Skip to main content

கொங்கு மண்டலம் என்ற அதிமுகவின் கோட்டை -என்ன செய்யப்போகிறது திமுக..?

Published on 28/11/2020 | Edited on 14/01/2021
jh

 

 

கடந்த 2016ம் ஆண்டின் தேர்தல் முடிவு வெளியாகி கொண்டிருந்த நேரம், அதிமுக - திமுக என்ற இரண்டு கட்சிகளுக்கு ஆரம்பத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரும் ஏறக்குறைய சரிபாதியான இடங்களில் முன்னணியில் இருந்து வந்தார்கள். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு இன்றைய பீகார் தேர்தல் முன்னிலை நிலவரம் போல் அன்றைக்கு அதிமுக திமுக தொண்டர்கள் அதிர்ச்சியோடு தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இடையில் பிரதமர் மோடியின் வாழ்த்து வேண்டுமானால் அதிமுக தொண்டர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தந்திருக்கலாம். ஆனால் களம் சரிசமமாக இருந்த நிலையில் கொங்கு மண்டல வாக்கு பெட்டிகள் முழுவதும் எண்ணப்பட ஆரம்பித்ததும், திமுக சிறிது அல்ல முழுவதும் சறுக்கியது. சென்னையில் ஆரம்பித்து விழுப்புரம் வரை வடக்கு மண்டல தொகுதிகளை வாரி குவித்த திமுக, மேற்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் 55 தொகுதிகளில் மண்ணை கவ்வியது. ஏன் இந்த நிலை. கொங்கு பகுதி மக்களிடம் திமுக அந்நியப்பட்டுள்ளதா? அல்லது அதிமுக கள வேலைகளில் கில்லியாக இருக்கிறதா? என்பதை ஒரு சிறிய அலசல் பார்வையோடு பார்க்க வேண்டியுள்ளது. 

 

fd

 

சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்பு, 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை பெரிய எதிர்பார்ப்போடு தொடங்கி நடந்துவந்ததது. அதற்கு முன்புவரை தேர்தலில் வெற்றி அடையும் கூட்டணி அதிக தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி பீடத்தில் அமரும். ஆனால் அப்போதைய தேர்தல் முடிவு என்பது திமுகவுக்கு அப்படியான ஒரு களத்தை கொடுக்கவில்லை. கிட்டதட்ட 150 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 96. ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளின் எண்ணிக்கைக்கு 22 தொகுதிகள் குறைவு. இருந்தாலும் கலைஞர் 5 ஆண்டுகள் ஆட்சியை பெரிய சிரமமின்றி நிறைவு செய்தார். தமிழக வரலாற்றில் ஆட்சி அமைக்கும் ஒரு கட்சிக்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காமல் போனது அப்போதுதான் முதல்முறை. இதற்கு காரணமும், 2016ம் ஆண்டு தேர்தலில் திமுக நூலிழையில் தோற்றதற்கு ஒரே காரணம் மேற்கு மண்டல தொகுதிகளில் அதிமுக வென்றது மட்டும்தான். 2006ம் ஆண்டு அனைத்து மண்டலத்திலும் தோல்வியை சந்தித்த அதிமுக மேற்கு மண்டலத்தில் கிட்டதட்ட 16 தொகுதிகளில் வென்று அதற்கு முன்பு எதிர்க்கட்சி ஒன்று அதுவரை பெறாத வகையில்  தமிழகம் முழுவதும் 61 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதற்கு மிக முக்கிய காரணம் கொங்கு மண்டலம். 

 

2006ம் ஆண்டு நடந்த தவற்றை அடுத்த 5 ஆண்டுகளில் திமுக சரிசெய்ததா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் 2011ம் ஆண்டு திமுக மேற்கு மண்டலத்தில் வாஷ் அவுட் என்று சொல்லும் அளவுக்கு சொதப்பியது. மற்ற மண்டலங்களில் உள்ளதை போல் திமுகவில் ஆளுமைகளும் இந்த மண்டலங்களில் இல்லை என்றும் நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வருகிறது. அதுவும் உண்மைதான். அங்கு ஒரு நேருவோ, பொன்முடியோ, ராசாவோ இல்லை என்பது ஏற்றுக்கொள்ள கூடியாதுதான். ஆனால் தேர்தல் களத்தில் மேற்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் 55ல் கட்சி துடைத்தெறியப்படுகிறது என்றால், திமுக தன்னை அங்கு சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது. மற்ற மண்டலங்களில் என்ன வலுவாக இருந்தாலும் மேற்கு மண்டலத்தில் கவனத்தை திரும்பாவிட்டால் 2021ம் களம் திமுகவுக்கு சிக்கலாகவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் எடப்பாடி மேற்கு மண்டலத்தை மட்டுமே களம் இறங்குகிறார். எனவே திமுக சுதாரித்துக்கொள்ளுமா அல்லது சுணகக்கமாகவே இருக்குமா என்பதை பொறுத்தே மேற்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றி இருக்கும் என்பதே கள எதார்த்தம்.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.