Skip to main content

தாதாக்கள், ரவுடிகள், மாஃபியாக்கள் பா.ஜ.க.வில் சேருவார்கள்: மக்கள் அதிர்ச்சியடைந்து பாஜகவை தூக்கி எறிவார்கள்! எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலடி

Published on 12/08/2020 | Edited on 12/08/2020

 

v p duraisamy bjp

 

பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி இன்று காலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''தி.மு.க. Vs அ.தி.மு.க. என போன வாரம் வரை நிலைப்பாடு இருந்தது. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் சேர்ந்த பிறகு பா.ஜ.க. Vs தி.மு.க. என்ற நிலை மாறியிருக்கிறது. இது வளர்ச்சி. நாங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம். கூட்டணிக்கு தலைமை நாங்கள்தான். நாங்கள் தேசிய கட்சி'' என்றார். தி.மு.க.வில் இருந்து வேறு யாராவது பா.ஜ.க.வுக்கு வருகிறார்களா என்ற கேள்விக்கு, ''நாகரீகம் கருதி நாங்கள் சொல்ல மாட்டோம். நிரம்பப் பேர் வருவார்கள். நீங்களே ஆச்சரிப்படுவீர்கள். அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாவார்கள்'' என்றார். 

 

வி.பி.துரைசாமியின் பேட்டி குறித்து அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் நக்கீரன் இணையத்தளத்தில் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார். 

 

"தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு தியங்கியே கிடந்தது", என்று விவேக சிந்தாமணியில் ஒரு பாடல் உண்டு. அது போல், 'தாமரை' மலரில் தேன் குடித்த வண்டாக வி.பி.துரைசாமி இருக்கிறார் போலும். அதனால் தான், "போன வாரம் வரை தி.மு.க Vs அ.திமு.க என இருந்தது. இந்த வாரம் பா.ஜ.க Vs தி.மு.க என மாறி விட்டது", என்று சொல்கிறார். 

 

ஒரே வாரத்தில் நிலைமை மாறி விட்டதாம், அதுவும் ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் தி.மு.கவிலிருந்து பா.ஜ.க.வில் சேர்ந்ததால் இவ்வளவு வேக வளர்ச்சியாம். ஏற்கனவே கு.க.செல்வம் அ.தி.மு.க.வில் இருந்தார், பிறகு தி.மு.க.வில் இருந்தார். இப்போது பா.ஜ.க.வில் சேர்ந்திருக்கிறார். அவர் உடன் இரண்டு பேர் கூட போகவில்லை. ஆனால், வளர்ச்சியாம்.

 

நாட்டில் இருப்போர் எல்லோருக்கும் "ஆண்ட்டி-இண்டியன்" சர்டிபிகேட் கொடுத்து முயற்சி செய்தும் சாரண இயக்கத்துத் தேர்தலில் தோற்று போய் விட்டார் எச்.ராஜா. இப்போ கு.க.செல்வம் வந்ததால், தாமரை பூத்து குலுங்கப் போகிறதாம். 

 

s. s. sivasankar

 

பா.ஜ.கவின் புது தலைவர் முருகன் கட்சியில் புதியவர்களைச் சேர்க்கக் கடும் முயற்சி எடுக்கிறார். அப்படித்தான், வி.பி.துரைசாமியையும், கு.க.செல்வத்தையும் சேர்த்தார். எண்கவுண்டருக்கு போலீஸால் தேடப்படும் கல்வெட்டு ரவி, ஆறு முறை குண்டர் சட்டத்தில் சிறைசென்ற சத்யராஜ் ஆகிய வடசென்னை தாதாக்களை பா.ஜ.க.வில் சேர்த்து கட்சியை "வலு"ப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். 

 

வி.பி.துரைசாமி சொல்கிறார், "இன்னும் நிரம்ப பேர் வருவாங்க, நீங்க ஆச்சரியப்படுவீங்க, அவங்க அதிர்ச்சிக்குள்ளாவாங்க", என்று.

 

CNC

 

இரண்டு நாட்களுக்கு முன், பா.ஜ.க. தேசிய செயற்கு உறுப்பினர் பெரம்பலூர் அடைக்கலராஜ் அபின் கடத்தி, போலீஸில் சிக்கி இருக்கிறார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் தானே இந்தக் கேவலமான வேலையை பா.ஜ.க.வினர் செய்கிறார்கள் என மக்கள் நினைக்கிறார்கள்.

 

வி.பி.துரைசாமி சொல்வது போல், கல்வெட்டு ரவி, குண்டாஸ் சத்யராஜ், அபின் அடைக்கலராஜ் வழியில் இன்னும் பல தாதாக்கள், ரவுடிகள், போதை மஃபியாக்கள் என நிரம்பப் பேர் பா.ஜ.கவில் சேருவார்கள். மக்கள் அதைக் கண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைவார்கள். பா.ஜ.க.வை தமிழகத்தை விட்டுத் தூக்கி எறிவார்கள்! இவ்வாறு கூறியுள்ளார். 

 

 


 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.