Skip to main content

'திருமணம், வளைகாப்பு, சடங்கு நிகழ்ச்சிகளில் பறை இசைக்கலாம்' அமெரிக்க பேராசிரியை தடாலடி!

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் சோயிக் செரினியன். இசையில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ள இவர், இசையின் மீதுள்ள ஆர்வத்தால் தமிழகம் வந்து மதுரையில் உள்ள கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் இசை குறித்து படித்துள்ளார். அதையும் தாண்டி நாட்டுபுற கலைகள் தொடர்பாக புத்தகம் எழுதி உள்ளார். அவரிடம் பறை இசை தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அவரை போன்றே அவரின் தமிழும் அழகாக இருந்தது. நம் கேள்விகளுக்கு அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,

 

 Dr. Zoe C. Sherinian speak about parai music




கிராமபுற கலைகளில் நீங்கள் நிறைய ஆராய்ச்சி செய்துள்ளீர்கள். குறிப்பாக பறை இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறீர்கள். அதற்கு என்ன காரணம். எதற்காக அதை தேர்ந்தெடுத்தீர்கள். அதனுடைய நோக்கம் என்ன?

தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரே என்னுடைய குருநாதர். அவரே எனக்கு ஆக்கமும், ஊக்கமுமாக இருந்துள்ளார். அதையும் தாண்டி சின்ன வயதில் இருந்தே நான் ஃடிரம் இசை மீது அதிக நாட்டம் கொண்டு இருப்பேன். குறுகிய காலத்தில் அதனை சிறப்பாக கையாளவும் கற்றுக்கொண்டேன். மேலும், அதை குறிப்பிட்டவர்கள் தான் இசைக்க வேண்டும் என்பதையும், அது அவர்களுக்கானது என்று மற்றவர்கள் திணிப்பதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

எதற்காக இந்தியாவை தேர்தெடுத்தீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாமா?

அமெரிக்காவில் நான் இருக்கும் போதே எனக்கு இசையின் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கும். குறிப்பாக கர்நாடக இசையை ஆர்வமாக கேட்பேன். இசை சம்பந்தமான பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வேன். அப்போது எனக்கு வயது பதினெட்டுதான். ஆனால், இசையின் மீதான ஆர்வம் மிக அதிகமாக இருந்தது. இதனால், மிருதங்கம், கர்நாடக இசை முதலியவற்றை ஆசிரியர் உதவியுடன் நானே கற்றேன். நாளடைவில் அதில் சிறப்பானதொரு பயிற்சியை ஆசிரியர்கள் வாயிலாக கற்றேன். தமிழகத்தில் மதுரையில் உள்ள கல்லூரிகயில் இரண்டு ஆண்டுகள் படித்தேன். அங்கு அதை பற்றிய புரிதல்  அதிகமாக கிடைத்தது. என்னுடைய தமிழ் ஆசிரியர் எப்போது தமிழ் வாழ்க என்று சொல்வார். அது எனக்கு ஊக்கமாக இருந்தது.

நீங்கள் தமிழில் பேசுவீர்களா?

நீங்கள் கேளுங்க, நான் பேசுகிறேன். எனக்கு நல்லா தமிழ் தெரியும். இந்த முப்பது வருடங்களில் 6 வருடங்கள் மதுரையில் இருந்தேன். இசை படித்தேன். ஆராய்ச்சி செய்தேன். அப்புறம் பி.ஹச்.டி படித்தேன். அதனால் எனக்கு தமிழ் புரியும், பிடிக்கும்.

இந்தியன் மிசியூக் மற்றும் ஃபோக் மியூசிக் பற்றி உங்களுடைய பார்வை எப்படி இருகிறது. 

உங்களுடைய கேள்வியை மிக நேர்த்தியாக கேட்டுள்ளீர்கள். பெரும்பாலான கிராமபுற மக்கள் என்ன வகையான இசையை கேட்கிறார்கள். ஃபோக் மியூசிக் தான் கேட்கிறார்கள். அவர்கள் கார்நாடக இசையை கேட்பதில்லை. எனவே இந்திய இசையே ஃபோக் இசையை மையமாக கொண்டுதான் செயல்படுவதாக நான் கருதுகிறேன்.

பெரும்பாலும் பறை இசை குறிப்பிட்ட நபர்களை சார்ந்ததாகவும், துக்க நிகழ்ச்சிகளில் மட்டுமே இசைக்கப்படுகின்றதை பற்றிய உங்களின் பார்வை என்ன?

நானும் அதை பற்றி படித்துள்ளேன். அவ்வாறு இருந்தால் அது தவிற்க்கப்பட வேண்டும். பறை அனைவருக்கும் பொதுவானது. பறை இசை நமக்கு மன மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தரும் என்பதே என்னுடைய எண்ணம். எனவே துக்க நிகழ்ச்சியில் மட்டும் பறை என்பது சிலருடைய தவறான புரிதல் என்றுதான் நான் கருதுகிறேன். திருமணம், வளைகாப்பு, சடங்கு என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பறை இசையை இசைக்கலாம்.

 

Next Story

கலங்கி நிற்கும் குடும்பத்தினர்; பவதாரிணி உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி (படங்கள்)

Published on 26/01/2024 | Edited on 26/01/2024

 

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி.

இசைஞானி இளையராஜாவின் செல்ல மகளான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்கோலாறு ஏற்பட்டது. இது தொடர்பாக மருத்துமனைக்கு சென்றபோது அவருக்கு புற்றுநோய் வந்திருப்பதாகக் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தார், அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்று தீவிர முயற்சி எடுத்துள்ளனர். அதன்படி, இந்த நோய்க்கு இலங்கையில் சிறந்த மருத்துவம் அளிப்பதாகத் தெரிந்துள்ளது. இதனையடுத்து, பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் இலங்கை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் தேதி மாலை 5.20 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

விமான மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட பவதாரணியின் உடலானது அவரது இல்லம் உள்ள அமைந்துள்ள தி நகர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். பிரபலங்களும் அஞ்சலி செலுத்த அங்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்புப் பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அவரது உடலுக்கு பல்வேறு பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ராமராஜன், இயக்குநர் வெற்றிமாறன், சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், நடனக் கலைஞர் காயத்ரி ரகுராம், நடிகர் சிவகுமார், திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் கார்த்தி, விஷால்,விஜய் ஆண்டனி, நடிகர் ஆனந்தராஜ்,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகை ராதிகா, நடிகர் ஸ்ரீகாந்த்  உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Next Story

பாடகி பவதாரிணி காலமானார்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Singer Bhavadharani passed away

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.

இளையராஜாவின் மகள் பவதாரிணி (47) இலங்கையில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளையராஜா இசையமைத்த ராசய்யா திரைப்படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா மஸ்தானா' பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து பாரதி படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடல் மூலம் பிரபலமானவர். அந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். அதனைத் தொடர்ந்து தனது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் அப்பா இளையராஜா ஆகியோர் இசையில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். தனித்துவமான குரலில் பாடி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றவர். இது சங்கீத திருநாளோ, காற்றில் வரும் கீதமே, ஒளியிலே தெரிவது தேவதையா உள்ளிட்ட பாடல்கள் இவரது குரலில் வந்த ஹிட் பாடல்களாகும்.

பாடல்கள் மட்டுமல்லாது தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் உள்ளார் பவதாரிணி. இலங்கை சென்றிருந்தவர் அங்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் காலமானார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த துயர சம்பவம் தமிழ் திரையுலத்தினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைத்துறையினர் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.