Skip to main content

சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா? நேரம் ஒதுக்காத விஜயபாஸ்கர்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! 

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

ஊரடங்கு நேரத்தில் வாகனத்தை நிறுத்தும் போலீஸ் கூட ஹெல்மெட் இருக்கிறதா? லைசென்ஸ் இருக்கிறதா? என்று கேட்காமல் முகத்தில் "மாஸ்க்' இருக்கிறதா? என்று கேட்டுத்தான் விரட்டியடிக்கிறார்கள். அந்தளவுக்கு, பொதுமக்களே "மாஸ்க்' மாட்டிக்கொண்டு உலாவும் சூழலில், கோரோனா கொடிய நோய்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ச-95 மாஸ்க் கிடைக்கவில்லை.

2020 மார்ச் முதல் வாரத்திலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேச, மருத்துவச்சங்க பிரதிநிதிகள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் செயலாளர் பீலா ஐ.ஏ.எஸ் ஸையும் சந்திக்க முயற்சித்தார்கள். ஆனால், அமைச்சரும் செயலாளரும் இரண்டுபேருமே டாக்டர்களாக இருந்தும் நேரம் ஒதுக்கப்படவில்லை. முன்பிருந்த சுகாதாரச் செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். யாருடைய கருத்தாக இருந்தாலும் காதுகொடுத்து கேட்பார். அவை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பயன்படுத்திக்கொள்வார். ஆனால், பீலா ஐ.ஏ.எஸ். வந்தபிறகு யாருடைய கருத்துப் பரிமாற்றமும் இல்லாமல் போய்விட்டது. செயலாளர் பீலாவிடம் துறைரீதியாக பிரச்சனைகளைக் கொண்டு செல்லவேண்டிய டி.எம்.எஸ்., டி.பி.ஹெச்., டி.எம்.இ., ஆகிய மூன்று சுகாதார இயக்குனர்களுமே பேச முடியாமல் திணறிவருகிறார்கள்.

 

admk



இந்தச்சூழலில்தான், கொரோனா தமிழகத்திலும் பரவ ஆரம்பித்தது. நிலைமை மோசமாக ஆரம்பித்த நிலையில்தான் சுகாதாரத் துறை முன்னாள் செயலாளரும் பேரிடர் மேலாண்மைக்குழுச் செயலாளருமான இராதாகிருஷணன் சுகாதாரத்துறைக்கு கூடுதல் செயலளாராக ஈடுபடுத்தப்படுகிறார். அதற்குப்பிறகுதான், மருத்துவ உபகரணங்கள் என்னென்ன இருக்கிறது என்று பட்டியல் எடுக்கும் போதுதான் மிக முக்கிய பி.பி.இ. எனப்படும் புரஃபஷனல் புரடெக்ஷன் எக்யூப்மெண்ட்களான டிஸ்போஸபிள் தொப்பி, டிரிபிள் லேயர் மாஸ்க், என் -95 மாஸ்க், ஹேண்ட் சானிடஸைர், கவுன், பாலித்தின் கண்ணாடி உள்ளிட்ட உபகரணங்கள்கூட இல்லை என்பது தெரியவருகிறது.


அதற்குப்பிறகு, டி.என். எம்.சி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷனிடம் ஆர்டர் கொடுக்கிறது தமிழக சுகாதாரத்துறை. ஆனால், தனியார் துறையினர் ஏற்கனவே வாங்கி விற்பனை செய்து வருவதாலும் பொதுமக்களும் அதிகம் வாங்கிக்கொண்டதாலும் அரசாங்கத்தின் டி.என்.எம்.எஸ்.சி யால் பர்ச்சேஸ் செய்யமுடிய வில்லை.


இந்தநிலையில்தான், மருத்துவக்கல்லூரி டீன்கள், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்களே மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்களை வெளியில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று செயலாளர் பீலா ஆணை பிறப்பித்தார். அதன், விளைவுதான் சென்னை எழும்பூர் தாய்-சேய்நல மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சம்பத் குமாரி, "வெளியில் மாஸ்க் வாங்கிக்கொள்ளுங்கள்' என்று டாக்டர்களுக்கு உத்தரவிட்ட ஆணை பரவி "சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா?' என்று பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

dmk

மேலும், 10 ரூபாய் விற்ற சாதாரண மாஸ்க் 30 ரூபாய்க்கும் 90 ரூபாய் விலையுள்ள என் -95 மாஸ்க் 300 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வெளியிலும் மாஸ்க் வாங்க முடியாமலேயே நோயாளிகளுடன் ஆபத்தை சந்திக்க ஆரம்பித்தார்கள் அரசு டாக்டர்கள். அவுட் போஸ்ட்டுகளிலும் மாவட்ட பார்டர்களிலும் 5 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. அதில் பரிசோதனைகளில் ஈடுபடுகிறவர்களுக்கும் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுக்கவில்லை.

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் நம்மிடம், பொதுமக்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலே எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு டாக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் அவர் சிகிச்சை அளிக்கும் அத்தனை நோயாளிகளுக்கு எளிதில் தொற்றிவிடும் பேரபாயம் உள்ளது. அப்படியிருக்க, என் -95 மாஸ்க் உள்பட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்களுக்கு உடனே வழங்கவேண்டும். ஒட்டுமொத்த உடலையும் மறைக்கும் கவசமும் வழங்கவேண்டும். ஏற்கனவே, வெண்டிலேட்டர் கருவிகள் குறைவாக உள்ளன. அந்தக்கருவிகள் மற்ற ஹார்ட், கோமா உள்ளிட்ட நோயாளிகளுக்கும் பயன்பட்டுவருவதால் இன்னும் கூடுதலாக வெண்டி லேட்டர்களை வாங்கவேண்டும். அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கவேண்டும் என்கிறார் கோரிக்கையாக.

சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் அமைப்புச்செயலாளர் த.நடராஜனிடம் நாம் பேசியபோது, சென்னையில் சுமார் 300 மொத்த விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். இதில், ஊரடங்கு சூழலில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் 20 சதவீதம்பேர் மருந்துகள் அனுப்பமுடியாமல் இருக்கிறார்கள். அனைத்து, மருந்துக்கடைகளிலும் தற்போது இலவச டோர் டெலிவரி மூலம் அத்தியாவசிய மருந்துகளை அனுப்புகிறோம். அதாவது, உங்கள் அருகிலுள்ள மருந்துக் கடைக்கு ஃபோன் செய்து வாட்ஸ்-அப்பு களில் டாக்டரின் மருந் துச்கீட்டை அனுப்பினால் வீட்டிற்கே வந்து மருந்துகளைக் கொடுத்து விட்டுப்போவார்கள். 10 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்ட மாஸ்க்கின் விலை கட்டுப்படி ஆக வில்லை என்ற காரணத்தினால் தட்டுப்பாடு இருந்தது. மத்திய அரசின் விலை நிர்ணயப்படி இனிமேல் அதிகபட்ச விலையாக 16 ரூபாய்க்கு விற்கப்படும். அதேபோல், 100 எம்.எல். ஹேண்ட் சானிட்டைஸர் 50 ரூபாய்க்குமேல் விற்கமாட்டார்கள் என்றார்.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கச்செயவதோடு மக்கள் இடைவெளி விட்டு வாங்குமளவுக்கு நடவடிக்கை எடுத்து கோரானா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவேண்டும்.
 


 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.