Skip to main content

ஸ்டாலின் மீது மத்திய அரசின் திடீர் தாக்குதல்!!!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020
ddd

 

கடந்த அக். 28-30 நக்கீரன் இதழில் ஸ்டாலின் மீது பாயப்போகும் வழக்குகளின் லிஸ்ட் என்கிற செய்தியை வெளியிட்டிருந்தோம். அதில் முக்கியமாக இடம்பெற்றது கொளத்தூர் தொகுதியில மு.க.ஸ்டாலின் போட்டியிட்டதை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கு. கடந்த ஒன்றரை வருடங்களாக விசாரணைக்கு வராமல் இருந்த வழக்கை தூசி தட்டி எடுத்து வருகிற நவம்பர் 3ஆம் தேதி விசாரணைக்கு கொண்டு வந்துள்ளார்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 

 

இந்த வழக்கில் இது இறுதிக்கட்ட விசாரணை. வழக்கறிஞர்கள் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் நடத்துவார்கள். விரைவில் தீர்ப்பு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் ஸ்டாலினுக்கு எதிராக தீர்ப்பை பெற்று அதன் முலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினை போட்டியிடாமல் செய்ய மத்திய அரசு மும்முரமாக வேலை பார்த்து வருகிறது. 

 

கேரளாவில் சிபிஐயும், போதைப்பொருள் தடுப்புத் துறையும் இணைந்து மாநில மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகனை கைது செய்திருக்கிறார்கள். அதுபோல தமிழ்நாட்டிலும் திமுகவை முடக்க ஸ்டாலினுக்கு எதிராக இந்த தேர்தல் வழக்கை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

இதுபற்றி திமுக வழக்கறிஞரும், எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோவிடம் கேட்டோம். "ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் ஸ்டாலினுடைய கொளத்தூர் தொகுதி வெற்றிக்கு எதிராக சைதை துரைசாமி தொடுத்த வழக்கைப் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வரும். அந்த வழக்கில் சைதை துரைசாமி முன் வைத்த வாதங்கள் பொய் என நேர்மைக்கு பெயர் பெற்ற நீதிபதி வேணுகோபால் என்பவர் முழுமையாக ஆராய்ந்து சிறப்பான தீர்ப்பை அளித்துள்ளார். அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இறுதி வாதத்திற்காக நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.

 

இறுதி வாதம் என்பது நேரடியாக செய்ய வேண்டிய ஒன்று. இப்போது காணொளிக் காட்சிமூலமாக வாதம் நடப்பதால் அந்த வழக்கில் தீர்ப்பு வரவில்லை. ஒருவேளை சைதை துரைசாமி வெற்றி பெற்றாலும்கூட, அதை வைத்து மு.க.ஸ்டாலின் தேர்தல் நிற்க தடை விதிக்கலாம் என்பதே அர்த்தமற்ற வாதம். அப்படி தடை விதிப்பதற்கு எதிராக ஏராளமான தீர்ப்புகள் முன்னுதாரணமாக இருக்கிறது. திமுகவை முடக்க மத்திய அரசு சிபிஐயை ஏவுமானால் அதை சட்ட ரீதியாக முறியடிக்க திமுக தயாராகவே உள்ளது'' என்கிறார் உறுதியான குரலில்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.