Skip to main content

ரவுடிகளையும் கொலைகாரர்களையும் பா.ஜ.க.வில் சேர்த்துட்டாங்க! -போட்டுத் தாக்கும் ராமசுப்பிரமணியம்

Published on 03/07/2021 | Edited on 03/07/2021
ddd


ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தீவிர பற்றாளரும், பா.ஜ.க. ஆதர வாளருமான ஊடகப் பிரபலம் இராம சுப்பிரமணியம், பா.ஜ.க.வை ஆதரித்துப் பேசுவதோடு... தவறான செயல்பாடு களை விமர்சிக்கவும் தயங்கியதில்லை. அதேபோல எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், சரியான செயல்களைப் பாராட்டவும் செய்வார். அவரிடம், தமிழக பா.ஜ.க.வின் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள், புதிதாக அமைந்துள்ள தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை முன்வைத்தோம்.

 

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான நீங்கள், தற்போதுள்ள தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகளையும், இவர்கள்மீது பாலியல் புகார் உட்பட பல்வேறு புகார்கள் எழுப்பப்படுவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

 


நான் பா.ஜ.க.வில் தற்போது இல்லா விட்டாலும்கூட அந்த கட்சி நன்றாக வரவேண்டுமென்று விரும்பக்கூடிய ஆள். பல ஆண்டுகளாக அந்த கட்சியில் பயணித்தவன் நான். எனவே அந்த கட்சி இங்கே வளர்ந்ததென்றால் நான் ரொம்பவே சந்தோசப்படுவேன். தற்போது பா.ஜ.க.வில் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக, அவர்களின் பின்புலம் என்னவென்றே தெரியாமல் அனைவரையும் கட்சியில் சேர்ப்பது கட்சிக்கு நல்ல தல்ல. இதுகுறித்து நான் ரொம்ப நாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதிலும் குறிப்பாக, ரவுடிகளையும், காலிப்பயல்களையும், கொலைகாரர் களையும் அந்த கட்சியில் சேர்த்துட்டாங்க. இது மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கும்னு முன்னயே எனக்குத் தெரியும். இதனை பல்வேறு ஊடகங்களில் விவாதங்களின்போது நான் பதிவு செய்திருக்கிறேன்.

 

தற்போது தமிழக பா.ஜ.க. மீதான பாலியல் குற்றச்சாட்டெல்லாம் உண்மையா, பொய்யா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் இதெல்லாம் கேட்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. முன்பெல்லாம் பா.ஜ.க.வில் சேருபவர்களின் பின்புலத்தை விசாரித்தபின்னர் தான் சேர்ப்பாங்க. இப்போதெல்லாம் கமலாலயத்தினுள் சேர்ப்பதற்கு இதெல்லாம் விசாரிப்பதேயில்லை. இத்தகைய நடவடிக்கைகள்தான் குற்றச்சாட்டுகள் எழுவதற்கு காரணமாகிறது. இப்படியான நிலை துரதிர்ஷ்டமானது. இதைச் சரிசெய்யாமல் விட்டால் கட்சிக்கு கெட்ட பெயர்தான் வரும்.

 

நடந்துமுடிந்த தேர்தலில் தமிழக பா.ஜ.க.வில் 4 பேர் வெற்றி பெற்றதற்கு கட்சித்தலைவர் முருகனின் செயல்பாடும், அவர் நடத்திய வேல் யாத்திரையும் காரணமாக இருக்குமா?

 

தற்போது 4 பேர் வெற்றி பெற்றிருப்பதற்கு அ.தி.மு.க.வின் ஆதரவு மட்டுமே காரணம். தமிழக பா.ஜ.க.வின் பிரமாதமான வளர்ச்சியால்தான் இந்த வெற்றி என்று அவர்கள் நம்பி னார்கள் என்றால், அது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். முருகன் நடத்திய வேல் யாத்திரை, பா.ஜ.க.வுக்கு பெயிலியர் யாத்திரை என்று தொடர்ந்து நான் சொல்லிக்கொண்டே வருகிறேன். இது மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. இதையேதான் உறுதிப் படுத்துவதுபோல, பா.ஜ.க.வின் தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவியும் ஒரு பேட்டியில் "இந்த வேல் யாத்திரை எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை' என்றே கூறியிருந்தார். அந்த கட்சி, மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றை கையிலெடுத்து, அதைச் சரிசெய்யப் போராடினால் தான் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதை விட்டுவிட்டு, குறுக்கு வழியில் நாம பெரியாளாகி விட்டோம் என்று, ஒரு கும்பலைச் சேர்ந்துக்கொண்டு, அந்த கும்பலால் ஜெயித்து விடுவோம் என்று நினைத்தால், ஒரு தோல்விக்குப் பிறகு அனைவருமே காக்கா கூட்டம்போல ஓடி விடுவார்கள். வாஜ்பாய் தலை மையில் 1998-ம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது பலரும் பா.ஜ.க.வில் போட்டிபோட்டுக்கொண்டு இணைந்தார்கள். 2004-ம் ஆண்டு ஆட்சி பறிபோனதும் அனைவரும் அப்படியே விலகிவிட்டார்கள். அதுபோல தேர்தலுக்கு முன்பாக, கட்சிக்கொள்கை என்னவென்றே தெரியாத சினிமாக்காரர்கள் பலரையும் சேர்த்தார்கள். அவர்களெல்லாம் இப்போது என்ன ஆனார்களென்றே யாருக்கும் தெரியவில்லை.

 

ஹெச்.ராஜா மீது, தேர்தலுக்காகக் கொடுத்த கட்சிப்பணத்தில் 4 கோடி ரூபாயை தனது வீடு கட்டுவதற்காகப் பயன்படுத்திக்கொண்டதாக குற்றச்சாட்டு பா.ஜ.க.வினராலேயே வைக்கப்பட்டு, அவரது தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளார்களே?

 

இது குறித்தெல்லாம் எனக்கு சரியாகத் தெரியாது சார். ஆனால் தேர்தலுக்காக கட்சி மேலிடத்திலிருந்து பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 13 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.வீ.சேகர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஹெச்.ராஜா மீது சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டைக் கேட்கும்போது வருத்தமாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை அவர்மீதான குற்றச்சாட்டை நம்ப முடியாது. அவரும், அவரது அப்பாவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலேயே பயணித்தவர்கள். பி.ஜே.பி. மீதும் பற்றுக்கொண்டவர். அவருக்கு சொத்து சுகத்துக்கு குறைவேயில்லை. எனவே அவர்கள் இந்த அளவுக்கு கீழ்த்தரமாகவெல்லாம் செய்யமாட்டார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

ddd

தமிழ்நாடு அரசு தற்போது அமைத்துள்ள உயர்மட்ட பொருளாதார ஆலோசனைக்குழு குறித்து உங்களுடைய கருத்து?

 

இப்படியொரு குழு அமைத்திருப்பது, இந்தியா வுக்கே முன்னோடியான செயல். இந்தியாவையே தமிழ்நாட்டை நோக்கித் திரும்பிப்பார்க்கும் விதமாகத் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கிறார்கள். இந்தக் குழுவின் தலைவரான ரகுராம் ராஜன், நிதியை எப்படிக் கையாளுவது என்பதில் நன்கு அனுபவப்பட்டவர். பொருளாதார ஆலோசகராகவெல்லாம் இருந்திருக் கிறார். வருவாயை எப்படி அதிகப்படுத்துவது, ஒன்றிய அரசிடமிருந்து நமக்கான வருவாயை எந்தெந்த வழிகளிலெல்லாம் அதிகரிக்கலாம் என்பது குறித்தெல்லாம் இவரால் சொல்ல முடியும். அடுத்த உறுப்பினரான அரவிந்த் சுப்பிரமணியமும் இதை யெல்லாம் செய்ய முடியும். அடுத்ததாக, நாராயணன், நிதித்துறையில் இருந்தவர். அவருக்கும் மத்திய மாநில அரசுகள் தொடர்பான அனைத்து நெளிவுசுழிவுகளும் தெரியும். எனவே அவரது நியமனமும் மிகச்சரியானது.

 

அடுத்ததாக எஸ்தர் டப்லோ என்ற பெண்மணி, ஏழ்மை ஒழிப்பு என்பதில் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து பங்காற்றிவருபவர். பொருளா தாரத்தில் நோபல் பரிசு வென்றவர். அவரும் அவரது கணவர் அபிஜித் பானர்ஜியும் இணைந்து தான், கொரோனா லாக்டௌனால் பாதிக்கப்பட்டவர்களின் கைக்கே பணத்தைச் சென்றடையச் செய்ய வேண்டுமென ஒன்றிய அரசுக்கு ஆலோசனை கூறினார்கள். அது நல்ல யோசனை. வறுமையில் சிக்கியவர்களுக்கு எதையெதையோ கொடுப்பதற்குப் பதில் நேரடி யாகப் பணமாக அளிப்பது பய னுள்ளதாக இருக் கும். இதுபோன்று, அடிமட்ட மக்களுக்காக இறங்கிவந்து குரல் கொடுத்தவர் அவர். ஐந்தாவதாக இடம்பெற்றுள்ள ஜீன் த்ரே, கொரோனாவால் நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின்மூலம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியவர். காங்கிரஸ் அரசாங்கம் கொண்டுவந்த மிக நல்ல திட்டம் அது. நம்நாட்டில் மிகப்பெரிய வன்முறை, பிரச்சனைகள் இல்லாமல் இருக்கின்றதென்றால் அதற்கான காரணம், அனைவருக்கும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் கிடைப்பதாகும். எனவே, இந்த ஐவர் குழு மிகவும் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. இவர்களுக்கு அடுத்ததாக, பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் தலைமையிலும் ஒரு குழு அமைத்திருக்கிறார்கள். அந்த குழுவோடு இவர்கள் எந்த வகையில் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்பது போகப்போகத் தெரியும்.

-தெ.சு.கவுதமன்

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.