Skip to main content

கரோனா மரணங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020


கரோனாவில் இறந்தவர்களை எப்படிக் கையாளுவது என்று தெரியாததால், ஆந்திர மருத்துவர் ஒருவரின் உடல் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்பட்ட கொடுமை அரங்கேறியிருக்கிறது. கடைசிவரை உயிர் காக்கும் மருத்துவச் சேவையில் ஈடுபட்டிருந்த அந்த மருத்துவரின் உடலுக்கு, கொஞ்சமும் மனிதாபிமனம் காட்டப்படவில்லை என்பது பெரும் கொடுமையாகும்.
 

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த பிரபல எழும்பு நோய் மருத்துவர் லட்சுமி நாராயண ரெட்டி. 60 வயதை நெருங்கும் அவருக்கு, அவர் சிகிச்சை தந்த நோயாளிகள் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அங்கே இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அவர் அட்மிட் செய்யப்பட்டார். எனினும் முன்னேற்றம் இல்லாததால், 13-ந் தேதி அவரைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்து சென்னை வானகரத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்தார்கள். 
 

 

coronavirus peoples follow instructions


அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் மூச்சுத்திணறலால் மரணமடைந்தார். அவரை சென்னைக்கு அழைத்து வந்த அவருடைய மனைவிக்கும் டிரைவருக்கும் கரோனா இருப்பது உறுதியானதால், அவர்களும் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த நிலையில், மரணமடைந்த மருத்துவரின் உடலைச் சென்னையிலேயே தகனம் செய்ய முடிவானது. இதைத்தொடர்ந்து அம்பத்தூர் மயானத்திற்கு அவரது உடலை மருத்துவமனை ஊழியர்கள், பாதுகாப்பு உடையணிந்து ஆம்புலன்ஸில் எடுத்துச்சென்றபோது, அங்கிருந்த மயான ஊழியர்கள், எங்களுக்கும் பாதுகாப்பு உடை கொடுத்தால்தான் இறந்த உடலைத் தகனம் செய்வோம் என்றனர். 
 

http://onelink.to/nknapp


இதற்கிடையே அக்கம் பக்க மக்கள் கூடி, கரோனா நோயாளியின் உடலை இங்கே தகனம் செய்யக்கூடாது என்று கடும் எதிர்ப்புகாட்ட, அவர் உடலை  அங்கிருந்து திரும்ப மருத்துவமனைக்கே எடுத்துச் செல்லும் நிலை  ஏற்பட்டது. இறந்த மருத்துவரை தகனம் செய்யக் கூட முடியாத நிலைக்கு என்ன காரணம்? அவரைத் தகனம் செய்தால் கரோனா அந்தப் பகுதி மக்களுக்குத் தொற்றும் என்ற  அறியாமைதான் காரணம். கரோனா நோயாளிகள் இறந்தால், அவர்களின் உடலை எப்படி அணுகவேண்டும்? எப்படி இறுதிச் சடங்குகள் நடத்தப்படவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுக் குறிப்புகள் இருந்தபோதும், அதை உரியவர்களுக்கு  இங்கே யாரும் எடுத்துச்செல்லவில்லை என்பதே இதுபோன்ற அவலங்களுக்குக் காரணம்.  
 

முக்கியமான வழிகாட்டுக் குறிப்புகள்:

1) கரோனா நோயாளிகளின் உடல்களுக்கு, உரிய பாதுகாப்போடு இறுதிச் சடங்குகள் நடத்துவதால், எவ்விதமான சிக்கலும் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

2) மயான ஊழியர்கள் இது போன்ற நேரத்தில் கிருமி நாசினியைப் பயன்படுத்துவதோடு, முகக் கவசத்தையும் கையுறைகளையும் அணிந்துகொள்ள வேண்டும்.

3) இறந்தவர் உடல்  ஒரு பையில் வைக்கப்பட்டிருக்கும். சடலத்தின் முகத்தருகே இருக்கும் ஜிப்பைத் திறந்து, இறுதியாக உறவினர்கள்கள் விரும்பினால் நோயாளியின் முகத்தை ஒரு முறை திறந்து காட்டலாம் (அப்படி காட்டுபவர் கையில் கிருமி நாசினி பயன்படுத்தி, கையுறை அணிந்திருக்க வேண்டும்).

4) இறந்தவரின் உடலை உறவினர்கள் தொடாதபடி, இறுதி மரியாதை என்ற வகையில் பூக்களைத் தூவுதல், புனித நூல்களின் வரிகளைப் படித்தல் என்பது போன்ற செயல்களை அனுமதிக்கலாம்.
 

coronavirus peoples follow instructions

 

5) இறந்தவரின் உடலைக் கழுவுவதோ, அதை உறவினர்கள் தொடுவதோ, முத்தம் கொடுப்பதோ கூடாது. மேலும் சடலத்தைத் தொட்டுச் செய்யும் எந்தவித சடங்குகளையும் அனுமதிக்கக் கூடாது.

6) தகனமோ அடக்கமோ, இறுதிச் சடங்கு முடிந்ததும் , மயான ஊழியர்களும், அந்த நேரத்தில் அங்கே  இருந்தவர்களும் கைகளைச் சுத்தம் செய்யுதல் போன்ற செயல்களை உடனடியாகச் செய்யவேண்டும்.

7) கரோனா நோயாளிகளைத் தகனம் செய்த சாம்பலில்  எவ்விதக் கிருமியும் இருக்காது. எனவே, எவ்வித நோயும் அதனால் பரவுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, அதை வழக்கம்போல சேகரித்து உறவினர்களிடம் இறுதிச் சடங்குகளுக்காகக் கொடுக்கலாம்.

8) இறுதிச் சடங்கில் நிறைய பேர் கூடுவது தவிர்க்க வேண்டும். ஏனெனில் இறந்தவர்களின் உறவினர்களில் யாருக்காவது வைரஸ் தொற்று இருந்தால் அது மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பாகிவிடலாம். மேலும் இறுதிச் சடங்குகளில் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும்.

இந்தச் செய்திகள் கரோனாவால் இறக்கும் நோயாளிகள் குடும்பத்தினருக்கும், மயான ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படவேண்டும். இதையெல்லாம் உரிய வகையில் தெரிவிக்காததால்தான்  கரோனா நோயால் இறப்பவர்களின் சடலங்கள், வீண் பயத்தால் அலைக்கழிக்கப்படுகின்றன.அதேபோல் தமிழக அரசு, இந்தக் கரோனா காலத்தில். மயான ஊழியர்கள் அனைவருக்கும், உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, அவர்களுக்கும் தைரியமூட்டவேண்டும்.


கடைசியாக ஒன்று, கரோனா நோயாளிகள், வெறுக்கத்தக்கவர்கள் அல்ல. அன்போடும் அக்கறையோடும் பராமரிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு நாம் தரும் 'தைரியமே' அவர்களை, நோயின் பிடியிலிருந்து விரைவில் மீண்டெழச்செய்யும் அருமருந்து.


 

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார். 

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்