Skip to main content

"அதிமுகவை தூக்கி சுமக்க வேண்டாம்!"  -தமிழக பாஜக டெல்லிக்கு மெசேஜ்!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

 

கேட்டது கிடைக்கவில்லையெனில் அதிமுகவை தூக்கிச் சுமக்க வேண்டாம் என பாஜகவின் தேசிய தலைமைக்கு மெசேஜ் தந்திருக்கிறார்கள் தமிழக பாஜகவினர் ! 

 

 bjp


     

மூன்றாண்டுகளாக முடங்கி கிடக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு. தேர்தலை எதிர்கொள்வதில் அதிமுக, திமுக கட்சிகளின் கூட்டணிகள் பரபரப்பாக இயங்கத் துவங்கியுள்ளன. விருப்ப மனுவை பெறுவதில் இந்த கட்சிகளிடம் வேகம் கூடியுள்ளது.

 

admk

தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத சூழலில், ஆளும் கட்சிக் கூட்டணியும் எதிர்க்கட்சி கூட்டணியும் இந்தளவுக்கு பரபரப்பை ஏற்படுத்துவதால், உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? என்கிற சந்தேகமும் தமிழக வாக்காளர்கள் மத்தியில் எதிரொலிக்கவே செய்கின்றன. 


 

Narasimhan bjp



இந்த நிலையில், கடந்த வாரம் டெல்லி சென்ற தமிழக பாஜக பிரமுகரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷை சந்தித்தார். தமிழக அரசியல் குறித்து சுமார் 40 நிமிடங்கள் இருவரும் ஆலோசித்தனர். குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தல் பற்றி விலாவாரியாக கேட்டறிந்தார் சந்தோஷ்.


 

 

அப்போது, பல புள்ளிவிபரங்களுடன் சுட்டிக்காட்டி பேசிய நரசிம்மன், ‘’ உள்ளாட்சி தேர்தல்தான் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற வைக்கும். பாஜகவின் அரசியல் தமிழக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளாட்சித் தேர்தலில் எந்த சமரசத்துக்கும் இடம் தந்து விடக்கூடாது. குறிப்பாக, குறைந்தபட்சம் 4 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு பாஜக போட்டியிட வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள 1 லட்சத்து 50 ஆயிரம்  பதவிகளில் 35 சதவீத இடங்களில் பாஜக போட்டியிடுவது அவசியம். அதனால், அதிமுக கூட்டணியில் இடங்களை பகிர்ந்துகொள்வது  தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்த 35 சதவீத இடங்களை கேட்டுப்பெற வேண்டும். இதற்கும் குறைவான இடங்களில் போட்டியிடுவது மத்திய ஆளும் கட்சியான பாஜகவின் வலிமையை பலகீனப்படுத்தும். அதனால், 4 மாநகராட்சி மேயர் பதவிகள் மற்றும் 35 சதவீத இடங்களை பெறுவதில் அதிமுக தலைமையிடம் கறாராக இருக்க வேண்டும். கேட்டது கிடைக்கவில்லையெனில் தனித்து போட்டியிடவும் பாஜக தயங்கக்கூடாது. பாஜகவை அதிமுக தூக்கி சுமப்பதாக அக்கட்சியினர் சொல்லி வருகிறார்கள். பாஜகவை அதிமுக சுமப்பதாக சொல்வது தவறு. பாஜகதான் அதிமுகவை தூக்கிச் சுமக்கிறது. அதனால், கேட்டது கிடைக்காது போனால் அதிமுகவை தூக்கி சுமப்பதை தவிர்க்க வேண்டும் ‘’ என விவரித்திருக்கிறார் நரசிம்மன். 


   

 

அவருடைய கருத்தினை உற்று கவனித்து கொண்ட சந்தோஷ், நரசிம்மனை பாராட்டியதுடன், " இந்த தகவல்களை தேசிய தலைமைக்கு தெரியப்படுத்துவேன் " என கூறியுள்ளார் மிக அழுத்தமாக! நரசிம்மனின் கருத்துக்களை போலவே தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் பலரும் டெல்லிக்கு தகவல்களை பாஸ் பண்ணி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.