Skip to main content

கரோனா மரணங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020


கரோனாவில் இறந்தவர்களை எப்படிக் கையாளுவது என்று தெரியாததால், ஆந்திர மருத்துவர் ஒருவரின் உடல் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்பட்ட கொடுமை அரங்கேறியிருக்கிறது. கடைசிவரை உயிர் காக்கும் மருத்துவச் சேவையில் ஈடுபட்டிருந்த அந்த மருத்துவரின் உடலுக்கு, கொஞ்சமும் மனிதாபிமனம் காட்டப்படவில்லை என்பது பெரும் கொடுமையாகும்.
 

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த பிரபல எழும்பு நோய் மருத்துவர் லட்சுமி நாராயண ரெட்டி. 60 வயதை நெருங்கும் அவருக்கு, அவர் சிகிச்சை தந்த நோயாளிகள் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அங்கே இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அவர் அட்மிட் செய்யப்பட்டார். எனினும் முன்னேற்றம் இல்லாததால், 13-ந் தேதி அவரைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்து சென்னை வானகரத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்தார்கள். 
 

 

coronavirus peoples follow instructions


அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் மூச்சுத்திணறலால் மரணமடைந்தார். அவரை சென்னைக்கு அழைத்து வந்த அவருடைய மனைவிக்கும் டிரைவருக்கும் கரோனா இருப்பது உறுதியானதால், அவர்களும் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த நிலையில், மரணமடைந்த மருத்துவரின் உடலைச் சென்னையிலேயே தகனம் செய்ய முடிவானது. இதைத்தொடர்ந்து அம்பத்தூர் மயானத்திற்கு அவரது உடலை மருத்துவமனை ஊழியர்கள், பாதுகாப்பு உடையணிந்து ஆம்புலன்ஸில் எடுத்துச்சென்றபோது, அங்கிருந்த மயான ஊழியர்கள், எங்களுக்கும் பாதுகாப்பு உடை கொடுத்தால்தான் இறந்த உடலைத் தகனம் செய்வோம் என்றனர். 
 

http://onelink.to/nknapp


இதற்கிடையே அக்கம் பக்க மக்கள் கூடி, கரோனா நோயாளியின் உடலை இங்கே தகனம் செய்யக்கூடாது என்று கடும் எதிர்ப்புகாட்ட, அவர் உடலை  அங்கிருந்து திரும்ப மருத்துவமனைக்கே எடுத்துச் செல்லும் நிலை  ஏற்பட்டது. இறந்த மருத்துவரை தகனம் செய்யக் கூட முடியாத நிலைக்கு என்ன காரணம்? அவரைத் தகனம் செய்தால் கரோனா அந்தப் பகுதி மக்களுக்குத் தொற்றும் என்ற  அறியாமைதான் காரணம். கரோனா நோயாளிகள் இறந்தால், அவர்களின் உடலை எப்படி அணுகவேண்டும்? எப்படி இறுதிச் சடங்குகள் நடத்தப்படவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுக் குறிப்புகள் இருந்தபோதும், அதை உரியவர்களுக்கு  இங்கே யாரும் எடுத்துச்செல்லவில்லை என்பதே இதுபோன்ற அவலங்களுக்குக் காரணம்.  
 

முக்கியமான வழிகாட்டுக் குறிப்புகள்:

1) கரோனா நோயாளிகளின் உடல்களுக்கு, உரிய பாதுகாப்போடு இறுதிச் சடங்குகள் நடத்துவதால், எவ்விதமான சிக்கலும் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

2) மயான ஊழியர்கள் இது போன்ற நேரத்தில் கிருமி நாசினியைப் பயன்படுத்துவதோடு, முகக் கவசத்தையும் கையுறைகளையும் அணிந்துகொள்ள வேண்டும்.

3) இறந்தவர் உடல்  ஒரு பையில் வைக்கப்பட்டிருக்கும். சடலத்தின் முகத்தருகே இருக்கும் ஜிப்பைத் திறந்து, இறுதியாக உறவினர்கள்கள் விரும்பினால் நோயாளியின் முகத்தை ஒரு முறை திறந்து காட்டலாம் (அப்படி காட்டுபவர் கையில் கிருமி நாசினி பயன்படுத்தி, கையுறை அணிந்திருக்க வேண்டும்).

4) இறந்தவரின் உடலை உறவினர்கள் தொடாதபடி, இறுதி மரியாதை என்ற வகையில் பூக்களைத் தூவுதல், புனித நூல்களின் வரிகளைப் படித்தல் என்பது போன்ற செயல்களை அனுமதிக்கலாம்.
 

coronavirus peoples follow instructions

 

5) இறந்தவரின் உடலைக் கழுவுவதோ, அதை உறவினர்கள் தொடுவதோ, முத்தம் கொடுப்பதோ கூடாது. மேலும் சடலத்தைத் தொட்டுச் செய்யும் எந்தவித சடங்குகளையும் அனுமதிக்கக் கூடாது.

6) தகனமோ அடக்கமோ, இறுதிச் சடங்கு முடிந்ததும் , மயான ஊழியர்களும், அந்த நேரத்தில் அங்கே  இருந்தவர்களும் கைகளைச் சுத்தம் செய்யுதல் போன்ற செயல்களை உடனடியாகச் செய்யவேண்டும்.

7) கரோனா நோயாளிகளைத் தகனம் செய்த சாம்பலில்  எவ்விதக் கிருமியும் இருக்காது. எனவே, எவ்வித நோயும் அதனால் பரவுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, அதை வழக்கம்போல சேகரித்து உறவினர்களிடம் இறுதிச் சடங்குகளுக்காகக் கொடுக்கலாம்.

8) இறுதிச் சடங்கில் நிறைய பேர் கூடுவது தவிர்க்க வேண்டும். ஏனெனில் இறந்தவர்களின் உறவினர்களில் யாருக்காவது வைரஸ் தொற்று இருந்தால் அது மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பாகிவிடலாம். மேலும் இறுதிச் சடங்குகளில் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும்.

இந்தச் செய்திகள் கரோனாவால் இறக்கும் நோயாளிகள் குடும்பத்தினருக்கும், மயான ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படவேண்டும். இதையெல்லாம் உரிய வகையில் தெரிவிக்காததால்தான்  கரோனா நோயால் இறப்பவர்களின் சடலங்கள், வீண் பயத்தால் அலைக்கழிக்கப்படுகின்றன.அதேபோல் தமிழக அரசு, இந்தக் கரோனா காலத்தில். மயான ஊழியர்கள் அனைவருக்கும், உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, அவர்களுக்கும் தைரியமூட்டவேண்டும்.


கடைசியாக ஒன்று, கரோனா நோயாளிகள், வெறுக்கத்தக்கவர்கள் அல்ல. அன்போடும் அக்கறையோடும் பராமரிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு நாம் தரும் 'தைரியமே' அவர்களை, நோயின் பிடியிலிருந்து விரைவில் மீண்டெழச்செய்யும் அருமருந்து.


 

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.