Skip to main content

ஒப்பந்த மனைவிகள் - கெடு முடிந்ததும் ரென்யூவல் செய்யலாம்...

Published on 04/07/2018 | Edited on 04/07/2018
Contract Wives


கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்தியாவில் தேவதாசி முறை இருந்தது. நிலபிரபுகள், செல்வந்தர்கள், உயர் ஜாதியினர் தேவதாசி முறையில் உள்ள பெண்களை தங்களது விருப்பத்திற்கு வைத்துக்கொள்வார்கள். 

 

 

 

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்த தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று பெரும் போராட்டங்கள் நடைப்பெற்று தமிழகத்தில் உள்ள மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மிகக் கடுமையான போராட்டங்களை நடத்தி அந்த தேவதாசி முறைக்கு சட்டப்படி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 
 

இந்தியாவில் தென் மாநிலங்களில் இந்த தேவதாசி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டாலும் வட மாநிலங்களில் பெயர் மாறி தேவதாசி முறை இப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கு உதாரணம்தான், ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு பெண்களை மனைவிகளாக வைத்துக்கொள்வது. உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்த ஒப்பந்த மனைவிகள் முறை இன்றும் நீடித்து வருகிறது. 

 

 

 

வசதியானவர்கள், உயர் ஜாதி வகுப்பினர் பெண்களை ஒப்பந்த அடிப்படையில் வைத்துக்கொள்ள அங்குள்ள ஏஜென்சிகள் மூலம் விண்ணப்பிக்கிறார்கள். குறைந்தபட்சம் 6 மாதம் அல்லது ஒரு வருடம் வரை பெண்கள் சம்மந்தப்பட்ட நபருக்கு மனைவியாக இருக்க வேண்டும். அப்படி செல்லும் அந்த பெண்ணுக்கு ஊதியம் மாதம் ரூபாய் 5 ஆயிரம் முதல் கொடுக்கப்படுகிறது. உணவு, தங்கும் அறை, மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
 

இதையெல்லாம் ஒப்பந்த பத்திரமாக பதிவு செய்யப்பட்டு, அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் சம்மந்தப்பட்ட நபர் வழங்குவார். ஒருவேளை காலக்கெடு முடிந்த பிறகு, அந்த பெண்ணே அவருக்கு தேவை என்றால் மீண்டும் ஒரு வருடம் காலநீடிப்பு ஒப்பந்தம் போடப்படுகிறது. இதுபோன்ற முறைகள் உத்திரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் செல்வந்தர்கள் குடும்பங்களில் இன்றும் இருந்து வருகிறது. 
 

ஒப்பந்த மனைவிகளாக போகும் பெண்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பெண் அடிமைத்தனம் இல்லை. பெண்கள் சுயமாக இயங்குகிறார்கள், முன்னேறுகிறார்கள் என மத்திய அரசு சாதனை பட்டியலை வெளியிட்டுக்கொண்டிருக்க ஒழிக்கப்பட்ட தேவதாசி முறை புதிய பெயரில் ஒப்பந்தம் மனைவிகளாக வடமாநிலங்களில் நீடித்து வருகிறது. 
 

 

 


 

Next Story

கள ஆய்வு மேற்கொண்ட மேயர்; ஒப்பந்ததாரர்களுக்கு அதிரடி உத்தரவு 

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

trichy mayor anbazhagan field visit corporation contractract work 

 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம்  மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பெறப்படும் மனுக்கள் பரிசீலித்து நேரில் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

இதன் ஒரு பகுதியாக, மாநகரப் பகுதியில் பாதாளச் சாக்கடை பணியில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், பாதாளச் சாக்கடை பணிகள் முடிந்த இடங்களில் தார்ச் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று (12.05.2023) மண்டல எண் 4, வார்டு எண் 51 கீழ கொசத் தெரு பகுதிகளில் நடைபெற்று வரும் புதைவடிகால் சாக்கடை பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடைபெற்ற கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி மற்றும் சிமெண்ட் சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.

 

மேலும் 53 வது வார்டு கணேசபுரம் பகுதியில் புதிதாக புதைவடிகால் சாக்கடை அமைக்கும் பணியையும் பார்வையிட்டு பணிகளை விரைவில் தொடங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில் செயற்பொறியாளர் கே. எஸ். பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் த.துர்காதேவி, உதவி ஆணையர் ச.நா. சண்முகம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். 

 

 

Next Story

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்திலிருந்து தலா ரூ.40 ஆயிரம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

 

bsnl contract employees chennai high court order

 

 

தமிழகம் முழுவதும் பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் பணியாற்றிய 3 ஆயிரத்து 528  ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தில் 40 ஆயிரம் ரூபாயை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

2019- ஆம் ஆண்டு ஜனவரி முதல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டு வந்தது. 

 

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த பணியாளர் சங்கம் மற்றும் தமிழ் மாநில ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

 

இந்த வழக்குகள், நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்த நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை  60 கோடி ரூபாயில் 25 சதவீதமான 15 கோடி ரூபாயை, இந்த வழக்குகளுக்காக உருவாக்கப்பட்ட கணக்கில் செலுத்தப்பட்டதாக பி.எஸ்.என்.எல். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

bsnl contract employees chennai high court order

 

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நீண்ட நாட்களாக ஊதியம் முறையாக வழங்கப்படாதது மற்றும் பண்டிகை காலங்கள் நெருங்குவதைக் கருத்தில் கொண்டு,  15 கோடி ரூபாயை, 3 ஆயிரத்து 528 ஒப்பந்த பணியாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க தொழிலாளர் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, ஒவ்வொருவருக்கும் தலா 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும், இந்த தொகையை விட நிலுவை ஊதியம் குறைவாக இருந்தால் அதை மட்டும் வழங்கினால் போதும். இந்த நடைமுறையை மேற்கொள்வதற்காக, தொழிலாளர் ஆணையருக்கு உதவுவதற்காக, இந்த விவகாரம் குறித்து முழுமையாக அறிந்த 3 நபர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவிடம், ஒப்பந்த பணியாளர்களின் விவரங்களை முழுமையாக வழங்க வேண்டும் என பி.எஸ்.என்.எல்.-க்கு உத்தரவிட்டுள்ளார்.

 

நவம்பர் 10, 11, 12 தேதிகளில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு, ஆதாரங்களை சரிபார்த்த பின் ஊதிய தொகையை வழங்கவேண்டுமெனவும், இந்த நடைமுறைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை, நவம்பர் 25- ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும்,  தொழிலாளர் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.