Skip to main content

நீங்களும் சாப்பிடலாம்... கடலிலும் கரைக்கலாம்... அத்தி விநாயகர்... (படங்கள்)

Published on 31/08/2019 | Edited on 31/08/2019



 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN


 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN

 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN




விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை முழுவதும் 2500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி தற்போது விநாயகர் சிலை வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.


 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN

 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN


 


சென்னையில் கடந்த 29 வருடமாக விநாயகர் சிலையை வைத்து வரும் குட்டி கணேசனை சந்தித்தோம். அப்போது அவர் நம்மிடம், ''29வது வருடமாக இந்த வருடம் விநாயகர் சிலையை தயார் செய்து வைக்கிறோம். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு உணவுப் பொருளைக்கொண்டு செய்வோம். முழுக்க முழுக்க இயற்கை விநாயகர். எந்தவித ரசாயனங்களும் பயன்படுத்தாமல் இந்த சிலையை செய்கிறோம். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்தவுடன் இதனை அப்படியே மக்களுக்கு கொடுத்துவிடுவோம். கடலில் கரைத்தாலும் எந்த பாதிப்பும் வராது. கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாக பயன்படும். 

 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN


 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN

 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN



சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வரும் நான், சென்னை நகரத்தில் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க தொடங்கியவர்களில் ஒருவன். 1984ல் தொடங்கி இன்று வரை விநாயகர் சிலையை வைத்து வருகிறேன். 1990 வரை மேற்கு மாம்பலத்தில் வைத்து வந்தோம். 91ல் இருந்து தி.நகர் வெங்கட்நாராயணசாலையில் வைத்து வருகிறோம். 91ல் இருந்து நான்கு வருடங்களுக்கு சென்னையிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை வைத்தோம். அதன் உயரம் 40 அடி. அதன் பிறகு பாலங்கள் கட்டப்பட்டது. பாலங்கள் கட்டிய பிறகு அந்த அளவு உயரங்கள் கொண்ட விநாயகர் சிலையை வைக்க முடியவில்லை. அப்போது பழைய மாடல். சிலையாகவே இருக்கும். இப்போதெல்லாம் செல்போனிலேயே போட்டோ எடுக்கிறார்கள். அப்போதெல்லாம் போட்டோ எடுப்பது பெரிய விசயம். ஆகையால் அந்த பழைய மாடல் பிள்ளையார்களை நான் போட்டோ எடுத்து வைக்கவில்லை. ஏதோ என்னிடம் இருக்கும் சில விநாயகர் சிலை போட்டோக்களை தருகிறேன். 

 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN


 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN



1995ல் இருந்து ஏதாவது ஒரு உணவுப்பொருளை வைத்து விநாயகர் சிலையை தயார் செய்து வைக்கிறோம். 5008 தேங்காய் பயன்படுத்தி தேங்காய் விநாயகர் சிலை செய்தோம். கல்கண்டு விநாயகர், கொழுக்கட்டை விநாயகர், பேரிச்சம்பழங்களை கொண்டு ஒரு வருடம் சிலை செய்தோம். முழுக்க முழுக்க கடலை மிட்டாய்களை பயன்படுத்தி சிலை செய்தோம். இதேபோல் ஒருவருடம் ஆரஞ்சி மிட்டாய் பயன்படுத்தி சிலை செய்தோம். 700 கிலோ வெல்லம் பயன்படுத்தி சிலை செய்தோம். லட்டு பிள்ளையார் செய்தோம். 25வது வருடத்திற்கு 800 கிலோ மைசூர் பாக்கை தயார் செய்து விநாயகர் சிலை செய்தோம். அங்கேயே மைசூர் பாக்கு சுடசுட போட்டு அந்த சிலையை செய்ய ஆறு நாட்கள் ஆனது. முறுக்கு, தட்டை, அதிர்சம் ஆகியவைகளை பயன்படுத்தி கடந்த வருடம் விநாயகர் செய்தோம். இந்த வருடம் அத்தி விநாயகர் தயார் செய்து வருகிறோம். இதற்காக அத்தி பழம், முந்திரி பருப்பு, ட்ரை அன்னாசி, கிவி, திராட்சை ஆகியவை பயன்படுத்துகிறோம்'' என்றார். 

 

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார். 

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்