Skip to main content

அத்திவரதருக்காக இரவு பகலாக பணியாற்றும் கண்ணுக்குத் தெரியாத தொழிலாளர்கள்...

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

 

அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வதால் அந்த சிறிய நகரம் திணறுகிறது. போலீசார் பெரும்பாடு படுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் திக்குமுக்காடுகிறது. 
 

நாற்பது ஆண்டுகள் கழித்து தண்ணீரில் இருந்து வெளியே வரும் அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என்று தினந்தோறும் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் குவிக்கின்றனர். அவர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் நம் கண்ணுக்குத் தெரியாத பலர் அத்திவரதர் தரிசன நாட்களில் பணியாற்றி வருகின்றனர். 
 

தினந்தோறும் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வருவதால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனை நகராட்சி தொழிலாளர்கள் அகற்றுகின்றனர். இந்தப் பணியில் அவர்கள் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்காக வைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிவறைகள், குளியல் அறைகள் போன்றவற்றையும் தொழிலாளர்கள் 24 மணி நேரமும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்னர். மேலும் கொசு மருந்து அடிக்கும் பணிகளிலும், பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். 


 

athi_varadar_darshan_kanchipuram fff


பக்தர்கள் வருவதற்கு ஒரு வழி, திரும்ப செல்வதற்கு ஒரு வழி என்பதால் இரு பாதைகளிலும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் வரும் பக்தர்கள் காலணிகளை விட்டு செல்வதால் இதுவரை 3 டன் அளவுக்கு அவை குவிந்துகிடந்தது. இவற்றை அகற்ற அவர்கள் பெரும்பாடுபட்டனர். 
 

காஞ்சிபுரத்தில் தற்போது உள்ள கூட்ட நெரிசலில் தண்ணீர் லாரி வருவது மிகவும் சிரமம். பக்தர்களுக்காக வைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிவறைகள் மற்றும் குளியல் அறைகளுக்கு இரவு 12 மணிக்கு மேல் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவருவதற்கு அந்த தொழிலாளர்கள் கடும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பாக 50க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்களுக்காக ஆர்வோ வாட்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


 

24 மணி நேரமும் மின்சாரம் தொடர்ந்து இருப்பதற்கு மின்சாரத்துறை பணியாளர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத்துறை சார்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 8 யூனிட்டாக பிரிந்து பணியாற்றி வருகிறார்கள். மேலும் வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் காஞ்சிபுரம் எல்லையில் நிறுத்தப்படுவதால் உள்ளூர், வெளியூர் வாகனங்களை ஏற்பாடு செய்து பொதுமக்கள் கோவில் அருகில் கொண்டுவந்துவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மினிபஸ்களும் விடப்பட்டுள்ளது. 
 

மேலும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் செல்வதற்கான பாதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். தன்னார்வலர்களும் பக்தர்களின் உதவிக்காக சேவைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவை அனைத்தும் மாவட்ட நிர்வாகம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் பொன்னையா அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறார்.


 

athi_varadar_darshan_kanchipuram



திருப்பதியில் தினந்தோறும் கூட்டம் வரும். அதற்கு தனி பாதுகாப்பு அதிகாரிகள் என நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றனர். நம்ம ஊரில் ஒரு நாள் திருவிழா, இரண்டு நாள் திருவிழா என நடக்கும். அதற்கே போலீசார் திணறுவார்கள். ஆனால் இங்கு தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஒரு சிறிய நகரத்தில் குவிவதால் கலெக்டர் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செல்வது மிகப்பெரிய கஷ்டம். ஆகையால் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். 40 ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்று வருவதால், எந்த கலெக்டருக்கும் இதுபோன்ற கூட்டத்தை சமாளிக்கும் அனுபவம் இருந்திருக்காது என்கின்றனர் காஞ்சிரத்திற்கு வரும் பக்தர்கள். மேலும் பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். 


 

எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்கள் பரிந்துரை கடிதங்கள் கலெக்டர் ஆபிசில் குவிகிறது. டோனர் பாஸ், விவிஐபி பாஸ்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதில் கமிசன் அடிக்கப்படுவதாகவும் புகார் கிடைக்க கலெக்டர் பொன்னையா இதுபற்றி ஆய்வு செய்தார். இருப்பினும் தொடர்ந்து புகார்கள் எழுந்தது. 
 

திருவள்ளூர் மாவட்ட ஏஎஸ்பி சந்திரசேகரன் தனக்கு வேண்டப்பட்டவர்களை சைரன் காரில் அழைத்து வந்து, சாமி தரிசனம் செய்ய வைப்பதும், தனி வசூல் நடப்பதும் கலெக்டருக்கு தெரிய வந்ததும், கோவில் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடாது என ஏஎஸ்பி வெளியேற்றப்பட்டார்.  மேலும் சில விஜபிக்கள் வரும்போது சரியாக ஏற்பாடு செய்யவில்லை என்று மாவட்ட நிர்வாகம் மீது சிலர் குறை சொல்லி வந்தனர். எல்லா கேள்விகளும் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை நோக்கி பாய்ந்ததால், அவர் ஆய்வில் ஈடுபட்டார்.


 

athi_varadar_darshan_kanchipuram ccc


அப்போது காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் என்பவர் தன்னுடன் சிலரை நேரடியாக அழைத்துச் சென்றதால், அவரிடம் கோபத்தை காட்டியுள்ளார் கலெக்டர் பொன்னையா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. 
 

இதனால் கோபம் அடைந்த காவல்துறையினர், இரவு பகல் பாராமல் இயற்கை உபாதைகள் கழிக்க வழியில்லாமல் ஆண் - பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கலெக்டர் இப்படி பேசலாமா என்று கண்டித்தனர். 
 

அதே நேரத்தில் டோனர் பாஸை போலீஸ் கிழித்ததால் ஒரு ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கோயில் உள்ளே உள்ள மருத்துவக்குழுவினரின் பாஸ் கிழித்ததை கண்டித்து சுகாதார துறையினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நடுரோட்டில் ஆட்டோவை விறகு கட்டையால் தாக்கியதில் ஆட்டோவே சேதமானது, ரோட்டில் கடை வைத்திருந்த நரிக்குறவரை போலீஸ் தாக்கிய வீடியோவும் வைரலானது. 
 

40 நாட்களுக்கும் மேலாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஒரு சிறிய நகரத்தில் குவிவதால் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். ஊர்கூடி இழுத்தால்தான் தேர் அதன் இடத்திற்கு சென்று அடையும் என்பார்கள். அதைப்போல மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.