Skip to main content

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை கவிழ்க்க சதி! பாஜகவின் அதிரடி திட்டம்! 

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக அமைச்சர் சண்முகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் அ.தி.மு.க.வில் மீண்டும் உள்கட்சி மோதலை வெடிக்க வைத்திருக்கிறது. "எடப்பாடியின் டபுள் கேம் விளையாட்டில் சண்முகம் அதிர்ந்துபோயிருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க.வினர்.

 

admk



ஒரே நாடு ஒரே தேர்தல்' என்கிற கொள்கையை அமல்படுத்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நாடாளுமன்ற வளாகத்தில் 19-ந்தேதி நடத்தினார் பிரதமர் மோடி. இதில் கலந்து கொள்வதற்காக 40-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கூட்டத்தை காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஸ்ட்ரிய சமிதி உள்பட 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. ஐக்கிய ஜனதா தளம், தேசிய வாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, அகாலி தளம், பி.டி.பி., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் உள்பட 15-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

 

admk



பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க. தலைமைக்கும் அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தையும், ராஜ்யசபா எம்.பி. வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணனையும் அனுப்பி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், அவர்கள் இருவரையும் கூட்டத்திற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது பிரதமர் அலுவலகம். இதனால் அவர்கள் மனம் நொந்தனர். மத்திய அரசின் இந்த அணுகுமுறை அ.தி.மு.க.வை மட்டுமல்ல பல்வேறு அரசியல் கட்சிகளையும் அதிர்ச்சியடையவே செய்தது.

 

admk



தேசிய அரசியலை உன்னிப்பாக கவனித்து வருபவரும் அரசியல் விமர்சகருமான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தேவசகாயம்,  நாடாளுமன்றத் தேர்தல் இப்போதுதான் முடிந்திருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகாலம் மோடியின் ஆட்சி நீடிக்கும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முழக்கத்துக்கு என்ன அவசியம் வந்தது? இதே முழக்கத்தை 3 ஆண்டுகளாக சொல்லி வருகிறார் மோடி. ஜனநாயகத்திற்கு இது உகந்ததல்ல. இதில் மறைமுகமாக மிகப்பெரிய சதி இருப்பதாக சந்தேகம் வருகிறது. அதாவது, நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே தேர்தல் நடப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.
 

ias



சில மாதங்களில் ஒரு மாநிலத்தில் அரசியல் சூதாட்டம் நடந்து ஆட்சி கவிழ்ந்தால் அந்த மாநிலத்துக்கு தேர்தல் நடத்தித்தானே ஆக வேண்டும்? ஆனால், நடத்த மாட்டார்கள். மாறாக, நாடாளுமன்றத்துக்கு எப்போது தேர்தல் வருகிறதோ அப்போது அந்த மாநிலத்துக்கும் சேர்த்து தேர்தல் நடத்துவார்கள். அது வரை கவர்னர் ஆட்சியை அந்த மாநிலத்தில் அமல் படுத்துவார்கள். ஆக, பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை சூழ்ச்சி செய்து கவிழ்த்து கவர்னர் ஆட்சியை நிலைநிறுத்துவது தான் பா.ஜ.க.வின் நோக்கம். அதற்காகத்தான் இதனை பேசுபொருளாக மாற்றுகிறார்கள். அதேசமயம், தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு மோசடியான தேர்தலை நடத்தி வெற்றி பெற்றிருப்பவர் மோடி. அதை திசைத் திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை கையிலெடுத்திருக்கிறார்கள்.

  bjp



இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகத்திற்கு அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியது கண்டிக்கப்பட வேண்டிய விசயம். சண்முகம் என்பவர் தனி மனிதர் அல்ல. அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர். அவரை அவமதிப்பது தமிழகத்தையே அவமதிப்பதாகும். சட்டத்துறை என்கிற முக்கியமான துறையை வைத்திருப்பவர். தலைவர்கள் மட்டுமே கலந்துகொள்ளுமளவுக்கு அந்த ஆலோசனை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் டெல்லிக்கு அடிமைகளாக இருப்பதால்தான் தமிழகம் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டே வருகிறது'' என்கிறார் ஆவேசமாக நம்மிடம்.


 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.