Skip to main content

"பெரியாரை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் யாரும் கட்சி நடத்த முடியாது.." - முத்தரசன் பேச்சு!

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

பெரியார் நினைவு நாள் கூட்டம் சென்னையில் உள்ள பெரியார் திடலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் பங்கேற்று பெரியார் தொடர்பான கருத்துக்களை பேசினார்கள். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த  முத்தரசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " பெரியார் நினைவுநாள் தற்போது சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. நான் யாரையும் மனதில் வைத்து பேசாமல் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த நாள்தான் இன்று அதிகம் நின்று கொண்டிருக்கிறது. நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான அவசியம் உள்ளது. அது காலத்தின் கட்டாயமும் கூட. தற்போது பெரியார் தொடர்பாக முகநூலில் தவறான முறையில் சில செய்திகளை பதிவிட்டுள்ளனர். இதற்கு அனைத்து கட்சிகளும் , அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

jk



நான் அதை முதலில் பார்க்கவில்லை, எனக்கு தெரியாது. திமுக தலைவர் தளபதியும் அதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். வேறு சிலரும் அதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள். ஏனென்றால் பெரியாரை விட்டுவிட்டு வேறு யாரும் தமிழ்நாட்டில் கட்சி நடத்த முடியாது. வேறு சிலர் கண்டனம் தெரிவித்திருந்தாலும் அவர்கள் தற்போது தவறான இடத்தில் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.  இருந்தாலும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கும் சேர்ந்தே வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார் குறித்து தவறாக பதிவு செய்ததை பிறகு நீக்கியிருக்கிறார்கள். இந்த போடுவது நீக்குவது எல்லாம் அவர்களுக்கே உரிய ஒன்று. நாம் அத்தகைய முறைகளை ஒருபோதும் கையாள்வது கிடையாது. பெரியாரிசம் என்பது விஞ்ஞானம். விஞ்ஞானம் ஒருபோதும் அழியாது. யாராலும் அழிக்க முடியாது. 

 

மார்க்ஸ்சியம் ஒரு விஞ்ஞானம், அதையும் அழிக்க முடியாது. அது மேலும் மேலும் வளரத்தான் செய்யும். ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் விளையாட்டாக நண்பர் ஒருவரை பார்த்து சொன்னேன், எப்போது போனை பார்த்தாலும் பேசிக்கொண்டே இருக்கிறீர்களே, அந்த போனை முதுகில் கட்டிக்கொள்ளுங்களேன் என்று விளையாட்டாக கூறுவேன். ஆனால் இன்று என்ன நடைபெற்று கொண்டுள்ளது. நாம் எல்லோரிடமும் பாக்கெட்டில் செல்போன் உள்ளது. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாதிரி நடக்கும் என்று நினைத்தோமா? அதுதான் விஞ்ஞானம். அதை போலவே பெரியாரின் கருத்துக்களும் விஞ்ஞானத்தை போன்றே இருக்கும், மக்களுக்கு பயனளிக்கும் விதமாக இருக்கும்.

இந்த மேடையில் திருமுருகன் காந்தி கவுரவப்படுத்தப்பட்டுள்ளார். உங்களை இயக்குவது யார் என்று நீதிமன்றமே அவரை பார்த்து கேட்டுள்ளது. இன்று அதற்கான பதில் கொடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அரசாங்கம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் தேவையா என்று நாம் யோசிக்க வேண்டும். வழக்கு போடுவது ஒரு பிரச்சனையே இல்லை. இந்த சர்க்கார் எதற்கெல்லம் வழக்கு போட்டார்கள் என்று பார்த்தால் வெட்கமாக இருக்கும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தற்காக வழக்கு போட்டதுதான் இந்த அரசாங்கங்கத்தின் மிக முக்கிய சாதனை. எனவே அவர்கள் வழக்கு போடுவார்கள் என்று நாம் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. நமக்கான் உரிமைகளை நாம் போராடியாவது பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது" என்றார்.
 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.