Skip to main content

கனிமொழிக்கு எதிராக கலகம்! ராஜினாமா மூடில் கனிமொழி! 

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
Kanimozhi

 

கனிமொழியின் செல்வாக்கை குறைப்பதற்காக இளம் மகளிர் அணியை திமுகவில் உருவாக்க உதயநிதி தீவிரம் காட்டி வருவது கனிமொழி ஆதரவாளர்களை கொந்தளிக்க வைக்கிறது.

 

கரோனா நெருக்கடிகளையும் மீறி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் முகமாக அரசியல் பணிகள் திமுகவில் நடந்து வருகின்றன. ஷூம் மீட்டிங் மூலம் திமுக மா.செ.க்களிடமும், நிர்வாகிகளிடமும் அடிக்கடி விவாதித்து வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

 

இந்த நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, திமுகவில் இளம் பெண்கள் அணி ஒன்றை தனியாக உருவாக்க திட்டமிட்டு அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறார் என்கிறார்கள் திமுக மகளிர் அணியினர்.

 

இது குறித்து விரிவாக நம்மிடம் பேசிய மகளிர் அணியினர், ‘’உதயநிதியை இளைஞரணிக்கு செயலாளராக நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, இளம் பெண்கள் அணி உருவாக்க வேண்டும் என திட்டமிட்டனர்.

 

ஆனால், கட்சியில் உள்ள மகளிர் அணியின் வலிமையை பலகீனமாக்கவும், மகளிர் அணியின் செயலாளராக உள்ள கனிமொழியின் செல்வாக்கை குறைக்கவுமே இந்த இளம் மகளிர் அணி உருவாக்கப்படுவதாக சர்ச்சைகள் வெடிக்கும் என யோசித்து, உதயநிதியின் அந்த முயற்சிக்கு ஸ்டாலின் தடை போட்டார். இதனால், திட்டமிடப்பட்ட வேகத்திலேயே உதயநிதியின் புதிய முயற்சி முடக்கி வைக்கப்பட்டது.

 

முடக்கப்பட்ட அந்த முயற்சியைத்தான் மீண்டும் கையிலெடுத்திருக்கிறார் உதயநிதி. இதற்கு திமுக தலைமையின் ஒப்புதலும் தற்போது கிடைத்துள்ளது. இதனால், இளம் மகளிர் அணியை துவக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகின்றனர். திமுக மகளிர் அணியில் கனிமொழிக்குள்ள வலிமையும், மக்களிடம் உருவாகியுள்ள கனிமொழிக்கான செல்வாக்கும் இளைஞரணியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் கனிமொழி செல்வாக்கை உடைக்கவும் திமுக மகளிர் அணியை முதியோர் அணியாக மாற்றவுமே இந்த திட்டம். உதயநிதியின் இளம் பெண்கள் அணி வெளிப்படையாக உருவாகும்போது திமுகவில் அதிருப்திகளும் வெளிப்படையாக வெடிக்கும். அது, தேர்தல் அரசியலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்!‘’ என்கின்றனர்.

 

திமுகவின் சீனியர் மா.செ.க்கள் இருவரிடம் இது குறித்து நாம் பேசியபோது, “கனிமொழியின் அரசியல் வளர்ச்சி இளைஞர் அணிக்கு ஏனோ எட்டிக்காய் கசப்பாக இருக்கிறது. கட்சியில் இளைஞரணிக்கு இருக்கும் முக்கியத்துவம் வேறு எந்த ஒரு அணிக்கும் கொடுக்கப்படுவதில்லை. இளைஞர் அணியை போலவே மகளிர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளும் கடுமையாகவே உழைக்கின்றன. ஆனால், பலனை மட்டும் இளைஞரணி பெரிதாக அறுவடை செய்து கொள்கிறது.

 

கட்சியில் ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி மட்டுமே தெரிய வேண்டும் என்பது இளைஞரணியின் நோக்கம், கனிமொழி அதற்கு தடையாக இருக்கிறார். அதனால் கனிமொழிக்கு போட்டியாக அரசியல் செய்வதை வழக்கமாக்கி கொண்டார் உதயநிதி. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சனையின்போது அவர்களை சந்தித்து பேசினார் கனிமொழி. சில நாட்களிலேயே உதயநிதியும் டெல்லிக்கு சென்று அவர்களை சந்தித்தார்.

 

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணத்திற்கு நீதி கேட்டு கனிமொழி எடுத்த நடவடிக்கைகள் பல தரப்பினரின் பாரட்டைப் பெற்றது. வியாபாரிகள் குடும்பத்தை சந்தித்து திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட கட்சி நிதியையும் அவர்களுக்கு கொடுத்து ஆறுதல் படுத்தினார் கனிமொழி. அடுத்த நாளே உதயநிதியும் சாத்தான்குளத்துக்கு சென்று வியாபாரிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொன்னார். இப்படி எந்த இடங்களிலெல்லாம் கனிமொழி உயர்ந்து தெரிகிறாரோ அதையெல்லாம் உடைக்க உதயநிதி முயற்சிக்கிறார்.

 

இந்த மாதிரி செயல்பாடுகள் உதயநிதிக்கு எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கும் என யோசித்தே, கனிமொழி பொறுப்பிலுள்ள மகளிர் அணியை பலகீனமாக்க இளம் பெண்கள் அணியை உருவாக்க நினைக்கின்றனர். ஏற்கனவே சீனியர்கள் பலர் சில பல விசயங்களில் அதிர்ப்தியடைந்து வருகிறார்கள். இந்த நிலையில், கனிமொழிக்கு எதிராகவே அரசியல் செய்ய நினைப்பது கட்சிக்குத்தான் பலவீனம்” என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

 

கனிமொழிக்கு நெருக்கமான சி.ஐ.டி.காலனி தரப்பில் விசாரித்தபோது, “கலைஞரின் மகள்தான் கனிமொழி.  ஆனால், கலைஞர் குடும்பத்தினரே அவரை அழிக்க நினைப்பதுதான் ஜீரணிக்க முடியவில்லை. கனிமொழியின் அரசியல் வளர்ச்சி திமுகவுக்குத்தான் உதவப்போகிறது. இதனை ஏன் இளைஞரணியினர் உணர மறுக்கின்றனர். கலைஞர் இருந்தவரை இத்தகைய போக்குகள் இருந்ததில்லை.

 

கட்சியின் தலைவர் ஸ்டாலின் இடும் கட்டளைகளை செயலாற்றி வருபவர் கனிமொழி. உதயநிதியின் உத்தரவுகளை ஏற்க வேண்டிய அவசியமெல்லாம் கனிமொழிக்கு கிடையாது. ஸ்டாலினுக்காக எதையும் பொறுத்து கொள்வார். ஆனால், உதயநிதியின் ஆதிக்கம் கனிமொழியை அழிக்க நினைப்பதாக இருந்தால், கனிமொழியின் முடிவு வேறு விதமாக இருக்கும். அதேசமயம், உதயநிதி உருவாக்க துடிக்கும் இளம் பெண்கள் அணி திட்டம் கனிமொழியை காயப்படுத்தியிருக்கிறது. அவரும் மகளிர் அணியினரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இளம் பெண்கள் அணி வெளிப்படையாக உருவாக்கப்பட்டால் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளார் கனிமொழி” என விவரிக்கின்றனர்.

 

இது குறித்து கருத்தறிய திமுக இளைஞரணி நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, யாரும் கருத்து சொல்ல முன்வரவில்லை.

 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.