Skip to main content

எம் பொண்ண பத்தி ஏன்டா அப்படி போட்டேன்னு கேட்டதுக்கு... தாயின் கண்ணீர்!

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

கடலூர் மாவட்டம் குறவன் குப்பத்தை சேர்ந்த நீலகண்டன் - தெய்வானை தம்பதியரின் மகள் ராதிகா(23). அவரது மாமன் மகன் விக்னேஷ். இருவர் வீட்டிலுமே இவர்களது காதலுக்கு எதிர்ப்பில்லாத நிலையில், இருவரும் திடீரென அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது இந்த வட்டாரத்தையே அதிர வைத்திருக்கிறது. ஒரு காதல் தான், இந்தக் காதல் ஜோடியின் தற்கொலைக்குக் காரணமென்றால் நம்பமுடிகிறதா? ராதிகாவின் வீட் டருகே வசித்து வந்தவர் பிரேம் குமார். பிரேம்குமார் (23) வடலூர் இந்திரா நகரில் உள்ள வினோதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மைனர் பெண் ணைக் காதலித்து வந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் வினோதாவுடன் தலை மறைவாகிவிட்டார் பிரேம். பெண்ணைக் காணாமல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பெண்ணின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது பெண்ணின் ஊரைச் சேர்ந்த ராதிகாவின் மாமன் மகன் விக்னேஷ், அந்தப் பெற்றோரின் தவிப்பைப் பார்த்துவிட்டு தனது அத்தை வீட்டினருகில்தான் பிரேம் குமாரின் வீடு உள்ளது என அடை யாளம் காட்டியுள்ளார். விக்னேஷின் இந்தச் செயல்தான் ராதிகாவுக்கு எமனாக மாறியுள்ளது.

 

lover



விக்னேஷின் தந்தை சேகரிடம் பேசினோம், "பிரேம்குமார் மைனர் பொண்ணோட ஓடினதால, ரெண்டு பேரையும் கண்டுபிடிக்க சொல்லி போலீஸ்ல புகார் கொடுத்துட்டுத் பெத்தவங்க தேடினாங்க. அப்ப என் பையன் விக்னேஷ் அந்த பையனோட வீட்டைக் காட்டி னான். அதுல என் பையன்மேல அந்த பிரேம்குமாருக்கு கோபம் இருந்திருக்கு. வஞ்சம் வெச்சு பேஸ்புக்குல என் தங்கச்சி பொண்ண பத்தி தப்புத் தப்பா போட்டி ருக்கான். விவரம் தெரிஞ்சு மன சொடிஞ்சு போன என் தங்கச்சி பொண்ணு தூக்கு மாட்டிக்கிச்சு. யாரோ ஒரு குடும்பத்துக்கு உதவி செய் யப்போய், எங்க குடும்பத்துல இரண்டு இளம் குருத்து களைப் பறிகொடுத்துட் டோமய்யா'' என கதறுகிறார்.

 

parents



ராதிகாவின் தாயார் தெய்வானையோ, ""எம் பொண்ண பத்தி ஏன்டா அப்படி போட்டேன்னு கேட்டதுக்கு, "உன் அண்ணன் பையன் என் வீட்ட காட்டிக் கொடுத்தான்ல, அதான் அப்படி போட்டேன்'னு சொன்னதோட கும்பலுக்கே அந்தப் பதிவையெல்லாம் காட்டி, எம் புருசனையும் அடிச்சாங்க. என் பொண்ணு இனிமே உசுரோட வருவாளா?'' என அழுது புரள்கிறார்.

  lovers



தன்னைப் பழிவாங்குவதற்காக தான் காதலித்த அத்தை மகளை அசிங்கப்படுத்திட்டாங்களே..… அத்தை மகள் அவமானப்படவும், சாகவும் தான் காரணமாகி விட்டோமே… என மனமுடைந்த நிலையில் வண்டியை எடுத்துக்கொண்டு சென்ற விக்னேஷ், அருகிலுள்ள வீணங்கேணி கிராமத்திலிருந்த மரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட ராதிகா, விக்னேஷ் இருவரும் ஒரு சமூகம், தற்கொலைக்கு காரணமான பிரேம்குமார் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் வழக்கம்போல மாவட்டத்தில் பதற்றம் பற்றிக்கொண்டது. அரசியல் அறிக்கைகளும் வெளியாயின. அன்று இரவே மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் குவிந்த உறவினர்களும், பா.ம.க.வினரும் தற்கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகளை கைதுசெய்யக் கோரி முற்றுகையிட்டனர்.


பின்னர் விருத்தாசலம்-கடலூர் சாலையில் மறியல் செய்தனர். நள்ளிரவு 12 மணி வரை மறியல் தொடர்ந்ததால் அங்கு வந்த காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்பேரில் அதிவிரைவுப் படையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இந்நிலையில் மாவட்டக் கண்காணிப்பாளர் சரவணன் முன்னிலையில் பிரேம்குமார் சரணடைந்தார். அவரது தந்தை பன்னீர்செல்வத்தையும், சித்தப்பா மகன் வல்லரசுவையும் மந்தாரக்குப்பம் காவல்துறையினர் கைதுசெய்தனர். கடந்த மே மாதம் 8-ஆம் தேதி காதல் விவகாரத்தில் கருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி திலகவதியின் கொலை கலவரத்தை ஏற்படுத்தியது. சரியாக ஒருமாதம் கடந்த நிலையில் ஜூன் 10-ஆம் தேதி ராதிகாவும் விக்னேஷும், தற்கொலை செய்துகொண்டனர். இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டது ஒரு சமூகமாக வும் பாதிப்புக்கு காரணமானது ஒரு சமூகமாகவும் இருப்பதால், சமூக இணக்கத்தில் பாதிப்பு வருமோ என்ற அச்சம் அப் பகுதியில் எழுந்துள்ளது.

 

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.