Skip to main content

தி.மு.க.வில் இளரத்தம்! சவால் களத்தில் உதயநிதி!

Published on 20/07/2021 | Edited on 23/07/2021

 

 DMK Uthayanidhi on the challenge field

 

தி.மு.க.வில் ரொம்ப காலத்திற்குப் பிறகு, மீண்டும் ஓர் இளைய பட்டாளம் களம் இறங்கியிருக்கிறது. சென்னையில் உள்ள மொத்த தொகுதிகளையும் தி.மு.க. வென்ற நிலையில், அருகருகேயுள்ள மூன்று தொகுதிகளான ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, எழும்பூர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.வாகியிருப்பவர்கள் இளந்தலைமுறையினர். 

 

 DMK Uthayanidhi on the challenge field

 

ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்புவை எதிர்த்து வெற்றி பெற்ற டாக்டர் எழிலன், கரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் தனது தொகுதியில் களமிறங்கி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். கலைஞர் குடும்பத்தினருக்கு வாக்குரிமை உள்ள தொகுதியின் எம்.எல்.ஏ.வாக முன்னோடியான  செயல்பாடுகளை மேற்கொண்ட அவர், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை-எளிய மாணவர்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் உரிய இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தரும் முகாம் ஒன்றை  முன்னெடுத்துள்ளார். ஆயிரம்விளக்குத் தொகுதியின் குடிசைப் பகுதிவாசிகளின் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் செயல்பாடு இது என்பதால் மற்ற தொகுதியிலும் இதனைப் பின்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க.வுக்குள்ளேயே இருக்கிறது.

 

 DMK Uthayanidhi on the challenge field

 

குடிசைப்பகுதிகள் - குடிசைமாற்றுவாரியக் குடியிருப்புகள் நிறைந்த தொகுதி, எழும்பூர். இங்கிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர் வழக்கறிஞர் பரந்தாமன். தொகுதி மக்களின் கோரிக்கைகளை நேரிலும், ஆன்லைன் மூலமும் பெற்று அவற்றை நிறைவேற்றுவது தொடர்பாக  அதிகாரிகளிடம் தொடர்ச்சியான  ஆலோசனைகளை மேற்கொள்கிறார். மாவட்ட செயலாளரும்  அமைச்சருமான சேகர்பாபுவின் ஆலோசனைப்படி கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை வார்டுதோறும் நேரில் சென்று மேற்கொண்டவர் எம்.எல்.ஏ. பரந்தாமன். தொகுதிக்கான  கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் எடுத்துச்  செல்கிறார்.

 

 DMK Uthayanidhi on the challenge field


 
கலைஞரின் பேரன், முதல்வரின் மகன் என்ற தகுதியுடன் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி தனது தொகுதியின் ஒவ்வொரு  பகுதிக்கும் நேரில் சென்று குறைகளைக் கேட்டு வருகிறார். தொகுதி போலவே அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும் குறுகலாகத்தான் இருக்கிறது. ஆனால், அங்கே நாள்தோறும் மனுக்களுடன் திரண்டு வரும் பொதுமக்களை சந்திக்கிறார். 

 

மீனவர் பகுதிகள், ஆற்றங்கரையோர மக்கள் என குடிசைகளிலும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளிலும் வசிக்கும் ஏழை மக்கள் அதிகமுள்ள தொகுதி இது. அந்தக் குடிசைகளுக்கு நேரில் சென்று மக்களின் வாழ்க்கை நிலையை அறிந்த உதயநிதி, அனைவருக்குமான குடியிருப்புகளைக் கட்டித் தரவேண்டுமென்ற கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். சிதிலமைடந்துள்ள குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளில் ஏற்கனவே இருப்பவர்களுக்கும், இன்னமும் குடியிருப்புகள் கிடைக்காதவர்களுக்கும் புதிய குடியிருப்புகளைக் கட்டித்தரும்போது, குறைந்தபட்சம் ஒரு பெட்ரூம் வசதியுடனும் கிச்சன், பாத்ரூம், ஹால் ஆகியவை போதுமான அளவிலும் இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் உதயநிதி.

 

கரோனா நேரத்தில், தடுப்பூசி விழிப்புணர்வை வீடுவீடாக சென்று மேற்கொண்ட உதயநிதி, தன்னிடம் கோரிக்கைகள் வைக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம், அவர்களுக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகளில் குறிப்பிட்ட சதவீதத்தை தனது தொகுதிவாசிகளுக்கு இலவசமாக வழங்கவேண்டும் எனக் கேட்டு, அதிகளவில் தடுப்பூசிகள் போடச் செய்தார். 

 

 DMK Uthayanidhi on the challenge field

 

“கலைஞர்  இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் முதல்வராகவும் இருந்திருக்கிறார். அப்போதுகூட கட்சி நிர்வாகிகள் இந்தளவு நேரில் வந்ததில்லை. ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் வந்ததில்லை. அ.தி.மு.க. சார்பில் இருந்த கவுன்சிலர்களும் எட்டிப்பார்க்கவில்லை. உதயநிதிதான் இப்ப ஒரு இடம் விடாமல் வருகிறார்” என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

 

தொகுதி விசிட்டில், ‘சேப்பாக்கம் மாடல்’ என்ற ட்ரெண்டை உருவாக்கிவிட்ட உதயநிதியிடம் பிற தொகுதிகவாசிகளும் மனுக்களை அனுப்புகிறார்கள். அவை முறைப்படி, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் அதற்குரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு, நடவடிக்கைகள் குறித்து உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

 

சென்னையில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல தொகுதிகளிலும் தி.மு.க.வில் இம்முறை இளையவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்களில் பலரும் களப்பணியை முதன்மையாகக் கொண்டு, தொகுதி மக்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறார்கள்.

 

தி.மு.க. தொடங்கப்பட்டபோது, அண்ணா உள்பட எல்லாருமே இளைஞர்கள்தான். காலப்போக்கில், அது சீனியர்களின் கட்சி ஆனது. அந்த நிலையில்தான், கட்சியில் இளையரத்தம் பாயவேண்டும் என்ற நோக்கத்துடன் 1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மதுரை  ஜான்சி ராணி பூங்காவில் தி.மு.க.வின் இளைஞரணியைத் தொடங்கி வைத்தார் கலைஞர். அதனை 30 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பேற்று நடத்தியவர் மு.க.ஸ்டாலின்.

 

இளைஞரணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தி.மு.க.வுக்கு  இன்னும் அதிகமாக இளரத்தம்  தேவைப்படுகிறது. தமிழகத்தில் வளர்ந்து வரும் புதிய இயக்கங்கள் ஏற்படுத்தும் போட்டிச் சூழலால், திராவிட இயக்கத்தின் கொள்கை அடிப்படையில் இளைஞர்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், மேற்கு மண்டலத்தில் அது பெரும் தோல்வியை சந்தித்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் உள்ள புதிய சவால்களை உணர்த்துவதாக உள்ளது.

 

இந்த சவால்களை எதிர்கொண்டு, 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக தி.முக. ஆட்சி என்ற ஸ்டாலினின் திட்டம் நிறைவேறவேண்டும் என்றால், திராவிட அரசியல் கொள்கையுடனான இளைய தலைமுறையை உருவாக்கினால் மட்டுமே சாத்தியமாகும். அந்தப்  பொறுப்பும் இப்போது உதயநிதியின் இளைஞரணியின் தோளில்தான். அவரது பயணப்பாதையை உற்றுநோக்குகிறார்கள் திராவிட இயக்கத்தாரும் எதிர்த்தரப்பாரும்.

 

 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.