Skip to main content

ஆசைப்பட்ட குழந்தைகள்! பள்ளிக்கு காரில் அழைத்து சென்ற கல்வி அதிகாரி! 

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Desperate children! The education officer who took the car to the school!

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் வடக்கு கிராமத்தில் உள்ள நரிக்குறவர் காலணியில் உள்ள பள்ளி வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று 1990-91 காலக்கட்டத்தில் அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ஷீலாராணி சுங்கத் அறிவொளி இயக்கத்தை அங்கு தொடங்கி நரிக்குறவர் காலணியை அறிவொளி நகர் என்று பெயரும் மாற்றினார். அதன் பிறகு பெரியவர்கள் கையெழுத்துப் போட கற்றுக் கொண்டு தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தனர்.

 

ஆனாலும் தாங்கள் பிழைப்பிற்காக வெவ்வேறு ஊர்களுக்கு செல்லும் போது தங்கள் குழந்தைகளையும் கூடவே அழைத்துச் செல்வதால் அந்தக் குழந்தைகள் பள்ளி படிப்பைக் கூட முழுமையாக முடிக்கவில்லை. இருந்தும் தொடக்கப் பள்ளியில் படிக்க வைத்தனர். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் இடையில் நின்றுவிடுகின்றனர்.

 

இந்த நிலையில் தான் திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் கீரமங்கலம் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் அறிவொளி நகரில் இருந்து பள்ளி வயது குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை என்பதை அறிந்து மாவட்ட கல்வி நிரவாகத்திற்கு தகவல் அளித்த நிலையில் ஏ.பி.ஓ. தங்கமணி, இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் துரைப்பாண்டியன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உள்ளிட்டோருடன் அறிவொளி நகருக்குச் சென்று பெற்றோர்களை சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய பிறகு பள்ளி செல்லும் வயதுடைய 32 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப உறுதி அளித்த பெற்றோர்கள் அடுத்த நாளே பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் சென்றனர்.

 

Desperate children! The education officer who took the car to the school!

 

அடுத்த சில நாட்களில் அனைத்துக் குழந்தைகளையும் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புகிறார்களா என்று மாலை நேரத்தில் அறிவொளி நகரில் வட்டாரக் கல்வி அலுவலர் ஆய்வு செய்த பிறகு, “நானும் படிக்கும் போது பல கி.மீ. நடந்து சென்று படித்தேன். அப்போது என் வீடும் உடைந்த சுவர்களைக் கொண்ட கூரை வீடு தான். வீட்டில் மின்சாரம் இல்லை. ஆனால் நான் படித்து அரசு வேலைக்கு வந்த பிறகு வீடு கட்டி இப்ப கார் கூட வாங்கிட்டேன். இதே போல உங்கள் குழந்தைகளும் படித்து வேலைக்கு வரவேண்டும். வீடு கட்டி கார் வாங்க வேண்டும். அதற்கு அரசாங்கம் கொடுக்கும் அத்தனை சலுகைகளையும் பெற்று நன்றாக படிக்க அனுப்ப வேண்டும்.

 

தற்போது சாதிச் சான்றிதழ் கூட பழங்குடியினரோடு சேர்த்து எஸ்.டி என்று கொடுக்க மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் கூடுதல் சலுகை கிடைக்கும். அதனால், அனைத்து குழந்தைகளையும் படிக்க பள்ளிக்கு அனுப்புங்கள். முதல் வகுப்பிலிருந்து முதுகலை படிப்பு வரை அரசாங்கமே அனைத்து செலவுகளையும் ஏற்று உணவு, சீருடை, புத்தகம், பை, பள்ளி செல்ல சைக்கிள், தொலை தூரம் செல்ல பஸ் பாஸ் இப்படி ஏராளமான சலுகைகளையும் கொடுக்கிறது” என்றார்.

 

அப்போது ஒரு மாணவி எழுந்து, “ஒரு நாள் உங்கள் காரில் எங்களை ஏற்றிச் செல்வீர்களா” என்று கேட்க, “நிச்சயம் ஒரு நாள் மாணவ, மாணவிகளை என் காரில் பள்ளிக்கு அழைத்துச் செல்வேன்” என்றார்.

 

சொன்னது போலவே இன்று வியாழக்கிழமை காலை அறிவொளி நகருக்கு காரோடு வந்தார் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன். அந்த நேரத்திலேயே ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பி சென்றுவிட்டனர். ஆனாலும் பள்ளிக்கு செல்ல தயாராக இருந்த மாணவர்களை அவர்கள் ஆசைப்பட்டது போல தனது ஏ.சி காரில் ஏற்றி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்டார். பள்ளி நிர்வாகத்தினரிடமும் கூறி அவரவர் வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தார்.

 

மேலும் இன்று காரில் செல்லாத மாணவ, மாணவிகளை பள்ளியில் சந்தித்து மற்றொரு நாளில் அழைத்து வருவதாக கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து ஒரு நாள் பள்ளிக்கு அனுப்புவதோடு தங்கள் கடமை முடிந்துவிடுவதாக கடந்து செல்லும் ஒரு சில அதிகாரிகளுக்கு மத்தியில் நரிக்குறவர் மாணவர்களும் நன்றாக படிக்க வேண்டும் என்று தொடர்ந்து ஆய்வுகள் செய்து கண்காணித்து வரும் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரனை பாராட்டி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள். ஒவ்வொரு அதிகாரியும் இப்படி இருந்தால் சிறப்பு தான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள். 

Next Story

ஒரு ரோட்டுக்கு 2 டெண்டர்கள்! அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் மக்கள் வரிப்பணம்!

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு ரோடு போட ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் பூமி பூஜை போட்ட பிறகு அதே ரோட்டில் ரூ.5 லட்சத்திற்கு சிமென்ட் சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ள அவலம் நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் இருந்து கீரமங்கலம், செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின், வேம்பங்குடி மேற்கு ஊராட்சி வரை சென்று கீரமங்கலம் - பேராவூரணி சாலையில் இணையும் சுமார் 3 கி.மீ இணைப்பு கிராமச் சாலை உள்ளது. இந்தச் சாலையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மேம்பாட்டுச் சாலை (ஆர்.ஆர்) திட்டத்தில் இணைத்து நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வந்து சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடத்தினர். மழைக்காலம் என்பதால் சாலைப் பணி தாமதம் செய்யப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில் பணிகள் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தான் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் பேராவூரணி சாலையில் (ஆர்.ஆர்.க்கு ஒப்படைக்கப்பட்ட சாலை) இருந்து சுமார் 200 மீட்டர் நீலத்திற்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சாலையில் தான் ஆர்.ஆர். சாலையும் வரப்போகிறது. அதாவது தற்போது அவசர கதியில் போடப்படும் சிமெண்ட் சாலையில் இன்னும் சில நாளில் ஆர்.ஆர். சாலைப் பணிக்காக உடைத்துவிட்டு தார்ச்சாலை போடப் போகிறார்கள். இதனால் மக்கள் வரிப்பணம் ரூ.5 லட்சம் வீணாகப் போகிறது.

2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு சாலை நெடுஞ்சாலைக்கு ஒப்படைத்து அந்த சாலை பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்ட பிறகு ஊராட்சி ஒன்றியம் எப்படி சிமெண்ட் சாலைக்கு நிதி ஒதுக்கி டெண்டர் விட்டது? இப்போது போடப்படும் சிமென்ட் சாலையை தார்ச்சாலை போட வருபவர்கள் உடைத்துவிடுவார்களே என்று அறந்தாங்கி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டால், வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் யூனியனில் இருந்து எந்த வேலையும் நடக்கலயே என்று சொன்ன ஒன்றிய அதிகாரிகள் சிறிது நேரத்திற்கு பிறகு அது அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணியாம் என்றனர். எந்தப் பணியானாலும் அதே சாலைக்கு மற்றொரு டெண்டர் விடப்பட்ட பிறகு அதில் சிமெண்ட் ரோடு வேலை செய்தால் அந்தப் பணம் வீணாகாதா? என்ற நமது கேள்விக்கு ஒன்றிய அதிகாரிகளிடம் இருந்து பதில் இல்லை.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஆர் திட்டப் பொறியாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, எங்களிடம் ஒப்படைத்த சாலையில் வேறு யாரும் பணி செய்யக் கூடாது. ஒன்றிய நிதியில் வேலை நடப்பது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட திட்ட அலுவலர் கவனத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டோம். இனிமேல் அவர்கள் வேலை செய்யமாட்டார்கள். எங்கள் டெண்டர் படி முழுமையாகத் தான் தார்ச்சாலை போடுவோம் என்றார். ஆனால் இன்று வரை தற்காலிக சிமென்ட் சாலைக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, ரொம்ப வருசமா குண்டும் குழியுமா கிடந்த ரோட்டுக்கு இப்ப ஆர்.ஆர்.ல நிதி ஒதுக்கின பிறகு பஞ்சாயத்தில் இருந்து சிமென்ட் ரோடு போடுறாங்க. இவங்க போட்ட ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் சில நாளில் உடைச்சுட்டு தார் ரோடு போடப் போறாங்க. கேட்டா மரம் நிக்கிது தார் ரோடு உடைஞ்சிடும்ன்னு சொல்றாங்க. ஆனா ஆர்.ஆர். ரோட்டுக்காரங்க எங்களுக்கு ஒதுக்குன அளவு ரோடு போடுவோம்னு சொல்றாங்க. இதனால ஒரு ரோடு போட்டு பில் எடுத்ததும் ஒரு வாரத்தில் உடைக்கப் போறாங்க. மக்கள் வரிப்பணத்தை இந்த அதிகாரிகள் எப்படி வீணடிக்கிறாங்கன்னு பாருங்க. சிமென்ட் ரோட்டை வேறு ஒரு தெருவில் கூட போடலாம் என்கின்றனர்.

இதே போல தான் கறம்பக்குடி ஒன்றியத்தில் கருக்காகுறிச்சி தெற்கு தெருவில் ஒரு தனி நபரின் பட்டா இடத்தில் சுமார் 50 மீ பேவர் பிளாக் ரோடு போட வந்த போது நிலஉரிமையாளர் தடுத்து யாருக்குமே பயன்படாமல் என் நிலத்தில் போட வேண்டாம் என்று சொன்ன போது இன்று ரோடு போடுறோம் ஒரு வாரத்தில் பில் எடுத்ததும் நீங்க ரோட்டை உடைச்சுட்டு விவசாயம் பண்ணுங்கனு சொல்லி இருக்கிறார்கள். அதாவது அரசு பணத்தை பில் போட்டு எடுக்கத்தான் டெண்டர்கள் கொடுக்கிறார்களா அதிகாரிகள்? என்ற கேள்வி சில சம்பவங்களில் இருந்து எழுந்துள்ளது.