Skip to main content

தலைவா பட பாணியில் பிகிலுக்கு சிக்கல்!  -அதிர்ச்சியில் விஜய்

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

 

                          நடிகர் விஜய்யின் தலைவா பட பாணியில் தற்போது அவருடைய பிகில் படத்திற்கும் சிக்கல் முளைத்திருக்கிறது. இதனால், நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ உள்ளிட்ட பட குழுவினர் அனைவரும் அதிரிச்சியில் இருக்கிறார்கள். 

         ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ’ அரசியல் ‘ செய்து வரும் நடிகர் விஜய், அவ்வப்போது ஆளும் எடப்பாடி அரசை அட்டாக் பண்ணி வருகிறார். அட்லீயின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக, சமீபத்தில் நடந்த பிகில் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் ஆளும் கட்சிக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்து கைத்தட்டல் வாங்கினார் விஜய்.  இதனையடுத்து ஏகத்துக்கும் விஜய் மீது கடுப்பில் இருக்கிறது எடப்பாடி அரசு. 

 

actor vijay

       


அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர் விஜய் ஆளும் கட்சியை பகைத்துக்கொள்வது புதிதல்ல. அவர் நடித்த காவலன் படம் வெளி வரும் நேரத்தில் திமுக ஆட்சியில் இருந்தது. கலைஞரின் மகன் மு.க.அழகிரியின் மகனின் திரைப்பட நிறுவனம் விஜய்க்கு தொல்லைக் கொடுத்தது. இதனால் அந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்தது. 

 

         
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவை விஜய்யும் அவரது தந்தை சந்திரசேகரும் சந்தித்து உதவும்படி கேட்டனர். ஜெயலலிதாவும் ஆதரவு தந்தார். பட்டம் ரிலீஸானது. இதற்கு பிரதிபலனாக, தேர்தலில் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என ஜெயலலிதா வைத்த கோரிக்கையை விஜய் தரப்பு ஏற்றது. ஆனால், புத்திசாலியான சந்திரசேகர், 2011 சட்டமன்ற தேர்தலில் விஜய்யை தேர்தல் களத்தில் இறக்காமல் விஜய் ரசிகர் மன்றத்தை மட்டும் அதிமுகவுக்காக தேர்தல் பணி செய்ய பணித்தார். ரசிகர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டதோடு அதிமுகவுக்காக வாக்களிக்கவும் செய்தார்கள். 

              2011 தேர்தல் வெற்றிக்குப் பிறகு, விஜய்யின் ரசிகர் மன்றத்தால்தான் அதிமுக ஜெயித்தது என சந்திரசேகர் கொளுத்திப்போட டென்சன் ஆனார் ஜெயலலிதா. விஜய்க்கு எதிராக கம்பு சுழற்றுமாறு அதிமுகவினருக்கு கட்டளையும் போயஸ்கார்டனிலிருந்து கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் நொந்து போனார்கள் விஜய்யும் அவரது தந்தையும். 

          இந்த சூழலில்தான் தலைவா படத்துக்கு கமிட் ஆனார் விஜய். ஜெயலலிதா மீதிருந்த கோபத்தை தலைவா படத்தில் பல காட்சிகள் மூலம் சீண்டியிருந்தார் விஜய். சந்திரசேகரனின் யோசனையின் பேரில் அத்தகைய காட்சிகள் புகுத்தப்பட்டிருந்தன. தலைவா – டைம் டு லீட் என்கிற துணை தலைப்பும் விஜய்யின் ஆலோசனையின் படி இணைக்கப்பட்டது. ( தலைவா படத்தின் நோக்கம், அதன் பின்னணி குறித்து நக்கீரன் தான் முதன் முதலில் அம்பலப்படுத்தியது )   
 

             இதனையடுத்து, தலைவா படம் ரிலீஸ் தேதி குறிக்கப்பட்ட நிலையில், படம் வெளியாகும் முதல்நாள் அப்படத்தை வெளியிட முடியாத சூழலை உருவாக்கி, தலைவா-வுக்கு சிக்கலை ஏற்படுத்தியது அப்போதைய ஜெயலலிதா அரசு. இதனால் ஏகத்துக்கும் அதிர்ச்சியடைந்த விஜய்யும், அவரது தந்தை சந்திரசேகரும் போயஸ்கார்டனுக்கும் கொடநாடுக்கும் சென்று ஜெயலலிதாவை சந்திக்க  தவம் இருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களை சந்தித்தார் ஜெயலலிதா. 

               அவர்களுக்கு ஜெயலிதா கொடுத்த ஓவர் டோஸில் ஆடிப்போனார்கள் தந்தையும் மகனும். அவர்கள் ஜெயலலிதாவிடம் மன்னிப்புக் கேட்க, அதன்பிறகே, குறிப்பிட்ட  பல காட்சிகள் கட் செய்யப்பட்டு படம் ரிலீஸானது.  இப்படி ஆளும் கட்சியோடு மோதி, பல சிக்கல்களை தனது படத்துக்கு எதிர்கொண்டவர் விஜய். அந்த வரிசையில் தற்போது பிகில் !   

  
              தலைவா படத்துக்கு ஏற்பட்ட சிக்கலை அடுத்து கொஞ்ச காலம் அரசியலே வேண்டாம் என அமைதியாக தனது தொழிலை மட்டும் கவனித்து வந்தார் விஜய். இந்த நிலையில், தற்போது கலைஞரும் ஜெயலலிதாவும் இல்லாத சூழலைப் பயன்படுத்தி மீண்டும் அரசியல் செய்ய துணிந்திருக்கிறார் நடிகர் விஜய். அதன் வெளிப்பாடுதான் பிகில் பட ஆடியோ ரிலீஸ் விழாவில் அதிமுக ஆட்சியையும் அதன் தலைவர்களையும் மறைமுக விமர்சித்திருப்பது. 
 

         நடிகர் விஜய்யின் பேச்சு ஆளும் கட்சியை கடுப்பாக்க, ஜெ.பாணியில் பிகில் படத்துக்கு சிக்கலை உருவாக்க அனைத்து செயல்திட்டங்களையும் போட்டுக்கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. பிகில் படத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மூலம் பிரச்சனை ஏற்படுத்த காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் விநியோகஸ்தர்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடமும் அரசாங்கத்தை எப்படி பகைத்துக்கொள்வது என்கிற எண்ணம் வந்திருக்கிறது. இதனையடுத்து பல கட்ட ஆலோசனைகள் அவர்கள் தரப்பில் நடந்து வருகின்றன. மேலும், சென்சார் போர்டிலும் ஆளும் தரப்பு மூக்கை நுழைத்திருக்கிறது. இதனால் 8.10.2019 வரை சென்சார் செய்வதற்கான பட்டியலில் பிகில் படம் இடம்பெறவில்லை. இதனால் நொந்து போயிருக்கும் நடிகர் விஜய், திட்டமிட்டபடி பிகில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதில்தான் தனது கௌரவம் இருப்பதாக சொல்லி வருகிறாராம்.



 

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

“என்னிடம் காசில்லை” - விமர்சனங்களுக்கு விஷால் விளக்கம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
vishal about his election cycle issue

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படத்தை புரொமோஷன் செய்யும் பணியில்  ஹரி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். அவரிடம் ஒரு மாணவன், கடந்த தேர்தலில் விஜய்யை போலவே சைக்கிளில் வந்து வாக்களித்தது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “வெற்றி என்பது ஒரு நடிகருக்கு சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அந்த வெற்றியை அடைவதற்கு ஒரு நடிகர் எவ்வளவு போராட வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் விஜய்க்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. ஒரு பேட்டியில் அவரை பற்றி ரொம்ப கேவலமாக எழுதியிருந்தனர். அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவருடைய தன்னம்பிக்கை மூலம் எல்லார் முன்னாடியும் தளபதியாக இன்று நிற்கிறார். அந்த தன்னம்பிக்கை எனக்கு உந்துதலாக இருக்கிறது. அவருடைய வளர்ச்சியை பார்த்து வளர்ந்த நடிகன் நான்” என்றார். 

vishal about his election cycle issue

மேலும், “சைக்கிளில் போனது அவரை பார்த்து இல்லை. ஆனால் அவர் போனதை பார்த்திருக்கிறேன். அவர் மாதிரி போக வேண்டும் என்ற யோசனை கிடையாது. என்னிடம் வண்டி இல்லை. அப்பா, அம்மாவிற்கு ஒரு வண்டி இருக்கிறது. மீதி வண்டியெல்லாம் விற்றுவிட்டேன். இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷனில் சஸ்பென்சன்லாம் மாத்த முடியாது. என்னிடம் காசில்லை. அதனால் சைக்கிள் வாங்கினால், ட்ராஃபிக் இல்லாமல் ஈஸியாக சென்றுவிடலாம்” என்றார்.