Skip to main content

ஸ்கெட்ச் போட்டவருக்கே ஸ்கெட்ச்; பா.ஜ.க.வை அதிர வைத்த தி.மு.க

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

BJP Dr Saravanan turns to DMK after PTR Car issue

 

வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் லெட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்தும் இடத்தில் நடந்த தள்ளுமுள்ளு வாக்குவாதம், அதை தொடர்ந்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தேசியக்கொடி போட்ட கார் மீது செருப்பு வீச்சு விவகாரம் பதற்றப் பரபரப்பை உருவாக்கியது. மதுரையில் தி.மு.க.வினர் ரயில் இன்ஜின் மீது ஏறி போராட்டம், ஆங்காங்கே அண்ணாமலை, டாக்டர் சரவணன் படம் எரிப்பு என்று கொந்தளித்தனர். இதையடுத்து, டாக்டர் சரவணன் ஆவேச பேட்டியளித்தார். சில மணிநேரம் கழித்து, சரவணன் தனது மருத்துவமனையின் பின்பக்கம் வழியாக வெளியேறிய தகவல் கசிந்தது. அங்கே பாதுகாப்புக்காக நின்ற பா.ஜ.க.வினரில் ஒருவர் கூட இல்லை.

 

இரவு 12 மணியை தாண்ட பாஜக டாக்டர் சரவணன் அமைச்சர் தியாகராஜனை சந்தித்து மன்னிப்பு கேட்க வந்துவுள்ளார் என்ற தகவல் வர... நாம் அங்கு சென்றோம் அமைச்சரை சந்தித்துவிட்டு வெளியே வந்த சரவணன், "நடந்த சம்பவத்திற்க்கு அமைசர் பி.டி.ஆர்.தியாகராசனிடம் வருத்தம் தெரிவித்தேன் என்னால் மதவாத அரசியலில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. அது என்னால் விரும்பதக்கதாக இல்லை அதனால் பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன். தாய் கட்சியில் மீண்டும் இணைந்தால் தவறில்லை, வேறு எதுவும் கேட்காதீர்கள்'' என்று காரில் ஏறிப் போனார்.

 

ஒரு சில மணி நேரங்களில் என்ன நடந்தது?

 

மு.க.அழகிரி ஆதரவாளர் ஒருவர் நம் லைனுக்கு வந்தார். "எல்லாம் எங்க அண்ணன் போட்ட ஸ்கெட்ச்தான். ஏர்போர்ட்டில் நடந்த அந்த சம்பவத்தை அழகிரி அண்ணன் பார்த்ததும் மிகவும் கொதித்துப்போனார். சரவணன் முதலில் கொடுத்த பேட்டியும் கொந்தளிப்பாக்கியது. உடனே டாக்டர் சரவணனின் மாமனார் சேதுராமனுக்கு போனை போட்டு, "நாளைக்கு விடியறதுக்குள்ள உங்க மருமகன் மன்னிப்பு கேட்கணும் இல்லை என்றால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. விலகி இருந்தால் எதற்கும் வரமாட்டேன் என்று நினைக்காதீர்கள்"னு கோபப்பட்டார். அதற்கப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை'' என்றார் அந்த ஆதரவாளர்.

 

BJP Dr Saravanan turns to DMK after PTR Car issue

 

நாம் பி.டி.ஆர். வீட்டில் இருந்த சில தி.மு.க.வினர்களிடமும் விசாரித்ததில், "அழகிரி கோபப்பட்டதெல்லாம் தெரியவில்லை. தலைமை மிகவும் கோபமாக இருந்தது நிஜம். முதல்வரில் ஆரம்பித்து சபரீஸன், உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சு வரை லைன் பிஸியாக இருந்தது. சபரீசன் ஒவ்வொரு நிகழ்வையும் அப்டேட் செய்தபடி இருந்தார். சரவணனுக்கும் தொடர்ந்து போன்கால்கள். அப்புறம்தான் அமைச்சரை சந்தித்து மன்னிப்புக் கேட்டார். சரவணனை சந்திக்க முதலில் ஒப்புக்கொள்ளாத அமைச்சர், பின்னர் சபரீசனிடமிருந்து போன் வந்த பிறகே, சரவணனை வரச்சொல்லியிருக்கிறார்.

 

நாம் சரவணனிடம் பேசினோம். "விரைவில் தலைவரை சந்திக்க உள்ளேன். பா.ஜ.க.வில் மனமும் கொள்கையும் ஒப்பாமல்தான் பயணித்தேன். தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளேன்'' என்றவர், பா.ஜ.க.வின் மதவாத அரசியல் பற்றியும் விளக்கினார். தமிழக பா.ஜ.க.வை பொறுத்தவரை இரட்டைத் தலைமைதான். அண்ணாமலையால் எந்த முடிவும் எடுக்க முடியாது எல்லா முடிவுகளுமே தமிழக ஆர்.எஸ்.எஸ். முழு நேர ஊழியரான ‘கேசவவிநாயம்’ வைத்ததுதான் எல்லாமே. அவர் அண்ணாமலைக்கு விடும் உத்தரவுபடிதான் எல்லாம் நடக்கும்.

 

BJP Dr Saravanan turns to DMK after PTR Car issue

 

ஒவ்வொரு மாதமும் என்ன செய்யவேண்டும் என்று சார்ட்டே அங்கிருந்துதான் வருகிறது அதற்கு ஒரு சம்பவம் உதாரணம் சொல்கிறேன். சமீபத்தில் மேலூரில் ஒரு முஸ்லிம் பையனும் இந்து பெண்ணும் காதலித்து திருமணம் செய்ய இருந்த போது, அதற்கு இரு தரப்பும் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அந்தப் பெண் தூக்குப்போட்டு இறந்துபோக, அந்தப் பையனும் மருந்து குடிக்க, அவர் பிழைத்துகொண்டார். இதை கையில் எடுத்த பா.ஜ.க.வினர் அந்தப்பெண்ணின் "தாயிடம், முஸ்லிம் மதத்திற்கு மாறச் சொன்னார்கள் அதனால்தான் என் மகள் தூக்கு போட்டு இறந்தது' என்று சொல்லச் சொல்லி வாக்குமூலம் வாங்கச் சொன்னார்கள். நானும் கேட்டேன். "அப்படியெல்லாம் இல்லை... நாங்கள் தாயா பிள்ளையாக பழகுறோம்'னு அந்தப் பெண்ணின் தாய் மறுக்க... நான் பின்வாங்கினேன். இது என் மனதை மிகவும் பாதித்தது.


அன்றிலிருந்து ஆர்.எஸ்.எஸ். விநாயகம் என்னை ஓரங்கட்ட ஆரம்பித்தார்'', என்றவரிடம்... "அழகிரி உங்கள் மாமனார் சேதுராமனிடம் பேசியதாக் சொல்கிறார்களே?'' என்றோம். "அப்படி எல்லாம் இல்லை. என் மனசு கேட்கவில்லை நடந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை. என்னை மீறி எனக்குப் பின்னால் ஏதோ சதி நடந்திருக்கிறது. இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தேன். என்னால் பா.ஜ.க.வில் தொடர்ந்து பயணிக்க முடியாது'' என்றார்.

 

 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.