Skip to main content

இதுமட்டும் போதும் என்று நினைக்கிறீர்களா???

Published on 20/06/2019 | Edited on 21/06/2019

சமீபகாலங்களில் ஒரு பிரச்சனை என்றால் அதை எதிர்த்து களத்தில் போராடாமல் அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுவது வழக்கமாகிவிட்டது.
 

dmk mk stalin



அரசியலிலும் அது சமீப காலமாக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரையில் மிகமுக்கியமான இடத்தில் இருக்கும், மக்கள் பிரச்சனைகளை ஆட்சியாளர்களிடம் கொண்டுசேர்க்கும் எதிர்கட்சி என்ற இடத்தில் இருக்கும் திமுக இதை அதிகமாக செய்கிறது. 

ஒரு பிரச்சனையோ அல்லது ஒரு ஆலோசனைக் கூட்டமோ நடக்கும்போது அதற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். அல்லது சட்டமன்றத்தில் விவாதம் நடக்கும்போது அங்குள்ள கட்சிகளின் விருப்பத்தைக் கேட்கும். அப்போது அந்த கூட்டத்தில் நமது கருத்தை தெரிவிக்கவேண்டும், அது மக்களுக்கு எதிரான திட்டங்களாக இருந்தால் அதற்கான வலுவான எதிர்ப்பை, வலுவான கருத்துகளை, ஆதாரங்களைக் காட்டவேண்டும். அப்படியானால்தான் அது வலுவான எதிர்ப்பாக அமையும். 
 

dmk mk stalin


நாடாளுமன்ற தேர்தலுக்குமுன் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டங்களில் திமுகவின் நிலைப்பாட்டிற்கு எதிராக, மக்களின் நலனுக்கு எதிராக அல்லது ஏதேனும் ஒரு காரணத்திற்காக திமுக தினமும் வெளிநடப்பு செய்துகொண்டே இருந்தது. அப்போது முதல் ஒரு சில தினங்களுக்கு நேர்மறையான கருத்துகளைப் பெற்றாலும், அதுவே போகப்போக எதிர்மறையாக மாறியது.

காலை 9.30 மணிக்கு சட்டமன்றத்திற்குள் செல்வார்கள் அப்போது, நீ வேணும்னாலும் பாரு, 9.45க்கு வெளிய வந்திருவாங்க என்று கேலியாக சொல்லும் அளவிற்கு மிகுந்த விமர்சனங்களை சந்தித்தது. திமுக கூட்டணி வெளிநடப்பு செய்தபிறகு, அவையில் அதிமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்களை மட்டுமே வைத்து ஒருசில திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக. எதிர்கட்சி என்ற ஒரு வலிமையான தரப்பு இல்லாமலேயே சட்டமன்றங்கள் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதும் இதேமாதிரியான ஒன்றை திமுக செய்துள்ளது.
 

dmk mk stalin


நேற்று (19.06.2019) ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை செயல்படுத்தலாமா என்று அனைத்துக்கட்சி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. நடைமுறைக்கு ஒவ்வாத, குழப்பமான திட்டம் இது என அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர். அந்த கருத்தை, அந்த திட்டத்தை தங்களின் அரசியல் ஆலோசகர்கள், அனுபவங்கள் ஆகியவற்றைக்கொண்டு வலுவாக எதிர்க்கவேண்டிய காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் போன்ற எதிர்கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. மொத்தம் 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 21 கட்சிகள் மட்டுமே கலந்துகொண்டுள்ளன. இதில் பாஜக கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை கணிசமானவை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தக் கூட்டம் முடிந்தபின் பேசிய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கூட்டத்தில் பங்குபெற்ற கட்சிகள் பலவும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகள் இதை நடைமுறைப்படுத்துவது குறித்த தங்களது சந்தேகங்களை தெரிவித்தன, ஆனால் அவர்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த திட்டத்தை ஆராய ஒரு குழுவை பிரதமர் மோடி அமைப்பார். அந்த குழு ஆராய்ந்து தங்களது அறிக்கைகளை சமர்பிக்கும் எனவும் தெரிவித்தார். 

இதிலிருந்து ஒன்றுமட்டும் தெளிவாக தெரிகிறது. இந்த திட்டம் கிட்டதட்ட நிறைவேறப்போகிறது. கூட்டத்தில் கலந்துகொண்ட பல கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன அதனால் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை வலுவான எதிர்கட்சிகள் அனைத்தும் கலந்துகொண்டு அதை வலுவாக எதிர்த்திருந்தால், பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் முடிவு என்றோ, நடைமுறைக்கு ஒத்துவராது என்றோ, இந்தியா துணைக்கண்டம் இது ஒரு நாடு இல்லை, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தின்படிதான் இது நடக்கிறது என்றோ கூறியிருந்தால் அது எவ்வளவு பெரிய எதிர்ப்பாக அமைந்திருக்கும். 
 

 

dmk mk stalin


தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திமுக அதை கண்டிப்பாக செய்திருக்கவேண்டும். ஏனென்றால் எந்த பிரச்சனையானாலும் அதற்கு பதில்கூறும், அதற்கு தீர்வு கொடுக்கும் கலைஞர், ஒற்றை ஆளாக நாடாளுமன்றத்தில் பல சமூகநீதி திட்டங்களை நிறைவேற்றிய, அதுகுறித்து அனைவரையும் பேசவைத்த அண்ணா போன்ற தலைவர்கள் இருந்த இயக்கம் இது. அதற்கும் மேல் ஒற்றை ஆளாக தொடங்கி ஒரு சமூகநீதி பேரியக்கமாக மாற்றிய, இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பெரியாரை முன்னோடியாகக்கொண்ட இயக்கம் இது. இந்திய அரசியலை தமிழ்நாட்டிலிருந்து தீர்மானித்தவர்கள் அவர்கள், அதனால்தான் அவர்கள் இல்லாதபோதும் அவர்களை அகற்றிவிட்டு அரசியல் செய்யமுடியவில்லை என்ற நிலை ஏற்பட்டது.

புறக்கணிப்பு எதிர்ப்பாக இருக்கலாம் ஆனால் அது ஒரு வலுவான எதிர்கட்சிக்கு அழகில்லை மேலும், அப்படியிருப்பது வலுவான எதிர்ப்பும் இல்லை, நிரந்தர தீர்வும் இல்லை இதை மனதில் வைத்துக்கொண்டு இன்றைய தலைவரும், கட்சியும் செயல்படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஒருவேளை அதுமட்டுமே போதும் என யாரேனும் நினைத்தால் அது மிகப்பெரிய தவறாகவும் வாய்ப்பிருக்கிறது.

 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.