Skip to main content

மத்திய , மாநில அரசுகளுக்கு பொதுமக்கள் இணையதளம் மூலம் கடிதம் அனுப்பலாம்!

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

மத்திய அரசின் "டிஜிட்டல் இந்தியா" (Digital India) திட்டத்தின் கீழ் பல்வேறு மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசு துறைகள் மிண்ணணுக்கு மாறியுள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது. இந்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது "National Informatics Centre" நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.மத்திய பணியாளர் , பொதுமக்கள் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் கீழ்  ( Ministry of Personnel ,Public Grievances & Pensions ) இயங்கும்  "மையப்படுத்தப்பட்ட பொதுமக்களிடம் குறைதீர் மற்றும் கண்காணிப்பு அமைப்பு" (Centralized Public Grievance Redress And Monitoring System )"CPGRAMS" பொதுமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் சேரவில்லை  மற்றும் தங்கள் பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை உட்பட அனைத்தும் இணையதளத்தில் எளிமையாக மனு அளிக்கும் வகையில் இணையதளத்தை உருவாக்கி உள்ளது.இந்த இணைய தளத்தின் முகவரி : https://pgportal.gov.in/ ஆகும். இந்த இணைய தளம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தனித்தனியே மனு அளிக்கும் வசதி இந்த இணைய தளத்தில் உள்ளது. 

online letter sent


மனுதாரர் முதலில் இந்த இணைய  https://pgportal.gov.in/ பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன் பின் தனக்கென்று நிரந்தர கணக்கை இந்த இணையளத்தில் தொடங்க வேண்டும். இதில் மனுதாரர் பெயர், தந்தை பெயர் , முகவரி , ஈ-மெயில் முகவரி, தொலைப்பேசி எண் , ரகசிய குறியீடு  உள்ளிட்டவை கட்டாயம் உள்ளீட்டால் மட்டுமே நிரந்தர கணக்கு எண் செயல்பட தொடங்கும். பின் மனுதாரரின் மனு மாநில அரசை சார்ந்ததாக இருப்பின் " மாநில அரசுகள் " (STATE GOVERNMENTs) என்பதை தேர்வு செய்து "OK" செய்ய வேண்டும். மேலும் மாநில அரசு சார்ந்ததாக மனு இல்லையெனில் "மத்திய அரசு" என்பதை தேர்வு செய்து எந்த துறைக்கு மனு சார்ந்தது என்பதை ஆராய்ந்து அந்த துறையை தேர்வு செய்ய வேண்டும். பின்பு செவ்வக வடிவில் கடிதம் எழுதுவதற்கென்று கட்டம் இருக்கும். அதில் மனுதாரர் ஆங்கிலம் ( அல்லது) ஹிந்தியில் டைப் செய்து " SUBMIT" என கிளிக் செய்ய வேண்டும். பின்பு பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும் ஈ-மெயில் முகவரிக்கு கடிதம் அனுப்பியதற்கான "Acknowledgement No" எண் வரும். இந்த எண்ணை தங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

online letter

பின் எவ்வாறு மனுவின் நிலையை அறிவது ? மனுதாரர் ஏற்கனவே நிரந்தர கணக்கு எண் இருந்தால் அந்த இணையதள பக்கத்திற்குள் சென்று " USER NAME" மற்றும் ரகசிய குறியீட்டை ( Password) குறிப்பிட்டு "ok" செய்தால் மனுதாரரின் மனுவின் நிலை தற்போது எந்த துறையில் உள்ளது எந்த துறை சார்ந்த அதிகாரி பரிசீலனை செய்து வருகிறார் என்பதையும் , இதுவரை மனுதாரர் எத்தனை மனுக்களை இந்த இணையதளம் வாயிலாக அனுப்பியுள்ளார் என்பதும் , எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பது தொடர்பான முழு விபரங்கள் மனுதாரர் கணக்கில் இருக்கும். இந்த இணையதளத்தில் யார் யார் மனு அளிக்கலாம் ? பொதுமக்கள் , முன்னால் ராணுவ அதிகாரிகள் , ஓய்வூதியதாரர்கள் , முன்னால் அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் இந்த இணைய தளத்தை பயன்படுத்தி புகார் மனுவோ ( அல்லது ) அரசின் திட்டங்கள் குறித்த கடிதத்தையோ மிக எளிமையான முறையில் அனுப்பலாம். தமிழக மக்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மிக எளிமையாக  இணைய தளத்தை மையமாக கொண்டு கடிதம் எழுதலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். "MyGrievance" என்ற மொபைல் செயலியும் உள்ளது. இந்த செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து பின் எப்போது வேண்டும் எளிமையான முறையில் பயன்படுத்தி மனுதாரர் தீர்வு காணலாம்.

 

பி.சந்தோஷ் ,சேலம்  

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.