Skip to main content

68 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த சந்திப்பு; முன்னாள் ஐ.ஏ.எஸ்ஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி 

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

After 68 years,  retired IAS visited his 93-year-old teacher and fell at his feet

 

68 ஆண்டுகளுக்கு முன்பு தான் படித்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரையும் 3 ம் வகுப்பு ஆசிரியையும் தேடிச் சென்று காலில் விழுந்து வணங்க ஆசைப்பட்டு தேடிச் சென்ற போது 93 வயதில் இருந்த தலைமை ஆசிரியரைப் பார்த்து மகிழ்ந்தவர், ஆசிரியை உயிருடன் இல்லாமல் படமாக இருப்பதைப் பார்த்து கண்கலங்கிய பழைய மாணவர் அபுல்ஹசன் ஐஏஎஸ் (ஓய்வு) க்கு வயது 78. இந்த சம்பவம் ஆசிரியர் - மாணவர் நல்லுறவை காட்டும் நெகிழ்ச்சி சம்பவமாக அமைந்துள்ளது.

 

தனக்கு பள்ளி பாடம் மட்டுமின்றி வாழ்க்கை பாடம் புகட்டி தன் உயர்வுக்கும், உயர் பதவிக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை காண நினைக்கும் போதெல்லாம் பணிச்சுமையும், பல்வேறு காரணங்களும் தடுத்துக்கொண்டே இருந்தது. இந்த தடைகள் ஓராண்டு, ஈராண்டு இல்லை. 5, 10, 20 ஆண்டுகளும் இல்லை 68 ஆண்டுகள்.. ஆனாலும் எப்படியும் ஒரு நாள் என் ஆசிரியர்களை நேரில் பார்த்துவிட வேண்டும், பார்த்துவிடுவேன் என்ற வைராக்கியம் தான் 68 ஆண்டுகளுக்கு பிறகு 93 வயது ஆசிரியரை 78 வயது மாணவர் நேரில் பார்த்து மகிழ்ந்தது.

 

68 ஆண்டுகளுக்கு பிறகு தனது தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தேடிச் சென்ற மாணவரான அபுல்ஹசன் (78) ஐஏஎஸ் (ஓய்வு) நம்மிடம், “ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் எங்க ஊர். அப்பா காங்கிரஸ்காரர் ஊ.ம.தலைவராகவும் இருந்தார். அப்ப தான் எங்க ஊர் தொடக்கப் பள்ளிக் கூடத்துக்கு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதபுதூர் கிராமத்தைச் சேர்ந்த சேவுகபாண்டியன் அய்யா தலைமை ஆசிரியராக இருந்தார். எங்க பக்கத்து ஊர் முத்துப்பேட்டையை சேர்ந்த மனோரஞ்சிதம் 3 ம் வகுப்பு டீச்சர். இவங்க ரெண்டு பேரும் வெவ்வேறு சாதி. ஆனால் அப்பவே "சாதி மறுப்பு திருமணம்" செய்துகிட்டாங்க. நான் ரெண்டு பேருகிட்டயும் படிச்சேன். ரொம்ப அன்பா இருப்பாங்க அதனால இவங்களை எனக்கு ரொம்ப புடிக்கும். எல்லாரும் நல்லா படிச்சு பெரிய ஆளா வரனும்னு அடிக்கடி சொல்வாங்க. அவங்களோட அறிவுரைகள் என் கண்முன்னே நிற்கும். 

 

After 68 years,  retired IAS visited his 93-year-old teacher and fell at his feet

 

தொடக்கப்பள்ளி படிப்பை முடிச்ச பிறகு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்புகளை முடித்து கல்லூரி முடித்து தேர்வெழுதி ஐஏஎஸ் ஆகிட்டேன். கோவை மாவட்ட ஆட்சியர், பல துறைகளிலும் இயக்குநர், செயலாளர் என உயர்ந்த பதவிகளில் இருந்துட்டேன். அதன் பிறகு எப்போதாவது சொந்த ஊருக்கு போவேன் அப்பவெல்லாம் எங்க ஆசிரியர்களை பார்க்க ஞாபகம் வரும் ஆனால் எங்கிருக்காங்கன்னு தெரியாது. கொஞ்ச வருசம் முன்னால தலைமை ஆசிரியர் சார்கிட்ட பேசிட்டேன். ஆனால் நேரில் பார்க்க முடியவில்லை. எப்படியாவது அவங்களை தேடிப் போய் பார்த்து உங்கள் அறிவுரையால கலெக்டராகி இப்ப ஓய்வும் பெற்று பல ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாக்கும் இடத்தில் இருந்து அறிவுரை சொல்றேன்னு சொல்லி அவங்க கால்ல விழுந்து வணங்கனும் என்று தினமும் நினைப்பேன்.

 

இந்த நிலையில தான் சில மாதங்களுக்கு முன்னால விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தொல்லியல் ஆர்வலர் சிவக்குமார் நாங்கள் நடத்தும் ஐஏஎஸ் பயிற்சி மையம் பற்றி அறிந்து என்னை பார்க்க சென்னை வந்தார். அப்ப அவரிடம் எங்கள் ஆசிரியர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அதுக்கு பிறகு ஒரு திருமண நிகழ்வுக்காக ராஜபாளையம் வந்தப்ப தான் அருகில் தான் உங்கள் தலைமை ஆசிரியரின் சொக்கநாதபுதூர் என்று சொன்னார். இதை கேட்டதும் ரொம்பவே மகிழ்ந்துட்டேன். 68 வருசத்துக்கு முன்னால 5 ஆம் வகுப்பு படிச்ச மாணவன் போல மனசு பறந்தது. எங்க சாரைப் பார்க்கப் போறோம்னு அவ்வளவு மகிழ்ச்சி. சொக்கநாதபுதூர் போய் சார் பெயரைச் சொன்னதும் திமுக தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்தாரே ‘அன்பகம்’ சேவுகபாண்டியன் சார் வீடானு கேட்டு வீட்டுக்கே அழைத்துப் போனாங்க.

 

திராவிட கொள்கை பற்றாளராக இருந்ததால அப்பவே ஜாதி மறுப்பு திருமணம் செய்த எங்க சார், பணி ஓய்வுக்கு பிறகு முழுநேர திமுக பேச்சாளராக மேடைகளில் முழங்கி இருக்கிறார். அவரைப் பற்றி தெரியாத யாரும் இல்லை. அவங்க வீட்டிற்கு சென்றதும் முதலில் சாரோட மகள் வரவேற்றாங்க.. உள்ளே போனதும் எங்க 3 ஆம் வகுப்பு டீச்சர் மனோரஞ்சிதம் படத்துக்கு மாலை போட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகிட்டேன். கலங்கிப்போய் அவங்களுக்கு அஞ்சலி செலுத்திட்டு உங்களை உயிரோட பார்க்க வந்தேன் இப்படி படத்தில் பார்க்கிறேனேனு கலங்கிட்டேன்.

 

After 68 years,  retired IAS visited his 93-year-old teacher and fell at his feet

 

அங்கே அமர்ந்திருந்த எங்க சார் கிட்ட அவங்க மகள் போய் உங்ககிட்ட படிச்சு கலெக்டரா இருந்தவர் வந்திருக்கார் உங்களை பார்க்க என்று சொல்ல ஏதும் பேச முடியாமல் கண்கலங்கிட்டார். என் பேரு என்ன சார் சொல்லுங்கன்னு நான் கேட்டா நான் கலெக்டரா உயர்ந்த பதவியில இருந்ததால பேர சொல்லக்கூடாதுனு சொல்ல கடைசிவரை சொல்லல.. உங்க வயசு என்ன சார்னு கேட்டேன் 90க்கு மேலன்னார். அவருக்கு 93 வயதாகுதாம். ரொம்ப நேரம் அவர் உடல் நலம் விசாரிச்சுட்டு எங்க சார் காலில் விழுந்து வணங்கிய பிறகு என் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு தம்பி. ஒரே வருத்தம் எங்க டீச்சரை உயிரோட பார்க்க முடியலங்கிறது தான். என்னை பார்த்ததில் எங்க சாருக்கும் மகிழ்ச்சி என்று சொன்னார். 68 வருசம் கழிச்சு ஒரு மாணவன் என்னைப் பார்க்க வருவான் என்று நினைக்கவில்லை. வந்ததில் பெரும் மகிழ்ச்சி” என்றார் எங்க சார்.

 

“ஒவ்வொருத்தரும் தங்களோட தொடக்க காலத்தில் வழிகாட்டிய ஆசிரியர்களை எப்பவுமே நினைத்துப் பார்க்கனும். இப்ப உள்ள ஆசிரியர் - மாணவர் உறவுகள் விரும்பத்தகாததது போல உள்ளது. ஆசிரியர்களை மதிக்க கத்துக்கனும்” என்றார். 60 ஆண்டுகளுக்கு முன்பே சாதி மறுப்பு திருமணம் செய்து, தனது ஆசிரியர் பணி ஓய்வுக்கு பிறகு திராவிடர் கொள்கை பிடிப்போடு கட்சிக்காக மேடைகள் பல ஏறி உழைத்து 93 வயதிலும் அதே துடிப்போடு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஓய்வு தலைமை ஆசிரியர் சேவுகபாண்டியனை இன்றைய இளைஞர்கள் முன்னுதாரணமாக ஏற்க வேண்டும். திமுக தலைமை அவரது உழைப்பை கௌரவப்படுத்த வேண்டும் என்ற ஆசையும் உள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

 

 

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.