைக்கு வார்த்தை அழைக்கிறார்கள். ஆனால், அவர்களின் வீட்டிற்கு என்ன பாதுகாப்பு கொடுத்தார்கள். அம்மா வாழ்ந்த இடம் என்று இவர்கள் கூறுகிறார்கள், ஆனால் ஒரு காவலர்கள் கூட அங்கே இல்லை. அங்கிருந்த அனைத்து காவலர்களையும் இவர்கள் அப்புறப்படுத்தியுள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் அங்கே போலிஸ் என்று ஒருவர் கூட இல்லை. ராம் பகதூர் என்ற ஒருவர் மட்டுமே இருந்தார். அவரையும் கொலை செய்துவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி முதலில் காவலர்கள் எல்லாம் விலக்கப்பட என்ன காரணம் என்று சொல்ல வேண்டும். 


அவர் சொல்ல வில்லை என்றால் அவரின் மௌத் பீஸாக ஒருவரை வைத்துள்ளாரே ஜெயக்குமார், அவர் சொல்ல வேண்டியது தானே! மின் மிகை மாநிலம் என்று சொல்லிவந்த நிலையில், அங்கே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. ஜெனரேட்டர் அங்கே இருக்கிறது. இருந்தும் இத்துணை அட்டுழியங்களும் அங்கே நடந்துள்ளது. ஆனால் யாரும் அங்கே சென்று என்ன நடந்தது என்று பார்க்கவில்லை. இதுவரை எடப்பாடி அங்கே சென்று பார்த்துள்ளாரா? இல்லை, அந்த பகுதியை சேர்ந்த அமைச்சர் வேலுமணி அங்கே சென்றுள்ளாரா? ஒருவரும் அங்கே செல்லவில்லை. அம்மா வாழ்ந்த வீட்டில் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள கூட இவர்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் மீது அனைவருக்கும் சந்தேகம் வருவது இயற்கை தானே? 


இவர்கள் கரடி கதை சொல்கிறார்கள், இந்த கதையை எல்லாம் யாரும் நம்ப மாட்டார்கள்.  கரடி பொம்மையையும், கடிகாரத்தையும் திருட, கொள்ளையர்கள் கொலை செய்துவிட்டு உள்ளே வந்திருப்பார்களா? இதை யாரும் ஏற்றுக்கொள்வார்களா? திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால் இந்த கொலை வழக்கு பற்றி விசாரிப்பதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள். ஆனாலும், தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக விரைவாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை இதுதொடர்பாக தீர்மானம் ஒன்றை கொண்டு வரப்போகிறார் என்றால் உடனே அடித்துப்பிடித்து அறிக்கை வெளியிடுகிறார்கள்.  இவர்களுக்கு எதற்காக இவ்வளவு பயம்? நீங்கள் கூறுவது போல எதையும் தந்திக்க தயார் என்று சொல்ல வேண்டியதுதானே? எதற்காக எம்எல்ஏக்களை தரையில் அமர வைத்து கத்தவிட வேண்டும். ஆனால் ஒன்று, கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி மாட்டியதில் அண்ணன் பன்னீர்செல்வம் மகிழ்ச்சியாக இருக்கிறார். 
 

நீதிமன்றத்தில் கொடநாடு விஷயம் தொடர்பாக வழக்கு இருக்கும் போது அதைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளாரே? 


நீட் விவகாரம், 7 பேர் விடுதலையில் தாமதம், சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு இருக்கிறது. அப்படி இருக்கையில், இதை கிளறியது யார்? முதல்வர் ஸ்டாலினா இதை பற்றி பேசினார். சட்டப்பேரவையில் சபாநாயகர் அனுமதி இல்லாமல் இதை பெற்றி பேசியதே எடப்பாடி பழனிசாமி தான். சபாநாயகர் பேச கூடாது என அனுமதி மறுத்த போதிலும், விடாப்பிடியாக கொடநாடு தொடர்பாக பேசியவர் அவர்தான். ஆகையால் கொடநாடு விவகாரம் இந்த அளவிற்கு போனதற்கு எடப்பாடி பழனிசாமிதான் முழுமுதல் காரணம். ஆனால் இந்த விவகாரத்தில் எடப்பாடி, ஜெயகுமார் உள்ளிட்டவர்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள். கொடநாடு விவகாரத்தில் பேரவையில் போராட்டம் நடத்த தெரிந்த இவர்களுக்கு, பொதுப் பிரச்சனைகளில் இதுவரை இப்படி போராட்டம் நடத்தினார்களா? இவர்கள் யாருக்காக செயல்படுகிறார்கள் என்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தன் நலனை தாண்டி இவர்கள் யாரும் சிந்திப்பதேயில்லை. இந்த விஷயத்தில் அது அப்பட்டமாக தெரிய வந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும். 

 

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“எடப்பாடி பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் மறக்க மாட்டார்கள்” - திமுக காட்டம்! 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டம், உதய்மின் திட்டம் போன்ற பா.ஜ.க. அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிகையில், “எடப்பாடி பழனிசாமி ஏறத்தாழ நான்கு ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கோ, தமிழ் மொழிக்கோ அவரால் சிறு பயனும் இல்லை. அவரால் பயன் கூட வேண்டாம். அவர் பாதகம் செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லவா. பதவி சுகத்தை அனுபவித்தார். ஆனால், தமிழர்களுக்குப் பாதகங்கள் பல செய்தார். எந்த ஒரு அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல், தன்னெழுச்சியாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் திரண்டு பல மாதங்கள் போராடினார்கள். ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் அப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்குப் புற்றுநோய் முதலான கொடிய நோய்கள் ஏற்பட்டு, அவர்கள் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி திரண்டு எழுந்து போராடினார்கள். அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொன்றது பழனிச்சாமியின் காவல்துறை. ஒரு பெண்ணின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக் கொன்றார்கள். ஒரு தந்தை கண் எதிரே அவர் மகன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தக் காட்சிகளை எல்லாம் கண்ட மக்கள் பதறினார்கள். இந்தக் கொடுமைகள் குறித்து அப்போதைய முதலமைச்சர் பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தொலைக்காட்சியில் பார்த்துத்தான் நான் தெரிந்து கொண்டேன் என்றார் நிதானமாக. ஒரு முதலமைச்சர் இப்படிக் கூறியது நியாயமா?. அந்தக் கொடிய துப்பாக்கிச் சூடு பற்றி விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா தலைமையிலான ஆணையம் அந்தச் சம்பவம் குறித்து ஏற்கெனவே அவருக்குத் தெரியும் என்று கூறி, பழனிசாமியின் பொய்முகத்தை வெளிப்படுத்தியது.

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைகள் :

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

பொள்ளாச்சியில் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள், 200க்கும் மேற்பட்ட மகளிரை மிரட்டி, கற்பழித்து கொடுமைகளுக்கு ஆளாக்கினர். மகளிர் சங்கங்கள் போராடின. பாதிக்கப்பட்ட மகளிர் கூறியும் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் பழனிசாமி.

நீட் தேர்வை அனுமதித்த பழனிசாமி : 

அரியலூர் அனிதா முதல் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களும் மகளிரும் தற்கொலை செய்து கொண்ட கொடுமைகளுக்குக் காரணமானவர் பழனிசாமி. அவர் தான் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவர். ஜெயலலிதா இருந்தவரை நீட்தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை. ஆனால் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவரும் பழனிசாமிதானே.

உதய் மின் திட்டத்தை அனுமதித்தவரும் பழனிசாமியே :

உதய் மின் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு நன்மை இல்லை. தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநிலங்கள் வாங்க வேண்டும். தனியார் மின் நிறுவனங்கள் மின்சாரத்தை மாநிலங்களில் விற்பனை செய்து, வங்கியில் வாங்கிய கடன்களைச் செலுத்தி அவை லாபம் சம்பாதிக்கும். இத்திட்டத்தை ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாடு ஏற்கவில்லை. அவர் மறைந்த பின் உதய மின் திட்டத்தை ஏற்றார் பழனிசாமி. இதனால், மின்வாரியத்தின் கடன் 40 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு ஏற்று அதன் நிதிச்சுமை தமிழ்நாடு அரசின் மேல் விழுந்தது. இதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழனிசாமியை பாதம் தாங்கிப் பழனிசாமி என்று கூறுகிறார்.

இன்னும் ஒரு வேடிக்கை :

பழனிசாமி சொல்கிறார் நான் என் உழைப்பால்தான் முதலமைச்சர் பதவிக்கு உழைத்து முன்னுக்கு வந்தேன் என்று. பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பதை ஊரும், உலகமும் தொலைக்காட்சியில் பார்த்துக் கைகொட்டி சிரித்ததே. அவர் மண்புழு போல தரையில் ஊர்ந்து சென்று முதலமைச்சர் ஆனதுடன், யாரால் முதலமைச்சர் ஆனாரோ அவருக்கே துரோகம் செய்தவர் அல்லவா பழனிசாமி. அது மட்டும் அல்ல கொடநாடு கோட்டைக்குள் புகுந்து காவலரைக் கொன்று அங்கிருந்த ஊழல் பண மூட்டைகளைக் கொள்ளையடித்த கும்பல், எங்களை ஏவியது பழனிசாமிதான் என்று காவல்துறையிடம் கூறி பழனிசாமியின் பொய்முகத்தைத் தோலுரித்துக் காட்டியதை மறக்க முடியுமா? உறவினர்களுக்கு அரசு டெண்டர் எதுவும் வழங்கக்கூடாது எனும் விதிகளுக்கு மாறாக, தன்னுடைய சம்பந்திக்கு அரசுப் பணிகளை டெண்டர் மூலம் வாரி வழங்கி ஊழல் செய்தவர் பழனிச்சாமி என்பதை அவர் மறுக்க முடியுமா?.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த பழனிச்சாமி : 

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

பா.ஜ.க.அரசின் பாதகச் செயல்களில் ஒன்று சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம். அச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது அ.தி.மு.க. எம்.பி.க்கள் 11 பேர் வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டம் நிறைவேறி இருக்காது. ஆனால், அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து கொண்டது பழனிசாமியின் அ.தி.மு.க.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் பழனிசாமி :

எங்கு சென்றாலும், தான் ஒரு விவசாயி என்று கூறிவரும் பழனிசாமி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் என்பதை யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

தொழில் வளர்ச்சியில் கடைசி இடம் :

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டைக் கடைசி இடத்திற்குத் தள்ளியது இந்த பழனிசாமி ஆட்சிதானே.

ஒரே நாடு ஒரே தேர்தல் : 

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே உணவு என்பதை மட்டுமல்லாமல், பாஜக ஆட்சி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறியதைக் கேட்டு உடனே டெல்லிக்கு ஓடிச்சென்று பா.ஜ.க. அரசிடம் ஆதரவு தெரிவித்தவர் பழனிசாமி தானே. இப்படித் தமிழ்நாட்டை பா.ஜ.க.விடம் அடகு வைத்து பிரதமரின் பாதம் தாங்கிய பழனிசாமி இப்பொழுது பா.ஜ.கவிடம் கூட்டணி இல்லை என்று கூறி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகள் முழுவதும் தி.மு.க கூட்டணிக்கு சென்று விடக்கூடாது என வஞ்சக நோக்கத்துடன் பிதற்றுகிறார். பாஜ.க.வுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ள பழனிசாமியின் செயலை இனியும் தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்கு ஏமாளிகள் அல்ல” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.