Skip to main content

"பாமகவின் இன்றைய நிலை... அதிமுகவின் கோஷ்டி மோதல்.." - சரவெடி பதிலளித்த மருத்துவர் காந்தராஜ்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

4545


அதிமுகவில் தலைமைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இது தொடர்ந்தால் வெற்றிவாய்ப்பு என்பது இல்லாமல் போய்விடும் என்று அதிமுக மூத்த உறுப்பினர் அன்வர் ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரிய அளவிலான கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மூத்த உறுப்பினர்கள் சிலர் எடப்பாடிக்கு ஆதரவாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கடுமையாக திட்டியதாகவும் தகவல் வெளியானது. அதே போன்று பாமக தரப்பிலும் ராமதாஸ் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகளிடம் காட்டமாக பேசினார். இந்நிலையில் அதிமுக, பாமகவில் தற்போது நடக்கும் நிகழ்வுகள் குறித்து அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு...

 

"நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற யுத்தம் அதிமுகவில் நடைபெற்று வருகிறது. எனவே இவர்களால் எந்த முடிவு எடுக்க முடியாது. எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் ஒன்றாக இந்த கட்சியை ஒருபோதும் நடத்திச் செல்ல வாய்ப்பில்லை என்றே அந்த கட்சியில் இருப்பவர்கள் தற்போது உறுதியாக நம்புகிறார்கள். எனவே இவர்கள் நடத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டமானாலும், இல்லை எந்த கூட்டமானாலும் இரண்டு தரப்பாகவே ஆதரவாளர்கள் இருப்பார்கள். எனவே கட்சி ஒற்றுமை பற்றி இவர்கள் சிந்திக்க கூட மாட்டார்கள். நமக்கு என்ன கிடைக்கிறது என்ற எண்ணமே அவர்களுக்கு பிரதானமாக இருக்கும். 

 

அதிமுகவைப் பொறுத்த வரையில் கட்சி கையைவிட்டுப் போவதை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. வரப் போகின்ற உள்ளாட்சித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல, அதிமுகவுக்கு அதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு. அதிமுகவின் தலைமை மாற்றம் வரும் வரை அதிமுகவுக்கு வளர்ச்சி என்பதே இல்லை.  பாமகவை பொறுத்தவரையில் பெரிய டாக்டர் ஐயா, சின்ன டாக்டர் ஐயா. அவர்கள் இருவரும் கரோனா காரணமாக நீண்ட நாட்களாக வெளியே வராமல் இருந்தனர். அதைப்பற்றி அக்கட்சியை சேர்ந்தவர்கள் கவலைப்பட்டார்களா? தொலைக்காட்சியில் கூட அவர்கள் எந்த விவாதத்திலும் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தனர். கேமரா வைத்தால் கூட கரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் யாரும் வெளியே வரவே இல்லையே. தலைவா நான் உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்லையே என்று எந்த தொண்டனாவது கேட்டானா? யாரும் அதைப்பற்றி பேசவில்லை என்றால் என்ன அர்த்தம். கட்சி அப்பவோ போய் விட்டது. ஊடகங்கள் இருப்பதால்தான் அவர்கள் இருவரும் வெளியே தெரிகிறார்கள்.இல்லை என்றால் அவர்கள் இருப்பதே யாருக்கும் தெரியாமல் போய்விடும். 

 

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.