Skip to main content

கரன்சி பாசனத்திற்கு உதவிய காக்கிகள்! - எடப்பாடி தரப்பை நம்பிக்கையூட்டும் கணக்கு!!!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

                                             dddd

                                                                                                                        

ஏப்ரல் 6-ஆம் தேதி பரபரப்பாக நடந்த வாக்குப்பதிவில், வாக்காளர்கள் மத்தியில் புதிய மாற்றத்தையும் எழுச்சியையும் தெளிவாகவே பார்க்க முடிந்தது. கிட்டத்தட்ட 73% வாக்குப்பதிவு நடந்தது. மதியம் ஒரு மணிக்குள் 40 சதவீத பேர் ஆர்வமாக வந்து வாக்களித்திருக்கிறார்கள். 

 

வாக்குப்பதிவு நேரத்தில் தமிழக அரசின் செய்தித்துறையிடமே, அதிரடி மாற்றத்தைப் பார்க்க முடிந்தது. செய்தி மக்கள் தொடர்புத் துறை, பல ஆண்டுகளாகவே அ.தி.மு.க.வின் பிரச்சார சாதனமாகவே செயல்பட்டு வந்தது. அது வெளியிடும் செய்திகளிலும் படங்களிலும் அரசின் திட்டங்களோடு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மட்டும்தான் இடம்பெறுவார்கள். இந்த 10 ஆண்டுகளில் உலகமகா அதிசயமாக முதல்முறையாக, செய்தி மக்கள் தொடர்புத் துறை, எதிர்க்கட்சித் தலைவரான தி.மு.க. ஸ்டாலின் வாக்களித்ததை, செய்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதையே, வாக்குப்பதிவின் போக்கைக் காட்டுவதாக, அரசியல் நோக்கர்களும் அதிகாரிகளும் பார்க்கிறார்கள்.

 

அதே சமயம், எடப்பாடி தரப்பும் கடைசி வரை நம்பிக்கையூட்டும் கணக்குகளைப் போட்டு வைத்துள்ளது. நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் எடுத்த கருத்துக் கணிப்புகள், எடப்பாடி தரப்புக்கு தொடர்ந்து பலத்த அதிர்ச்சியைத் தந்ததால், உளவுத்துறை மற்றும் முக்கியப் புள்ளிகள் மூலமாக, கொஞ்சம் பூஸ்ட் தரும்படியான சர்வே ஒன்றைக் கொடுங்கள் என்று எடப்பாடி தரப்பு கேட்டு வாங்கியுள்ளது.

 

அவர்கள் குழம்பிக் குழம்பி பல்வேறு கணக்குகளைப் போட்டுப் பார்த்துட்டு, அ.தி.மு.க. 85, பா.ம.க. 9, பா.ஜ.க. 8, த.மா.கா. 2 -என்றெல்லாம் கணக்குப் போட்டு, கடைசிக் கட்டத்திலும் பண விநியோகம் நடந்தால், அ.தி.மு.க. கூட்டணி 100-ல் இருந்து 110 தொகுதிகள் வரை பிடித்து, ஆட்சியில் அமரலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். 

 

இதைக் கையில் வைத்துக்கொண்டுதான், பல தொகுதிகளிலும் வைட்டமின் 'ப' மூலம் தெம்பு ஏற்றியது எடப்பாடி தரப்பு. எல்லோருமே பெரிய அதிகாரிகளாக இருந்ததால் அவர்களின் வாகனங்கள் சோதனைக்கு ஆளாகாமல் சென்றுள்ளது. இப்படி தமிழகம் முழுக்க, அதிகாரிகள் மூலமாகவே டிஸ்ட்ரிபியூஷன் நடந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. காவல்துறையின் உதவியோடு பணம் அனுப்பப்பட்டுவிட்டதால், அது தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக மாயங்கள் செய்யும்னு எடப்பாடி நம்பறார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.