Skip to main content

டிராஃபிக் போலீசிடம் ஃபைன் கட்ட புதிய வழி... யாருக்காக டிஜிட்டல் இந்தியா?

Published on 10/05/2018 | Edited on 10/05/2018

தற்போது சென்னை மாநகர காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இனி அபராதங்களை பேடிஎம் (paytm) மூலமும் செலுத்தலாம் என்று கூறியுள்ளது. இது பெரும் சர்ச்சைக்குரியது. ஏனென்றால் பேடிஎம் என்பது ஒரு தனியார் நிறுவனம், அதிலும் ஒரு போட்டி நிறைந்த தொழில் பிரிவில் உள்ள நிறுவனம். இதில் என்ன இருக்கிறது?  ஒரு பிரபலமான  நிறுவனத்தின் உதவியை நாடியதில் என்ன தவறு என்று நினைக்கலாம். டிஜிட்டல் இந்தியா பற்றி மூலை, முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறது அரசு. ஒருவேளை அவர்கள் பேச்சோடு நிறுத்திக்கொண்டார்களா? ஒரு வழியைக் கூட அவர்கள் உருவாக்கவில்லையா?

 

PAYTM

 

உருவாக்கினார்கள், பீம் (BHIM) ஆப்தான் அது. பிரதமர் மோடி கூட அதை மிக பிரபலமாக்கவேண்டும் என அதைப்பற்றி பெரிதாக பேசினார். ஆனால் பீம் ஆப் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இப்போது என்ன பிரச்சனை என்றால் அரசு சார்பிலேயே பணப்பரிமாற்றத்திற்கு ஒரு ஆப் இருக்கும்போது ஏன் தனியார் ஆப்பை பயன்படுத்தவேண்டும்? அதுமட்டுமல்ல இந்தியாவை மாற்றக்கூடிய முயற்சி என கொண்டுவரப்பட்டதுதான் டிஜிட்டல் இந்தியா, அந்தத் திட்டத்தின்கீழ்தான் இந்த பீம் ஆப் வருகிறது.

 

 

 

 

ஏற்கனவே பணமதிப்புநீக்க நடவடிக்கை நடந்த பொழுது, பேடிஎம் (paytm) நிறுவனம் பத்திரிகைகளில் பிரதமர் மோடியின் படத்துடன் முழு பக்க விளம்பரம் கொடுத்தது. அப்பொழுதே கடும் விமர்சனங்கள் எழுந்தன. இப்பொழுது அரசே இப்படி செய்திருப்பது அடுத்த கேள்விகளை எழுப்புகிறது. சென்னை மாநகர காவல்துறை ஏன் பெயரளவில் கூட பீம் ஆப்பை பயன்படுத்தவில்லை. ஒருவேளை டிஜிட்டல் இந்தியா தோற்றுவிட்டதா அல்லது இப்படி ஒன்று இருப்பதே யாருக்கும் தெரியாதா? டிஜிட்டல் இந்தியா இப்படியே தனியாரை வளர்த்துவிட்டுகொண்டுதான் இருக்குமா இல்லை அரசு சார்ந்த தொழில்நுட்பங்களை மேம்படுத்த முயற்சிக்குமா?

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.