Skip to main content

சாக்குப் பையில் பள்ளிப்படிப்பு... இந்திய அரசியலமைப்புக்கு அவரே பிடிப்பு - அவர்தான் அம்பேத்கர்!

Published on 14/04/2020 | Edited on 14/04/2020


இந்திய அரசியல் சாசனத்தின் தளகர்த்தர் பாரத ரத்னா அம்பேத்கருக்கு இன்றைக்குப் பிறந்த தினம். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த அவருக்கு வாலிபக் காலம் அவ்வளவு சிறப்பானதாக இருக்கவில்லை. பள்ளிக்குச் சாக்குப் பையை எடுத்துக்கொண்டு அதில் அமர்ந்து பாடம் கற்க அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். சாதி ஏற்றத்தாழ்வுகள் அவரை அனலாய் எறித்தது. ஆனால் பனிமலையாய் அவற்றை எதிர்த்து போரிட்டார். பல போராட்டங்களுக்குப் பிறகு, பல பட்டங்களையும், ஆய்வு கட்டுரைகளையும் சமர்பித்து டாக்டர் பட்டம் பெற்ற அவர், பரோட மன்னரின் ஆட்சியில் ராணுவச் செயலாளராகப் பணியில் சேர்ந்தார்.  பணியில் இருந்த அவருக்கு ஒரு நாள் தாகம் ஏற்படவே அங்கிருந்தவர்களைத் தண்ணீர் கேட்டுள்ளார். யாரும் தண்ணீர் தர முன்வரவில்லை. மீண்டும் கேட்டார் யாரும் அசையக்கூட வில்லை. என்ன காரணம் என்று அவருக்கு உடனடியாகப் புரியவில்லை.
 

ுப



15 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில், தான் சாக்குப் பையில் அமர்ந்த நினைவலைகள் அவருக்கு வந்து சென்றது. நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் நமக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று உணர்ந்தார். அங்கீகாரம் கிடைக்காது, நாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த நொடி முடிவெடுத்தார். பதவியை ராஜினாமா செய்தார். படிப்புக்காக முதன்முதலில் அமெரிக்கா சென்ற அவருக்கே இந்திய அரசியலமைப்பை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் அந்த வாய்ப்பு அவருக்கு எளிதாகக் கிடைத்து விடவில்லை. போராட்டம், போராட்டம் தொடர்ந்து பேராட்டம். இந்த வார்த்தைகள் யாருக்கு பொருத்துகிறதோ இல்லையோ அம்பேத்கருக்கு நூறு சதவீதம் பொருந்தும். தீண்டாமை இருளை விரட்ட தொடர்ந்து பேசினார், எழுதினார். அதிகார வர்க்கத்தோடு மோதினார், உயர் பதவிகளை தூக்கி எறிந்தார். அம்பேத்கருக்கு வாழும் வரை கருணையின்றி தொல்லை கொடுத்த இந்தச் சமூக கட்டமைப்பு இறப்புக்கு பிறகும் உடனடியாக அவருக்கான மரியாதையைச் செய்யவில்லை. இறந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகே அவருக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது. சிலருக்கு விருதுகள் பெருமை சேர்க்கும். சிலர் விருதுகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். அம்பேத்கருக்கு இரண்டாவதாகச் சொல்லப்பட்டது நூறு சதவீதம் பொருந்தும்!


 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.