Skip to main content

கர்நாடக சபாநாயகர் ரமேஷை நீக்க வேண்டும் - எடியூரப்பா போர்க்கொடி

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

 

கர்நாடகாவில் இன்று உருவாகியிருக்கும் நிலைக்கு காரணம் காங்கிரஸின் சித்தராமையாவுக்கும், முதல்வர் எச்.டி.குமாரசாமிக்கும் இடையே நடைபெற்ற மோதல்தான் என்கின்றனர் இருகட்சியைச் சேர்ந்தவர்களும். 
 

சித்தராமையாவுக்கு நெருக்கமானவர் ராமலிங்கம் என்கிற ஏழு தடவை கர்நாடக எம்எல்ஏவாக ஜெயித்த நபர். இவரை நம்பித்தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏழு எம்எல்ஏக்கள் சென்றனர். இந்த வாய்ப்பை பாஜக பயன்படுத்திக்கொண்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்தால் நீங்கள் 30 கோடி சம்பாதிப்பீர்கள். அந்த தொகையை நாங்கள் கொடுத்துவிடுகிறோம் என்பதுதான் பாஜக இந்த எம்எல்ஏக்களிடம் வைத்திருக்கும் டீல்.

 

BSYeddyurappa


நாங்கள் சித்தராமையா சொற்படித்தான் குமாரசாமியின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தோம் என சிவராம்ஹெப்பர் என்கிற அதிருப்தி எம்எல்ஏ இன்று வரை பேசிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை சித்தராமையா நினைத்தால் எடியூரப்பா அரசு கவிழ்ந்துவிடும். அவர் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரையும் காங்கிரஸ் ஆதரவு நிலைக்கு கொண்டுவந்துவிடுவார் என்பதால்தான் எடியூரப்பா அவர் மட்டும் முதல்வராக பதவி ஏற்கிறார். 


 

தேவகௌடா சித்தராமையா மீது இரண்டு தடவை புகார் செய்திருக்கிறார். ராகுல்காந்தியும் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் உள்ளிருந்துகொண்டே கவிழ்த்ததால்தான் குமாரசாமியின் அரசு கவிழ்ந்தது என்று சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் சபாநாயகர் ரமேஷ் இரண்டு அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி இழப்பு செய்திருக்கிறார். இவர்களது தகுதி இழப்பு என்பது தமிழ்நாட்டில் நடந்ததுபோல் இல்லை. இவர்களது சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் மறுபடியும் போட்டியிடக்கூடாது என புதுவிதமான கண்டிஷன்களைப்போட்டு சஸ்பெண்ட் செய்து வருகிறார். இவரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 


 

வருகிற 31ஆம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார் என்றால் அடுத்த ஆறு மாதத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசை ஓட்டலாம். அப்படி வெற்றி பெற வேண்டும் என்றால் மகாராஷ்டிராவில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் கர்நாடகத்திற்கு வரக்கூடாது. ஆனால் தற்போது இருக்கும் சபாநாயகர் இரண்டு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு, மற்ற எம்எல்ஏக்களை காங்கிரஸ் வசம் கொண்டுவர வலைவிரிக்கிறார். இதற்காக சித்தராமையாவின் உதவியையும் கோருகிறார். இந்த புதிய கேம் பிளானை முறியடிக்க சபாநாயகர் ரமேஷை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எடியூரப்பா ஒற்றைக் காலில் நின்று கோரிக்கை வைத்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.