Skip to main content

பகத்சிங் இந்துத்துவவாதியா? 

Published on 23/03/2018 | Edited on 23/03/2018

மார்ச் 23 - பகத் சிங் நினைவு நாள் 

தன்னை சந்திக்க வந்த வழக்கறிஞரிடம், "லெனின் புத்தகம் (Reminiscences of Lenin) கொண்டு வரவில்லையா" என்று ஏங்கிய குரலில் கேட்க, வழக்கறிஞர் அந்தப் புத்தகத்தை எடுத்து தருகிறார். புத்தகத்தை வாங்கியவுடன், உடனே விரித்துப் படிக்கத் தொடங்குகிறார். வழக்கறிஞர் அவரிடம், 'நாட்டுக்காக கடைசியாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?' என்று கேட்க, புத்தகத்திலிருந்து கண்ணை எடுக்காமல் "ஏகாதிபத்தியம் ஒழிக, இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக)" என்கிறார்  இருபத்திமூன்று வயது புரட்சிகர இளைஞர் பகத்சிங். இந்த நிகழ்வு அவர் தூக்கில் ஏற்றப்படுவதற்கு இரண்டு மணிநேரமுன் நடந்தது. ஆனால், முதலில் அடுத்த நாள் ஆறு மணிக்குத்தான் தூக்கில் இடப் போவதாக அறிவித்திருந்தார்கள். திடீரென பன்னிரெண்டுமணி நேரங்களுக்கு முன்னமே தூக்கிலிட்டு விட்டார்கள். 
 

bagat sukhdev raj



பகத்சிங், இந்திய இளைஞர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். விடுதலைக்கான இவரது பாதை மாறுபட்டிருந்தது. தேச தந்தை என அழைக்கப்படும் காந்தி, இந்தியாவில் அஹிம்சையை பரப்பிக்கொண்டிருந்த போது, அதிலிருந்து வேறுபட்டு வன்முறையை கையில் எடுத்துவிட்டார். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு என்ற ஏசுவின் கொள்கையை பின்பற்றிய பெரும்பாலான விடுதலை போராளிகளில், சிலர் மட்டும் கன்னத்தில் அறைந்தவர்களை  பதிலுக்கு  அறைந்தார்கள். விடுதலையை நோக்கிய பயணத்தில் பலரும் பல்வேறு விதமான கொள்கைகள், பாதைகளில் பயணித்தார்கள். அக்காலகட்டத்தில் ஒவ்வொன்றும் இந்தியாவின் விடுதலைக்குத்  தேவையாகவே இருந்தது. அனைத்தையும் தாண்டி விடுதலை போராட்ட வீரர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும் தான் மனதில் இருந்தது, "என் நாட்டிலிருந்து வெள்ளையர்கள் வெளியேற வேண்டும், விடுதலை கிடைக்க வேண்டும்" என்பது.   

 

bagat



இப்படி ஒரு தேசப்பற்றுதான் பகத்சிங்குக்கும். தனது விடுதலை போராட்டத்தின்  தொடக்கமாக, காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து, ஆங்கிலேய புத்தகங்களையும் உடைகளையும் எரித்து அவரது எதிர்ப்பை காட்டிக்கொண்டிருந்தார். இந்த ஒத்துழையாமை இயக்கம் காந்தி நினைத்தது போல முழுமையாக அமைதியாக செயல்படவில்லை, ஆங்காங்கே வன்முறைகளை கையில் எடுக்க நேர்ந்தது. சவுரி சவ்ரா நிகழ்வுக்கு பிறகு காந்தியும் அதை கைவிட்டுவிட்டார். இதன் மூலம் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று நினைத்திருந்த பகத்துக்கு அது ஏமாற்றம் அளித்தது. காந்தி நமக்கு ஒத்துவர மாட்டார் என்று எண்ணி வேறு பாதையை தேர்வு செய்தார். லாலா லஜ்பத் ராயின் இயக்கத்தில் சேர்ந்தார். ஒரு போராட்டத்தின் போது ராயை ஆங்கிலேய காவலாளிகள் லத்தியால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். ராயின் உயிரும் இந்த சம்பவத்துக்கு பின்னர் சில நாட்களில் பறிபோனது. இதற்கு பழி வாங்கும் வகையில், ஜேம்ஸ் ஸ்காட் என்ற காவல்துறை கண்காணிப்பாளரை துப்பாக்கியால் சுட திட்டம் தீட்டினார். ஆனால், அந்தத் திட்டம் குளறுபடியாகி பகத் சுட்ட குண்டு துணை கண்காணிப்பாளர் மீது பாய்ந்தது. பகத்தை ஊரெங்கும் தேடினர். காவலர்களிடம் மாட்டி  பின்னர் தப்பித்துவிட்டார். அதற்காகப் போட்ட மாறுவேடம் தான் முறுக்கிய மீசையுடன், தலையில் ஒரு தொப்பியுடன் அவர் இருக்கும் புகழ் பெற்ற படம். 
 

bagath singh hat



அடுத்த சம்பவமாக சென்ட்ரல் அசம்பிளியில் வெடிகுண்டு வீசி தாக்கி, 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்று முழக்கமிட்டார். இதற்கு அடுத்துதான் அவரை தூக்கில் இட கட்டளை இட்டனர். இவருடன் இருந்த ராஜ்குரு மற்றும் சுக்தேவுக்கும் தண்டனை வழங்கினர். சிறையிலும் 'கைதிகள் ஒழுங்காக நடத்தப்படவில்லை' என்று அகிம்சை வழியில் போராடினார். நூறு நாட்களுக்கும் மேல் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவர் இருந்த இயக்கத்தில் எல்லோரும் இந்துத்துவ கொள்கை கொண்டவர்களாக இருந்ததால், பகத்சிங்கும் அப்படியே என்று பேசப்பட்டு வந்தார், வருகிறார். இன்று ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல இயக்கங்களும் இவரை சொந்தம் கொண்டாடுகின்றன. இன்னொரு பக்கம், முதன் முதலில் சோஷலிச கொள்கைகளை, இந்தியாவில் இயக்கத்தின் மூலம் கொண்டுவந்தவர் இவர்தான் என்றும் சொல்கின்றனர். பகத்சிங், தன்னுடைய பயணத்தில் ரஷ்ய புரட்சியை பாடமாக படித்து பின்பற்றியிருக்கிறார். இது சிறையில் அவர் படித்த புத்தகங்கள், பேசியது என பல வழிகளில் வெளிப்பட்டிருக்கிறது. இவர் சுக்தேவ், சந்திரசேகர் ஆசாத் ஆகியோரோடு இணைந்து தொடங்கிய இயக்கம் 'இந்துஸ்தான் சோசியலிச குடியரசு' இயக்கம் ஆகும். அவரது குடும்பமே இந்து இயக்கமான 'ஆரிய சமாஜ'த்தில் தீவிரமாக இயங்கிய போதும் அவர் அதில் தீவிரம் காட்டவில்லை. உண்மையில் 23 வயதிலேயே தூக்கிலடப்பட்ட பகத் சிங்கின் வாழ்க்கை பல கேள்விகளை விட்டுச் சென்றுள்ளது. 

பாகிஸ்தானிலும் பகத் சிங்கின் நினைவு அனுசரிக்கப்படுகிறது, பாகிஸ்தானிய கவிஞர் மௌலானா ஜாபர் அலிகான் தான் முதலில் பகத் சிங்கை 'மாவீரர்' என்று விளித்ததாகக் கூறுகிறார்கள். லாகூரில் பகத் சிங் அறக்கட்டளை இருக்கிறது. பகத் சிங் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி பலரும் பல விதமாக இப்பொழுது கூறலாம். ஆனால், நாட்டு மக்களின் விடுதலைக்கு அவர் கொடுத்த உயிர் தியாகம்தான் அவரை இன்றும் பேசவைக்கிறது.                                       

 

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.