Skip to main content

சனாதனத்தின் வெளிப்பாடு தான்; இதை நியாயப்படுத்த முடியாது - வழக்கறிஞர் பாலு ஆவேசம்

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

 Advocate V Balu  interview

 

தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து விமர்சித்து  எழுதிய தினமலர் பத்திரிகை குறித்து தன்னுடைய கருத்துக்களை விரிவாக எடுத்துரைக்கிறார் வழக்கறிஞர் பாலு 

 

தினமலர் வெளியிட்ட செய்தியைப் பார்த்த பிறகு ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரே குரலில் பேசுவதைப் பார்க்க முடிகிறது. இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். கொழுப்பு அதிகமாக இருந்தால் தான் இப்படி எழுதத் தோன்றும். இதுபோன்ற பேச்சுக்களும் எழுத்துக்களும் சமீபகாலத்தில் அதிகம் வெளிவருகின்றன. பசியால் குழந்தைகள் பள்ளிக்கு வராமல் இருப்பதைத் தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே தமிழ்நாட்டு தலைவர்கள் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி விரிவுபடுத்தினர். தமிழ்நாடு இவ்வளவு முன்னேறியிருப்பதற்கு படிப்புதான் காரணம். 

காமராஜரை தமிழ்நாடு இன்றும் நன்றியோடு பார்க்கிறது. அடுத்து வந்த தலைவர்களும் சத்துணவு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்தனர். அப்படிப்பட்ட திட்டத்தின் நவீன வடிவமாக இருக்கும் காலை உணவுத் திட்டம் பற்றி திமிருடன் கொச்சையாக எழுதியுள்ளது தினமலர். ஒவ்வொரு மதத்திற்கும் தனியாக உணவு உண்ணும் முறை என்கிற ஒன்று இருக்கிறது. நாங்கள் வெங்காயமும் பூண்டும் சாப்பிட மாட்டோம் என்று கூறினார் நிர்மலா சீதாராமன். இலவசங்கள் வழங்குவதை தவறாகப் பேசிய மோடியும் பாஜகவும், இப்போது தங்களுடைய மாநிலங்களில் இலவசங்களை அறிவித்து வருகின்றனர். 

 

உண்ணும் உணவைப் பற்றி யாராவது கொச்சைப்படுத்தி எழுதுவார்களா? காமராஜர் சத்துணவு போட்டபோது யாரும் கழிவறைக்கு செல்லவில்லையா? மானம் ரோஷம் உள்ள அனைத்து தமிழர்களும் தினமலரின் செயலை எதிர்ப்பார்கள். குழந்தைகள் உணவு உண்பதை கொச்சைப்படுத்தும் இவர்கள் மிகவும் கேவலமானவர்கள். இப்போது மக்கள் பண்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள். முன்பு போல் இருந்திருந்தால் இவர்கள் தெருவில் நடமாட முடியாது. இதை எழுதியவர் பிராமணர் அல்ல என்று சொல்லி சமாளிப்பது இன்னும் கேவலமான விஷயம்.

 

யார் எழுதியிருந்தாலும் சரியான முறையில் எடிட் செய்ய வேண்டியது பத்திரிகை முதலாளியின் கடமை. இதை நியாயப்படுத்தும் விஷப்பூச்சிகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். சாப்பாட்டைப் பற்றி எழுதாத எழுத்தாளர்களே கிடையாது. இதுபோன்று எழுதும் மனிதாபிமானமற்ற மனிதர்கள் மீது துப்புவதற்காக நம்முடைய எச்சிலைக் கூட நாம் வீணடிக்கக் கூடாது. இந்த கும்பலை அனைத்து வகைகளிலும் நாம் புறந்தள்ள வேண்டும். இவர்கள் விற்கும் பொருட்களை நாம் வாங்கக்கூடாது. புறக்கணிப்பு தான் இவர்களுக்கு நாம் கொடுக்கும் சரியான பதிலாக இருக்கும்.

 

கீழே உள்ள லிங்கில் பேட்டியை முழுமையாகக் காணலாம்...

 


 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்