Skip to main content

வனப்பகுதிக்குள் பசியால் வாடும் இருளர் பழங்குடிகள்! மாவட்ட நிர்வாகம் மனசு வைக்கணும்!!

Published on 04/04/2020 | Edited on 04/04/2020


சராசரி மனித வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி வனப்பகுதிக்குள் வசிக்கும் இருளர் பழங்குடிகளையும் கரோனா ஊரடங்கு பாதித்திருக்கிறது.144 தடை உத்தரவால், அவர்களுக்கும் போதிய உணவுப் பொருள்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாததால் பசியோடும்,சுகாதார சீர்கேட்டுடனும் போராடி வருகின்றனர். 

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள பண்ணப்பட்டி,முத்தூர்பட்டி, சருக்கல்பாறை உள்ளிட்ட வனப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடிகளின் குடும்பங்கள் இருக்கின்றன.

 

 

DHARMAPURI DISTRICT FOREST AREA PEOPLES DISTRICT COLLECTOR


வனப்பகுதிக்குள் விறகு பொறுக்குதல்,தேன் எடுத்தல்,பழங்கள் பறித்தல் உள்ளிட்ட வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.இவற்றின் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் அக்குடும்பங்கள் வாழ்வை நடத்தி வருகின்றன.இன்றும்கூட பல குடும்பங்கள்,தங்குவதற்குப் பாதுகாப்பான வீடுகளோ,குடிசைகளோ இன்றி,விலங்குகளைப் போல பாறை இடுக்குகளில் வசிக்கின்றனர்.

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சில ஆண்டுகளுக்கு முன்பு, பண்ணப்பட்டியில் வசிக்கும் இருளர் இன மக்களில் 50 சதவீதம் பேருக்குப் பென்னாகரம் சோதனைச்சாவடி அருகே தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்தது.முத்தூர்பட்டி, சருக்கல்பாறை பகுதிகளில் வசித்து வந்த இருளர் மக்களில் 50 சதவீதம் பேருக்கு போடூர் பகுதியில் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. 

இது ஒருபுறம் இருக்க, கரோனா வைரஸ் காரணமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு,வனத்தையே வாழ்விடமாகக் கொண்டுள்ள இருளர் பழங்குடிகளையும் வெகுவாகப் பாதித்துள்ளது.வனப்பகுதிகளில் கிழங்குகளைத் தோண்டியெடுத்து சாப்பிட்டு பசியாறி வருகின்றனர்.இந்தக் கிழங்குகள் அன்றாடம் ஒரு வேளை உணவுக்கு உத்தரவாதம் என்றாலும்,அதுவும் ஊரடங்கு முடியும் வரை கிடைக்குமா என்பதிலும் கேள்விக்குறி எழுந்துள்ளது.கிழங்குகளும் போதுமான அளவுக்கு கிடைக்காததால் பசியோடு மல்லுக்கட்டும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 
 

DHARMAPURI DISTRICT FOREST AREA PEOPLES DISTRICT COLLECTOR

 

கோடைக்காலம் என்பதால் குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் வனப்பகுதிக்குள் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று,ஊற்று தோண்டி அதிலிருந்து தண்ணீர் சேகரித்து கொண்டு வருகின்றனர்.பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாததால் அவர்களின் உடல்நலமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஒருபுறம் ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் நிவாரணத்தொகை,அரிசி,பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வரும் தமிழக அரசு, வனப்பகுதிகளில் வசிக்கும் இருளர் பழங்குடிகளின் பசியைப் போக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெகுசன மக்களிடம் இருந்து பண்பாடு,கலாச்சார ரீதியாகவே வேறுபட்டுள்ள பழங்குடிகளின் அவல நிலை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் செல்வதிலும் சிக்கல் இருந்துள்ளது. 

ரேஷன் கார்டுகள் அடிப்படையில் இல்லாமல், அனைத்து பழங்குடிகளுக்கும் உரிய உணவுப்பொருள்கள்,பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்கிறார்கள், வனத்தையொட்டியுள்ள உள்ளூர்க்காரர்கள்.

இருளில் மிதக்கும் அவர்கள் வாழ்கைக்கு வெளிச்சம் பாய்ச்ச மாவட்ட நிர்வாகம் மனசு வைக்கணும்...

 

Next Story

வன்முறை மூண்ட இடம் செல்ஃபி பாயிண்ட்டாக மாறியது! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

sri lanka incident selfie point peoples

 

இலங்கையில் வன்முறையைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கிற்கு இடையில் கொழும்பு காலிமுகத்திடலில்  மக்களின் அமைதி போராட்டம் தொடர்கிறது. இதேவேளையில், பிரதமர் அலுவலகத்தைப் போராட்டக்காரர்கள் சிலர் சூறையாடினர். 

 

நாட்டை நெருக்கடியில் தள்ளிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்துடன் கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி முதல் கொழும்பு காலிமுகத்திடலில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலால் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் அங்கு வன்முறை வெடித்தது. 

 

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கார்கள் கொளுத்தப்பட்டன. ராஜபக்சே பூர்வீக இல்லம் கொளுத்தப்பட்டது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வந்த பேருந்துகள் தீக்கு இரையாக்கப்பட்டன. இந்த இடம் தற்போது செல்ஃபி பாயிண்ட்டாக மாறியுள்ளது. 

 

மஹிந்த ராஜபக்சே பதவி விலக காரணமான, இந்த சம்பவத்தை தங்கள் செல்போன்களில் புகைப்படமாகப் பதிவு செய்துக் கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரத்தில், இங்கு பலரையும் செல்போன் கையுமாகப் பார்க்க முடிகிறது. 

 

காலை 07.00 மணி முதல் பகல் 02.00 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் வெளியே வந்தனர். பெட்ரோல், டீசலை வாங்கவும், உணவுப் பொருட்களை வாங்கவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆயினும், கொழும்பு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவம் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. 

 

இதற்கிடையே, காலிமுகத்திடலில் அமைதி வழிபோராட்டம் நடத்துவோரைக் கலைக்க நீதிமன்றம் மூலம் காவல்துறை முயற்சிப்பதைக் கண்டித்து புதுக்கடை நீதிமன்றம் முன்பாக பொதுமக்கள் மவுனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Next Story

"இலங்கையில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்புக்கு நடவடிக்கை"- மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்த அமைச்சர்!

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

"Measures for the protection of Indians in Sri Lanka" - Minister who responded in writing at the state level!

 

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில், அங்குள்ள இந்திய தூதரகம் அந்நாட்டு அரசுடன் தொடர்பில் இருப்பதாக, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

 

இலங்கையில் உள்ள இந்தியர்களின் நிலைக் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்துள்ளார். 

 

அதில், கடந்த ஜனவரி மாதம், இந்திய அரசு இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளதாகவும், இந்தியாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு, அந்நாட்டு அனுமதி வழங்கியுள்ளதாகவும் பதிலில் கூறப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகளான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வாங்குவதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை, இந்திய அரசு கடனாக இலங்கைக்கு வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 4,500 இந்தியர்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு அங்குள்ள இந்திய தூதரகம் இலங்கை அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.