Skip to main content

“எனது மனைவியையும் மோசமாகப் பேசினார்கள்... பாய்சன் குடிச்சிட்டேன் மச்சான்...” போலீஸ் டார்ச்சரால் டாக்டர் தற்கொலை

Published on 18/11/2020 | Edited on 18/11/2020
hhhh

 

குமரி மாவட்டம் பறக்கை இலந்தைவிளையைச் சேர்ந்த தி.மு.க. மருத்துவரணி மா.து. அமைப்பாளர் சிவராம பெருமாளின் தற்கொலை கன்னியாகுமரியையும் அம்மாவட்ட தி.மு.க.வினரையும் ஒருசேர அதிரவைத்துள்ளது.

 

சிவராமபெருமாள் விஷம் குடிப்பதற்கு சற்றுமுன் தன்னுடைய மைத்துனரிடம் பேசிய ஒரு நிமிட ஆடியோவில், ""நான் சாகப்போறேன் இனி யாரு நெனச்சாலும் என்னைக் காப்பாத்த முடியாது. டி.எஸ்.பி. டார்ச்சரால் நான் சாகப்போறேன். நான் பாய்சன் குடிச்சிட்டேன் மச்சான்''’என கூறியிருக்கிறார். கடிதத்தில்... ""கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் “என்னை தினமும் டார்ச்சருக்கு மேல் டார்ச்சர் செய்தார். "நீ ஏன் இன்னும் சாகவில்லை நீயாகச் சாகவில்லை என்றால் நானே உன்னை சாகடித்துவிடுவேன்' என மிரட்டினார். டி.எஸ்.பி.யோடு சேர்ந்து விஜய் ஆனந்தும் என்னையும் எனது மனைவியையும் மோசமாகப் பேசினார்கள். இவர்களின் மிரட்டலால்தான் சாகிறேன்''’என எழுதியிருந்தார்.

 

எதற்காக டி.எஸ்.பி. பாஸ்கரன் சிவராமபெருமாளை மிரட்டவேண்டும்? மனைவி சீதாவிடம் பேசினோம்... ""ஜூலை 12-ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு நான் கோவிட் டூட்டி முடிச்சிட்டு கணவரோடு சொத்த விளை வழியாக காரில் வந்துகொண்டிருந்தோம். அப்போது எதிரேவந்த வாகனம் லைட் அடிச்சுக் கொடுத்ததால் பதிலுக்கு கணவரும் லைட் அடிச்சுக் கொடுத்து காரின் வேகத்தைக் குறைத்தார். உடனே அந்த வாகனத்திலிருந்து கீழே இறங்கிய வர், "போலீஸ் அதிகாரி வாகனத்துக்கே லைட் அடிக்கிறியா'னு கெட்டவார்த்தை பேசினார். இதற்கு எனது கணவர் எதுவும் பேசாததால் "நான் அரசு மருத்துவர், கோவிட் டூட்டி முடிஞ்சி போறேன்'னு சொன்னதுக்கு என்னையும் "கவர்மெண்ட் டாக்டர் எப்படிப்பட்டவங்கனு தெரியும்'னு கெட்ட வார்த்தையால் மோசமாகத் திட்டியதோடு, கணவரைப் பார்த்து "உனக்கு வச்சிருக்கேன்'னு மிரட்டும் தொனியில் பேசினார்.

 

hhh


  
இதனால் அடுத்தநாள் என் உயரதிகாரிக்கு தகவலைச் சொல்லிவிட்டு நான் கன்னியாகுமரி டி.எஸ்.பி.யிடம் புகார் கொடுக்கப்போனேன். அங்கு சென்றதும் எங்களை மிரட்டியவர்தான் டி.எஸ்.பி. என்பது தெரியவர... அதிர்ச்சியடைந்தேன். “""போலீஸ் மேலயே கம்ப்ளைண்ட் கொடுக்க வாறியா? வா முதலில் உன் புருஷன் மேல கேஸ் போடனும். உன்னையும் தூக்கி உள்ள வைக்கிறேன்''னு மிரட்டினார். இதனால் நான் திரும்பி வந்துட்டேன்''’என்றார்.

 

இந்த விவகாரத்தில் அடிபடும் விஜய்ஆனந்த், கன்னியாகுமரி டி.எஸ்.பி.யிடம் மட்டுமல்ல மாவட்டத்திலுள்ள முக்கிய உயரதிகாரிகளின் நிழலாகவே இருக்கிறார். இவர் குறித்து ஏற்கனவே நக்கீரன் ஆக.29 செப்.1 இதழில் "விபச்சார புரோக்கருக்கு சல்யூட் அடிக்கும் காக்கிகள்'’என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

இந்தநிலையில் விஜய்ஆனந்தும் டி.எஸ்.பி.யும் எதற்காக மருத்துவர் சிவராமபெருமாளை மிரட்டினர் என்பது குறித்து கன்னியாகுமரி போலீஸ் சோர்ஸிடம் பேசினோம். ""விஜய் ஆனந்த் பெரிய புரோக்கர். மசாஜ் சென்டரும் வச்சிருக்கார். கன்னியாகுமரியில் அவனே அறை எடுத்துக் கொடுத்து துட்டுள்ள வி.ஐ.பி.களை வரவழைச்சி அழகி களையும் செட் பண்ணிக் கொடுத்திட்டு பிறகு அதை டி.எஸ்.பி.கிட்ட போட்டும் கொடுத்துடுவான்.

 

டி.எஸ்.பி. இதுக்குனு ஒரு டீம் வச்சிருக்கார். அந்த டீம் சம்பந்தப்பட்டவங்களைப் பார்த்துப் பேசி லட்சங்களில் கறந்து விடுவார்கள். மருத்துவர் சிவராமபெருமாளும் கன்னியாகுமரிக்கு மசாஜுக்குச் சென்றதாகவும்... அங்கு இந்த டீமிடம் மாட்டி 10 லகரம் பேசி கடைசியில் 6 லகரத் தில் முடிஞ்சதாம். அதைக் கொடுக்காமல் சிவராமபெருமாள் இழுத்தடித்ததால்தான் டி.எஸ்.பி. மிரட்டி வந்திருக்கிறார்'' என்றனர்.

 

hhh

 

சிவராமபெருமாளின் மைத்துனர், முனைவர் ஜெய்குமார் கூறும்போது... ’’""டி.எஸ்.பி.யைக் காப்பாற்ற காவல்துறையினர் முயற்சி செய்துவருகிறார்கள். "அந்தக் கடிதத்தை சிவராமபெருமாள் எழுதவில்லை, நீதான் எழுதியிருக்கிறாய். ஒரிஜினலைத் தா' என்று சிவராமபெருமாளின் மனைவியை சுசீந்திரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டா? மீனா, எஸ்.ஐ. ஆறுமுகம் மிரட்டியிருக்கிறார்கள். டி.எஸ்.பி. மீதும் விஜய்ஆனந்த் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். டி.எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்தவேண்டும்''’என்றார்.

 

இதுகுறித்து டி.எஸ்.பி. பாஸ்கரனிடம் நாம் கேட்டபோது, “""எனக்கு சிவராமபெருமாள் எப்படி இருப்பார், அவர் யாரென்றுகூட தெரியாது''’என ஒரே போடாகப் போட்டார்.

 

தி.மு.க. மருத்துவரணியைச் சேர்ந்தவர் சிவராம பெருமாள் என்பதால் மு.க.ஸ்டாலின் வரை இந்த விவகாரம் சென்று, கண்டனக் குரல் வெளிப்பட்டது.

 

 

 

 

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.