Skip to main content

''எந்த இடைஞ்சலும் செய்யமாட்டேன்...'' - இணைந்த இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.! டெல்லி எச்சரிக்கையின் பரபரப்பு பின்னணி!

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

EPS-OPS

 

நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா என உச்சக்கட்டமாக போய்க்கொண்டிருந்த எடப்பாடி, ஓ.பி.எஸ். மோதலில் திடீரென ஒரு சமாதானம் ஏற்பட்டிருக்கிறது. இது முடிவல்ல. இந்த நாடகத்தின் இடைவேளை. இந்த இடைவேளையை விடவைத்தது மத்தியில் ஆளும் பா.ஜ.க. என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

 

பா.ஜ.க. இந்த சண்டையில் நாங்கள் யார் பக்கமும் இல்லை. உங்கள் வீட்டை நீங்கள் ஒழுங்குபடுத்தி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் பிரச்சனைகள் நடக்கக்கூடாது என நரேந்திரமோடி சொன்னதைக் கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம். நமது இதழ் வெளியான பிறகு எடப்பாடி கவர்னரை சந்தித்தார். கவர்னரும் நரேந்திரமோடி சொன்னதை அப்படியே எதிரொலித்தார்.

 

"உங்கள் கட்சியில் உள்ள உள்விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடுகிறது என புகார் எழுகிறது. சசிகலா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என நாளொரு வண்ணமும், பொழுதொரு வண்ணமுமாக கோஷ்டிகள் உருவாகி உள்ளது. அத்துடன் நீங்கள் வெளிப்படையாகவே அடித்துக்கொள்கிறீர்கள். செயற்குழுவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த கட்சி நிர்வாகிகள் மத்தியில் நீங்கள் மோதிக்கொண்டது பெரிய காட்சிப்பொருளாகிவிட்டது. உங்கள் மோதல் விரைவில் முடிவுக்கு வரவேண் டும். ஒருவேளை உங்கள் மோதலால் அ.தி.மு.க. உடையுமானால் நீங்கள் பெரும் பான்மையை இழந்துவிடுவீர்கள். நீங்கள் பெரும்பான்மையை இழந்தால் அது ஜனாதிபதி ஆட்சிக்குத்தான் வழிவகுக் கும். அதைக்கொண்டுவர மத்திய அரசு தயங்காது oஎன எனக்கு டெல்லியில் இருந்து சொல்லியனுப்பியிருக்கிறார்கள். ஆட்சியை காப்பாற்றுவதும், ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுப்பதும் உங்கள் கையில்தான் இருக் கிறது'' என கடுமையாக கவர்னர் பேச... எடப்பாடி அதிர்ந்து போனார். அதுவரை ஓ.பி.எஸ். என்ன பெரிய ஆளா என பேசிக்கொண்டிருந்த எடப்பாடி, கடகடவென இறங்கி வந்தார். பெரியகுளத்தில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த ஓ.பி.எஸ்.ஸிடம் எடப்பாடி தூதுவர்கள் பேசினார்கள்.

 

DDDD

 

ஒரு திருமண மண்டபத்தில் காரை நிறுத்திவிட்டு, அதில் இருந்த மணமகனின் அறைக்குள் சென்று பேசிய ஓ.பி.எஸ்.ஸிடம் இ.பி.எஸ்., வழிகாட்டுதல் குழு அமைக்க இறங்கி வந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதுவரை கொங்கு வேளாளர்தான் முதலமைச்சர் வேட்பாளராக வேண்டுமா? மற்ற சமுதாயத்தினர் அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராகக் கூடாதா? எனக் கேட்டுக்கொண்டிருந்த ஓ.பி.எஸ்.ஸும் இ.பி.எஸ். சொன்ன தகவலை கேட்டுவிட்டு நான் யோசித்து முடிவு சொல்கிறேன் என சொல்லிவிட்டு சென்னை வந்தார். சென்னைக்கு வந்ததும் இ.பி.எஸ். சார்பில் தூதுவர்கள் சந்தித்து ஓ.பி.எஸ்.சிடம் பேசினார்கள். எப்பொழுதும் மிகவும் ஜாக்கிரதை உணர்வுடன் நாலுபுறமும் பார்த்து தனது அடியை எடுத்து வைக்கும் ஓ.பி.எஸ்., இதுகுறித்து தனது மகன் ரவீந்திரநாத் மூலம் டெல்லியை தொடர்பு கொண்டார். டெல்லி பா.ஜ.க.வில் இருந்து, இப்போதைக்கு சமரசமாகப் போங்கள் என உத்தரவு வந்தது. அந்த உத்தரவை வாங்கிக்கொண்டு இ.பி.எஸ். வழிகாட்டுதல் குழு பிரச்சனையை மறுபடியும் முன்னெடுத்தார். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை இரவு முழுவதும் நீண்டு கொண்டே போனது. அப்பொழுது டென்ஷன் ஆன எடப்பாடி நேரடியாக இ.பி.எஸ். லைனுக்கே வந்தார்.

 

"நான் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 50 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டிருக்கிறேன். உங்களால் 50 கோடி ரூபாய் செலவு செய்ய முடியுமா? நீங்கள் செலவு செய்ய தயார் என்றால் ஓ.பி.எஸ். முதல்வர் வேட்பாளர் என அறிவித்துக்கொள்ளுங்கள்'' என்று இ.பி.எஸ். நேரடியாக கேட்டார். அதற்கு பதில் சொன்ன ஓ.பி.எஸ்., "நீங்கள் 50 கோடி ரூபாய் செலவு செய்வீர்கள். சசிகலா நினைத்தால் 100 கோடி ரூபாய் செலவு செய்வார். நான் உங்களுக்கு அடிமையாக கைக்கட்டி நிற்பதை விட சசிகலாவுக்கு அம்மாவுடன் இருந்த ஆள் என கைக்கட்டி நின்றுவிடுவேன். துணை முதலமைச்சரான எனக்கு நீங்கள் முக்கியமானத் துறைகளை கொடுக்கவில்லை. மத்திய அமைச்சரவையில் எனது மகன் இடம்பெறுவதற்கு வைத்திலிங்கத்தை காரணம் காட்டி இடைஞ்சல் செய்தீர்கள்'' என ஓ.பி.எஸ். எகிற, "உங்கள் மகன் மத்திய அமைச்சர் பதவி பெறுவதற்கு இனி நான் எந்த இடைஞ்சலும் செய்யமாட்டேன். அடுத்த ஆட்சி அமையுமானால் உங்களுக்கு துணை முதல்வர் பதவியோடு முக்கியமானத் துறைகளையும் தருவேன்'' என இ.பி.எஸ். இறங்கிப் பேசினார்.

 

அத்துடன் வழிகாட்டுதல் குழுவில் ஓ.பி.எஸ். யாரையெல்லாம் எழுதிக்கொடுத்தாரோ அவர்களையெல்லாம் சரியென எடப்பாடி ஒத்துக்கொண்டார். அத்துடன் வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ். அணிக்கு என எத்தனை எம்.எல்.ஏ.க்கள் சீட்டுக்களை அவர் கேட்கிறாரோ அதை தருவதாக இ.பி.எஸ் ஒத்துக்கொண்டார். இந்த டீல் முடியும் போது அதிகாலை 4 மணி ஆகிவிட்டது. அதன் பிறகு இருவரும் காலையில் டெல்லிக்கு போன் செய்து... "எங்களுக்குள் சண்டை முடிந்துவிட்டது'' என்று அறிவித்தார்கள்.

 

வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இ.பி.எஸ் முதல்வர் வேட்பாளர் என வழி காட்டுதல் குழு சார்பில் ஓ.பி.எஸ். அறிவித்தார். ஆனால் வழி காட்டுதல் குழு, முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு போன்றவை சசிகலாவின் வருகைக்கு முன்பு இ.பி.எஸ். தனது பலத்தைக் காட்ட எடுத்த நடவடிக்கை என அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள் வெளியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அதேநேரத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான போயஸ் கார்டனில் புதிதாகக் கட்டப்பட்ட வீடு, கொடநாடு பங்களா, சிறுதாவூர் பங்களா போன்றவற்றை வருமான வரித்துறை பினாமி சொத்து என கைப்பற்றியதாக சேனல்களில் செய்தி வெளியானது.

 

sasikala

 

2019ம் ஆண்டே இந்த சொத்துகள் வருமான வரித்துறை சார்பாக பினாமி சொத்துகள் என பலவும் கைப்பற்றப்பட்டன. அத்துடன் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட 300 கோடி ரூபாய் சொத்துகளை சேர்த்து சசிகலாவின் 2 ஆயிரம் கோடி சொத்துகள் முடக்கம் என செய்திகள் வெளியானது. ஒரு பக்கம் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி, மறுபக்கம் சசிகலா சொத்துகள் முடக்கம் என செய்திகள் வெளிவந்ததில் சசிகலா கடும் கோபமடைந்தார்.

 

சொத்து முடக்கம் என செய்திகளை வெளியிட்டது எடப்பாடிக்கு நெருக்கமான சேலத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள். இதற்கும் பிஜேபிக்கும் எந்த தொடர்பும் இல்லை. பா.ஜ.க., சசிகலாவிடம் நன்றாக பேசிக்கொண்டிருக்கிறது. சசிகலாவை தண்டனைக்காலம் முடிவடைவதற்கு முன்பே விடுதலை செய்ய எல்லா வேலைகளையும் பார்ப்பதற்காக பா.ஜ.க. உறுதி அளித்திருக்கிறது.

 

Ad


இந்த நேரத்தில் தேவையில்லாமல் ஏற்கனவே முடக்கப்பட்ட சொத்துகளை முடக்குவதாக எடப்பாடி அறிவிக்க வைக்கிறார். எடப்பாடி அறிவிக்கவைத்த நேரத்தில், வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர் காமராஜின் மகனுக்கு குழந்தை பிறந்தது. அதற்கு திவா கரன் நேரில் போய் ஐந்து பவுனில் செயின் போட்டுவிட்டு வந்தார். திண்டுக்கல் சீனிவாசன், சசிகலா வந்தால் நேரடி யாக சின்னம்மா என வந்துவிடுவார். தங்க மணி, வேலுமணி ஆகிய இரண்டு மணிகளையும் வழிகாட்டுதல் குழுவில் எடப்பாடி சேர்த்திருப்பதற்கு காரணம், பா.ஜ.க. ஆதரவில் அவர்கள் யாரேனும் முதல்வர் வேட்பாளராக ஆகிவிடுவார்கள் என்ற பயம்தான். அதனால், வழிகாட்டுதல் குழுவில் எடப்பாடி நியமித்திருக்கிறார். இந்த நியமனத்தால் கொங்கு வேளாளர் சமூகத்தில் ஒரு பகுதி அதிருப்தியில் உள்ளது. செங்கோட்டையன், தம்பிதுரை தலைமை யில் கொங்கு மண்டல அ.தி.மு.க தரப்பில் ஓர் அணி சேர்க்கை மெல்ல நடக்கிறது. ஓ.பி.எஸ். தரப்பில் நியமிக்கப்பட்டிருப்பவர்கள், எடப்பாடியைவிட சசிகலாவே பெட்டர் என நினைப்பவர்கள். இப்படி ஒட்டுமொத்த வழிகாட்டுதல் குழு மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். ஆகி யோரை வழிக்குகொண்டு வந்து சசிகலா கட்சியை கைப்பற்றுவார் பாருங்கள் என சவால் விடு கிறார்கள் மன்னார்குடியைச் சார்ந்தவர்கள்.

 

ஆனால் சசிகலா ஒன்றுமே இல்லை. அவரால் எதையும் செய்ய முடியாது. இன்று முதல்வர் வேட்பாளராகியுள்ள எடப்பாடி காலப்போக்கில் அ.தி.மு.க.வின் நிரந்தர முதல்வர் வேட்பாளராகி விடுவார். அந்த அளவுக்கு கட்சியை கொண்டுவந்து விடுவார் என்கிறார்கள் எடப்பாடியின் ஆதர வாளர்கள். இந்த காட்சிகளுக்கான க்ளைமாக்ஸ் என்பது சசிகலா வருகையின்போது நடக்கும் என எடப்பாடிக்கு சவால் விடுகிறது மன்னார்குடி வட்டாரம்.

 

 

Next Story

“அது தான் அதிமுகவுக்கு விழுந்த முதல் அடி” - திமுக வேட்பாளர் பிரகாஷ்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
DMK candidate Prakash interviewed and says That was the first blow to AIADMK

நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கட்சி சார்பாக தி.மு.க. வேட்பாளராக பிரகாஷ் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரை பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு  பிரகாஷ் அளித்த பேட்டி பின்வருமாறு...

அ.தி.மு.க வேட்பாளர்கள் எல்லாம் சாதாரண பின்னணி கொண்டவர்கள். ஆனால், தி.மு.க நிறுத்தும் வேட்பாளர்கள் எல்லாம் பொருளாதார பின்னணி கொண்டவர்களையும், வலுவான ஆட்களை தான் நிறுத்துகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே?

“நான் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். சாதாரண வேட்பாளராக தான் நிற்கிறேன். அதனால், இந்த ஈரோடு நாடாளுமன்ற தேர்தல் பணமா? குணமா?. அவர்கள் பணத்தை நம்பி நிற்கிறார்கள்”.

ஏழைக் குடும்பங்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் கொடுத்திருக்கிறது என்று நீங்கள் பிரச்சாரம் செய்து வருகிறீர்கள். ஆயிரம் ரூபாய் கொடுக்கும் இந்த திட்டத்தில் நிதிச்சுமை இருக்கிறது என்று நீங்கள் சொல்கின்ற இந்த நிலையில் ஒரு லட்ச ரூபாய்க்கான நிதி ஆதாரங்கள் எல்லாம் எங்கிருந்து வரும் என்ற கேள்வி வருகிறதே?

“சாதாரண, அதானி அம்பானிக்கு எப்படி இத்தனை லட்சம் கோடி இன்றைக்கு வந்தது. ரெண்டு பேருக்கு மட்டும் குவியும் பணத்தை மக்களுக்கு பிரித்து கொடுக்க போகிறோம் அவ்வளவுதான்”.

அகில இந்திய அளவில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில், தி.மு.க.விற்கு அமைச்சரவையில் எந்த மாதிரியான மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

“எங்களுக்கு பதவி என்பது ஒரு பொறுப்பு தான். வாஜ்பாய் ஆட்சியிலும் அண்ணன் டி.ஆர். பாலு இருந்திருக்கிறார். அதேபோல், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையிலும் டி.ஆர்.பாலு இருந்திருக்கிறார். மந்திரி சபை என்பது எங்களுக்கு முக்கியம் கிடையாது. எங்களைப் பொறுத்தவரை இந்திய நன்றாக இருக்க வேண்டும், இந்தியா வலுப்பெற வேண்டும், சிறந்த ஆட்சி கொடுக்க. அதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் தலைவருடைய குறிக்கோள். அந்த குறிக்கோளுக்கு பின்னாடி எங்களுடைய இந்தியா கூட்டணியினுடைய 40 வேட்பாளர்களும் பின் தொடர்ந்து செல்வார்கள் என்று உறுதியாக கூறுகிறேன்”.

அ.தி.மு.க என்றால் கொங்கு மண்டலம் தான். கொங்கு மண்டலம் என்றால் அ.தி.மு.க தான், என்ற அந்த நம்பிக்கையில் தான் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்று சொல்கிறார்களே?

“அந்த நம்பிக்கை எல்லாம் உள்ளாட்சி தேர்தலிலே உடைந்து விட்டது. உள்ளாட்சி தேர்தலில், அவர்கள் எந்த ஒரு மாநகராட்சியும் பிடிக்கவில்லை, எந்த ஒரு நகராட்சியும் பிடிக்கவில்லை. எல்லாமே தி.மு.க. பிடித்து விட்டது. அதுதான் அவர்களுக்கு முதல் அடி. இனிமேல் அடிமேல் அடி விழும். இனி, அதிமுகவுக்கு மேற்கு மண்டலமோ, கொங்கு மண்டலமோ அவர்களது கோட்டை கிடையாது. இந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தி.மு.க.வின் கோட்டையாக மாறப்போகிறது. ஏழு நாடாளுமன்ற தொகுதி இருக்கிறது. இந்த ஏழு நாடாளுமன்ற தொகுதியிலும் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும், நோட்டாவும் யார் முன்னாடி வருவார்கள் என்று போட்டி போடுவார்கள். இந்த ஏழு தொகுதிகளிலும் தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெறும். கடந்த உள்ளாட்சித் தேர்தலிலே அவர்கள் கோட்டை எல்லாம் உடைந்து விட்டது”.

இந்திய கூட்டணியில் திமுக டெபாசிட் கூட வாங்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“அவர் எடப்பாடியில் தூங்கி கொண்டே இருப்பார் போல. வெளியே வந்து பார்க்க சொல்லுங்கள். ஏனென்றால், அவர் கட்சியையே எடப்பாடியில் தான் நடத்துகிறார் என்று அவரது கட்சிகாரர்களே சொல்கிறார்கள்”.

370, 400 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி சொல்கிறாரே?

“மோடி தூக்கத்தில் உளறிக் கொண்டிருக்கிறார். உறுதியாக சொல்கிறேன் 400 தொகுதிக்கும் மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நூறு தொகுதிகளில் தான் பாஜக வெல்லும்”.

முதலமைச்சரும், அமைச்சர் உதயநிதியும் இத்தனை கூட்டங்களில் பேசியும் ஒரு கூட்டத்தில் கூட விவசாயிகளைப் பற்றி பேசவே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறாரே?

“அவர் ஒரு விவசாயியாக இருந்து கொண்டு, விவசாயிகளின் கஷ்டம் தெரியாமல் இருக்கிறாரே. எத்தனையோ பிரச்சினைகள் இருந்திருக்கிறது. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்டை நாம் உருவாக்கினோம். ஆனால் அவர்கள் பத்தாண்டு கால கட்சியில் அதை செய்ய முடியவில்லை. அவர் ஒரு போலி விவசாயி என்று தான் சொல்வேன். மக்களுடைய உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். அதனால், எங்களுடையது விவசாயிகளை காப்பாற்றக்கூடிய அரசு”.

தி.மு.க மீண்டும் வந்துவிட்டால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று எடப்பாடி கூறுகிறாரே?

“காமெடியாக இருக்கிறது. கடந்த 1996 ஆம் ஆண்டிலேயே நாங்கள் சொல்லிவிட்டோம். திருப்பி அந்த டயலாக்கை அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அன்றைக்கு இருந்த அ.தி.மு.க வேறு. அது எம்ஜிஆருடைய அ.தி.மு.க, ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆனால், இன்றைக்கு இருப்பது வியாபார அ.தி.மு.க. அதை உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் புரிந்து  விட்டார்கள்” என்று கூறினார்.

Next Story

“அதில்தான் அ.தி.மு.க.வும், பா.ஜ.கவும் வெற்றி பெறுவார்கள்” - ஈரோடு திமுக வேட்பாளர் பிரகாஷ்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Dmk candidate prakash interview at lok sabha election in erode

நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கட்சி சார்பாக தி.மு.க. வேட்பாளராக பிரகாஷ் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரை பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு பிரகாஷ் அளித்த பேட்டி பின்வருமாறு...

ஈரோடு மக்களவைத் தொகுதி பிரிக்கப்பட்ட பிறகு, நேரடியாக திமுக வேட்பாளராக அறிமுகமாவது நீங்கள் தான். அதை எப்படி பார்க்கிறீர்கள்?

“எங்கள் கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்களை கூட எங்கள் வேட்பாளராகத்தான் நாங்கள் பார்க்கிறோம். இதுவரைக்கும் அவர்களை மாற்று வேட்பாளராக நாங்கள் பார்க்கவில்லை. அதனால், நான் தான் முதல் வேட்பாளர் என்று நான் பார்க்கவில்லை. திமுக கூட்டணியில் இருக்கிற வேட்பாளர்கள் யார் நின்றாலும் அது தி.மு.க. வேட்பாளராகத்தான் நாங்கள் பார்க்கிறோம்”.

உங்களைப் பற்றி விசாரித்ததில், நீங்கள் எம்.எல்.ஏ சீட்டு கேட்டதாகவும், அதற்கு பதில் தேசிய அளவில் எம்.பி சீட்டு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறதே?

“எங்கள் தலைவர் எனக்கு ஒரு பொறுப்பு கொடுத்திருக்கிறார். அந்த பொறுப்பை நான் சிறப்பாக செய்வேன் என்று வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்திற்கு நான் வாய்ப்பு கேட்டேன். ஆனால் அதற்கு முன்பு பாராளுமன்றத்திற்கு தான் வாய்ப்பு கேட்டேன். 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு கேட்டேன். அதே போல் 2019 பாராளுமன்ற தேர்தலுக்கும் கேட்டேன். அதன் பின்பு, மூன்று முறை சட்டமன்ற தேர்தலுக்கு வாய்ப்பு கேட்டேன். சட்டமன்றத்தில் எப்படி முதல்வர் கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்தினோமா அதே போல் பாராளுமன்றத்தில் எங்கள் கூட்டணியில் ஆட்சி அமைக்கும் கட்சியினுடைய திட்டத்திற்கு எங்களுடைய தலைவர் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு அந்த திட்டத்தை இங்கு கொண்டு சேர்ப்பதில் நான் முக்கிய பங்களிப்பேன்”.

தேசிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் மாநில அரசுக்கு துரோகம் தான் செய்கிறது. அதனால் 40 தொகுதிகளிலும் மக்களின் ஆதரவுடன் அதிமுக தான் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அதேபோல் மீண்டும் மோடி தான் பிரதமராக வருவார் என்று பாஜகவினர் சொல்கிறார்கள் இதை தகர்த்து நீங்கள் எப்படி ஆட்சியை பிடிப்பீர்கள்?

“நாம் அனைவரும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோம். வெளி மாநிலத்தில் இருந்தால் கூட ஒருவேளை சந்தேகம் வரலாம். தமிழ்நாட்டினுடைய சூழ்நிலை அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் யார் இரண்டாவது இடத்தை பிடிப்பார்கள் என்ற போட்டிதான் அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இருக்கிறது. அதில் தான் அவர்கள் வெற்றி பெற முடியும் என்பதே தவிர ஒரு போதும் முதலிடத்தில் அவர்கள் வெற்றி பெற முடியாது

40 தொகுதிகளிலும் எங்கள் தலைவரின் சாதனை திட்டங்கள் தான் முதலிடத்தில் இருக்கிறது. எங்கள் தலைவர் சொன்னால், அதை நாட்டு மக்கள் ஆணித்தரமாக நம்புவார்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கை என்பது எப்போதுமே தேர்தலில் ஒரு கதாநாயகன் போல தான். ஏனென்றால், அவர்கள் சொன்னால் அதை செய்வார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். அதனால் 40 தொகுதிகளிலும் முகமாக தெரிவது மு.க.ஸ்டாலின் மட்டும்தான்”.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் வலுவான வேட்பாளரை நாங்கள் நிறுத்தியிருக்கிறோம். அதனால் நாங்கள் தான் இந்த தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று அ.தி.மு.க.வினர் கூறுகிறார்களே?

“அவரை நாங்கள் அ.தி.மு.க வேட்பாளராகவே நாங்கள் பார்க்கவில்லை. பா.ஜ.க வேட்பாளராக தான் பார்க்கிறோம். ஏனென்றால், அவரது விளம்பரங்கள் அனைத்தும் பா.ஜ.க.வை சார்ந்ததாக தான் இருக்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பா.ஜ.க.வில் தான் இருக்கிறார்கள். அதனால் அவரை அ.தி.மு.க வேட்பாளராக நாங்கள் பார்க்கவில்லை. அவரை அவரது கட்சி நிர்வாகிகள் கூட அப்படிப் பார்க்கவில்லை. அதுதான் உண்மை”.

தி.மு.க மீது வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் வைத்து வருகிறது. அதைத் தாண்டி மக்களிடத்தில் உங்கள் கட்சி கொள்கைகள் அனைத்தையும் எப்படி எடுத்துச் செல்வீர்கள்?

“எங்களது வாரிசு அரசியல் தான். எனது அப்பா 50 ஆண்டுகளாக தி.மு.கவின் கிளை செயலாளர் தான் இருந்தார். ஒரு கிளைச் செயலாளர் மகனுக்குத்தான் இந்த சீட்டை கொடுத்திருக்கிறார்கள். ஏனென்றால் உழைத்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். இந்த கட்சியில் உறுப்பினராகி 34 வருடமாக இந்த கட்சியில் பணியாற்றி வருகிறேன். உழைப்பில் தான் நாங்கள் வாரிசுகளே தவிர போலியான வாரிசுகள் எல்லாம் கிடையாது. அதனால், நாங்கள் உழைப்பின் வாரிசு”.

இந்த தொகுதியில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீர் குடிநீரில் கலந்து மாசுபடுகிறது. இது பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது. அதற்கு தீர்வு என்ன?

“2019 ஆம் ஆண்டில் கலைஞரின் ஆட்சியில் சாயக்கழிவு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரூ.750 கோடி மதிப்பீட்டில் கழிவு நீரை கடலுக்கு கலக்கும் திட்டத்தை அறிவித்தார். அப்போது மத்தியில் நமது கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஒரு குறிப்பிட்ட சதவீதம் அளவில் மாநில அரசும், ஒன்றிய அரசும் நிதி ஒதுக்கி இந்த செயல் திட்டம் உருவானது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் வந்தது. இதை அ.தி.மு.கவின் ஆட்சியில் அதை கிடப்பில் போட்டு விட்டார்கள். மத்தியில் மோடி வந்த பிறகும் அதை கிடப்பில் போட்டு விட்டார். இப்போது எங்களுடைய தேர்தல் அறிக்கையில் எங்கள் குழுவிற்கு நான் மூன்று திட்டத்தை தான் சொன்னேன். ஒன்று பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். அதே போல், அகில இந்திய அளவில் கேன்சர் இன்ஸ்டியூட் வேண்டும் என்றும், அதற்குண்டான சிகிச்சை மையம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தேர்தல் அறிக்கையில் சேர்த்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

பேட்டி தொடரும்...