Skip to main content

பாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்!

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

நீறுபூத்த நெருப்பாக இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறவு வெளிப்படையாக வெடிக்கத் துவங்கியிருக்கிறது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் சூழலில், கூட்டணி நீடிக்குமா? என்பதே அரசியல் ஹாட் டாபிக்.

 

dmk



நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இட ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் முட்டல் மோதல் வெடித்தன. தி.மு.க. மீதுள்ள அதிருப்தியை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் கூட்டறிக்கை மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தினர். இது, தி.மு.க.வில் கொந்தளிப்பை ஏற்படுத்த, "காங்கிரஸ் தலைமையின் அனுமதியில்லாமல் இப்படி பேச முடியாது' என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கட்சியின் சீனியர்கள் வலியுறுத்தியதையடுத்து, காங்கிரஸ் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்த சோனியா தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தார் மு.க.ஸ்டாலின்.

 

dmk



இந்த நிலையில் டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட கே.எஸ்.அழகிரியிடம் தேர்தலில் நடந்தது குறித்து விவாதித்தார் சோனியாகாந்தி. இதனைத் தொடர்ந்து பேசிய அழகிரி, "தி.மு.க.வும் காங்கிரசும் எப்போதும் இணைந்த கரங்களாக இருக்கும். நாங்கள் கொடுத்தது அறிக்கையே அல்ல. கூட்டணியில் எந்த பிரிவும் கிடையாது' என்றார். ஆனாலும் இதை தி.மு.க. தலைமை ஏற்கவில்லை. கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற துடிக்கிறது. அதனை நிரூபிப்பதுபோல, "தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறவு பழைய நிலைக்குத் திரும்புமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்'' என தெரிவித்திருக்கிறார் கட்சியின் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு.

 

dmk



கட்சியின் பொருளாளரான துரைமுருகன், "காங்கிரஸ் விலகிச்சென்றால் செல்லட்டும். அதனால் எங்களுக்கு எந்த நட்டமும் இல்லை. ஓட்டுகள் பாதிக்காது. இருந்தால் தானே பாதிக்கிறதுக்கு'' என கடுமையாகத் தாக்கினார். தி.மு.க. சீனியர்களின் இப்படிப் பட்ட கருத்துக்களால் அதிர்ச்சியடைந்துள்ளது காங்கிரஸ் மேலிடம். ஸ்டாலினின் அனுமதியுடன்தான் தி.மு.க. தலைவர்கள் அப்படிப் பேசுவதாக சோனியாவிடம் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கிடையே ஸ்டாலினிடம் பேசும் தி.மு.க. மா.செ.க்கள், "காங்கிரசை கழட்டி விடுங்கள்' என அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றனர். இதனால், 21-ந்தேதி நடக்கும் தி.மு.க.வின் செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரசுடனான கூட்டணி பற்றி விரிவாக விவாதிக்கப்படும் என அறிவாலயத் தரப்பிலிருந்து தகவல்கள் கசிகின்றன.

 

dmk



இந்த நிலையில், கே.எஸ்.அழகிரியின் கருத்தறிய அவரை தொடர்புகொண்டபோது நமது அழைப்பை எடுக்கவில்லை. சிவகங்கை எம்.பி.யும் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்திடம் நாம் பேசியபோது, "இந்த ஞானம் வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கு முன் துரைமுருகனுக்கு ஏன் தோன்றவில்லை? தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கவே நாங்கள் விரும்புகிறோம்''’ என்பதோடு முடித்துக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என பலரும், "தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறலாம். தி.மு.க.வுக்கு அடிமையாக நாம் இருக்க வேண்டியதில்லை' என மிக காட்டமாக சோனியாவுக்கும் ராகுலுக்கும் தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.


இதுகுறித்து காங்கிரசின் முன்னாள் தலைவர் ஒருவரிடம் நாம் விவாதித்தபோது, "கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற நினைப்பது தி.மு.க.வின் அஜெண்டா இல்லை; அது, பா.ஜ.க.வின் அஜெண்டா. ஓரிரு மாதத்திற்கு முன்பு பா.ஜ.க. தலைமையிலிருந்து தி.மு.க. சீனியர் எம்.பி.க்கள் மூன்று பேருக்கு, "காங்கிரசை எதற்காக தூக்கிச் சுமக்கிறீர்கள்? காங்கிரசை கழட்டி விடுங்கள். பா.ஜ.க.வை கடுமையாக விமர்சிப்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டாம்' என்கிற தகவல்களை பாஸ் செய்தது.

பிரதமர் மோடியை சில மாதங்களுக்கு முன்பு டி.ஆர்.பாலு சந்தித்தபோதும் காங்கிரசுக்கு எதிரானவைகள் பேசப்பட்டிருக்கின்றன. அதன் எதிரொலிதான் இப்போது காங்கிரசுக்கு எதிராக மெல்ல மெல்ல வெடிக்கத் துவங்கியிருக்கிறது. தி.மு.க.வை விட்டால் எங்களுக்கு அ.தி.மு.க., தினகரனின் அ.ம.மு.க., ரஜினி, கமல் என கூட்டணி வைக்க வாய்ப்புகள் அதிகமுள்ளன. ஆனா, தி.மு.க.வுக்கு? லோக்சபாவில் 38 இடங்களில் தி.மு.க. கூட்டணி ஜெயிக்க காங்கிரஸ்தான் முக்கிய காரணம். காங்கிரசை கழட்டிவிடுவதன் பலனை இனிவரும் தேர்தலில் தி.மு.க. உணரும்' என்கிறார் மிக காட்டமாக.


காங்கிரஸ் தலைவரின் இத்தகைய கருத்துக்கள் குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் சிலரிடம் பேசியபோது, "காங்கிரசுக்கு எதிரான தி.மு.க.வின் அதிருப்திக்கு பா.ஜ.க.தான் காரணம் என சொல்வது அபத்தம். கூட்டணி தர்மத்தை பாதுகாப்பதில் தி.மு.க.வுக்கு நிகர் வேறு எந்த கட்சியும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை மீறி துரோகமிழைத்தது காங்கிரஸ்தான். இதற்கு பல ஆதாரங்களை சுட்டிக்காட்ட முடியும். மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களில் அதிக சீட் வாங்க இப்படிப்பட்ட நாடகத்தை காங்கிரஸார் நடத்துகின்றனர். இதற்கு தி.மு.க. இடம் கொடுக்காது. தேவைப்பட்டால் காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள ஸ்டாலின் தயங்கமாட்டார்'' என விவரிக்கிறார்கள்.


 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.