சிறுமி ஹாசினி கொலை வழக்கின்தீர்ப்பு வர இருக்கிறது.துன்புறுத்தி கொலை செய்து எரித்த தஸ்வந்த்திற்கு என்னதண்டனை என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் மக்களுக்கு கற்றுத் தரும் பாடங்கள் என்னவென்றுடாக்டர். ஷாலினி நக்கீரனுக்கு அளித்த பேட்டி...

Dr.Shalini about Hasini Murder

யாரிடம் கவனமாக இருக்கவேண்டும்...

Advertisment

சமுதாயத்தில் நல்ல பையன், தத்துவங்களை பேசுபவன், பக்திமான் என பெயர் எடுத்தவர்கள்தான்குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்வதை பார்க்கிறோம்.மற்றபடி முரட்டுத்தனமானவர்கள்,பொதுவிஷயங்களில் பங்கு கொள்பவர்கள் தன் கவர்ச்சியால் பலரை கவர முடியும் என நம்பிக்கை இருப்பதால் அவர்கள் அவர்களுக்கு தகுதியான, சரிசமமான பெண்களுடன் உறவில் ஈடுபட முடிகிறது. தனக்கு சரிசமமான பெண்களை கவர முடியாதவர்கள்தான் குழந்தைகளை இலக்காக பார்க்கின்றனர்.

பெற்றோரிடம்எதற்குமுக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற தெளிவு இருக்கவேண்டும்...

பொதுவாக பெற்றோர்கள் தனது குழந்தை சந்தோசமாக இருக்க வேண்டும். நம் பெற்றோர் நமக்கு அளிக்காததை நாம் நம் பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டும் என்று சந்தோசத்திற்கே முக்கியத்துவம் தருகின்றனர். இரண்டாவது, குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று அதற்கு முக்கியத்துவம் தருகின்றனர். அடுத்து, குழந்தைகளின் சாதனைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் இதைத்தவிரஅடிப்படையான விஷயங்களான ஒழுக்கம் மற்றும் அறம் சார்ந்த விஷயங்களை சொல்லித்தரமறந்துவிடுகின்றனர். ஒன்று, அதை பள்ளி சொல்லித்தர வேண்டும் என நினைக்கிறோம் அல்லது அது வாழ்க்கைக்கு அவசியமில்லை என்றுநினைக்கிறோம். இதுதான் நாம்தொடர்ந்து செய்துவரும் தவறு. அதனால்நாம்குழந்தைகளுக்கு அறத்தை கற்றுத்தர வேண்டும்.

Advertisment

Hasini murder

ஆண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியவை

தனது சுயகட்டுப்பாடை எப்படி வைத்துக்கொள்வது, பெண்களிடம் எப்படி கண்ணியமாகநடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லித்தர வேண்டும்.

பெண் குழந்தைகளை பற்றி எப்படி பேச வேண்டும்

பொதுவாக பெண் குழந்தைகளை நாம், "உனக்கு என்ன தெரியும் நீ பொண்ணுதான", என்றுபேசுவோம். இதைப்பார்க்கும்குழந்தைகள், பெண் ஏதோ ஒரு போக பொருள் என்றோ, தன்னைவிட மதிப்பு குறைந்தது என்றோ நினைத்து விடுகின்றனர். இதனாலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.

Daswanth Hasini Murder

ஊடகங்களுக்கும் இதில் பங்குண்டு

ஊடகங்கள் திரும்பத்திரும்ப பெண்ணை அரைகுறையாக காட்டுகின்றன. இதைப் பார்க்கிற ஆண்களுக்கு களவியல் இச்சைஅதிகமாக தூண்டப்படுகிறது. அதற்கு நிகரான துணை இல்லாததால் அவன் தன்னைவிட சிறியவர்களை தேடி அலைகிறான். ஒரு பக்கம் சுய கட்டுப்பாடோடு இருக்கவேண்டும், இன்னொரு பக்கம் பெற்றோர்கள் கவனமாக வளர்க்க வேண்டும் என்று சொல்லும்போதே மூன்றாவதாக ஊடகமும் இதில் வருகிறது. இந்த சமுதாயமும், ஊடகமும் ஆண்களை திரும்பத்திரும்ப தூண்டிவிடுகிறது. நாம் ஊடகம் என்றவுடன் திரைப்படங்களை மட்டுமே பார்ப்போம். ஆனால் விளம்பரங்களையும், தொலைக்காட்சி நாடகங்களையும், யூ-டியூப் வீடியோக்களையும்மறந்து விடுகிறோம். ஊடகம் என்றால் அனைத்தும்தான். அனைத்திற்குமே அந்த கட்டுப்பாடு அவசியம்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/SwMiuXHDziA.jpg?itok=IzliL2aW","video_url":" Video (Responsive, autoplaying)."]}